என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அனுமனின் உருமாறும் திறன்
    X

    அனுமனின் உருமாறும் திறன்

    • ராவணனின் மாளிகையில் சீதையைத் தேடும்கால் பூனை வடிவினில் தனது உருவினை மாற்றிக் கொள்கிறார்.
    • ஒரு பெரிய மலை போல் தன் உருவினை மாற்றித் தனது திறனை சீதைக்கு காட்டுகிறார்.

    ராமயணத்தில் பல இடங்களில் அனுமன் தனது உருவினை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவராக சொல்லப்படுகிறது.

    ராவணனின் மாளிகையில் சீதையைத் தேடும்கால் பூனை வடிவினில் தனது உருவினை மாற்றிக் கொள்கிறார்.

    பின்னர், சீதையைக் கண்ட பின், ஒரு பெரிய மலை போல் தன் உருவினை மாற்றித் தனது திறனை சீதைக்கு காட்டுகிறார்.

    இது போன்று உருவினை மாற்றிக் கொள்ளும் சித்திகளை அனுமன் தனது இளமைப் பிராயத்தில் சூரியக் கடவுளிடம் இருந்து பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

    5 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்

    நாமக்கல் அரங்கநாதர் (பெருமாள்) திருவடியும், நாமக்கல் ஆஞ்சநேயர் சிரசும் ஒரே நேர்கோட்டில் உள்ளது.

    அமாவாசை நாட்களில் பக்தர்கள் கொண்டு வரும் பால் மற்றும் தயிரை கொண்டு ஆஞ்சநேயருக்கு அபிசேகம் செய்யப்படும்.

    கிட்டத்தட்ட 5 ஆயிரம் லிட்டர் பால் வரை அபிஷேகம் செய்யப்படும்.

    ஆஞ்சநேயருக்கு பிரசாதமாக புளி சாதம், தயிர்ச சாதம், சர்க்கரை பொங்கல் ஆகியவை படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்டும்.

    Next Story
    ×