புகழ்பெற்ற ஆஞ்சநேய ஸ்தலங்கள்

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் உயரமான ஆஞ்சநேயர் சிலை உள்ளது.பீகார் மாநிலம் பாட்னாவிலும், குஜராத் மாநிலம் சாரன்பூரிலும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளது.
புகழ்பெற்ற ஆஞ்சநேய ஸ்தலங்கள்
Published on

பஞ்சமுக ஆஞ்சநேயர்

சேலம் உடையாப்பட்டியில் உள்ள கந்தாஸ்ரமத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் உள்ளார்.

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் உயரமான ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் சனியை பார்த்தவாறு லிங்கத்தை கையில் வைத்தவாறு ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

பாதாள ஆஞ்சநேயர்

பீகார் மாநிலம் பாட்னாவிலும், குஜராத் மாநிலம் சாரன்பூரிலும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் தபதி நதிக்கரையில் பாதாள ஆஞ்சநேயர் உள்ளார். பள்ளத்தில் இறங்கி சென்று தான் ஆஞ்சநேயரை தரிசிக்க முடியும்.

விஜயவாடாவில் நரசிம்மர் மற்றும்ஆஞ்சநேயர்

ஆந்திர மாநிலம் விஜயவாடா பஸ் நிலையத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் மங்களபுரி என்ற ஊர் உள்ளது.

இங்கு மலை மேல் நரசிம்மர் கோவில் உள்ளது. நரசிம்மருக்கு நேர் எதிரே ஆஞ்சநேயர் உள்ளார்.

நரசிம்மருக்கு வாயில் பானகம் ஊற்றினால் அந்த பானகம் கீழே வந்து அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.

தங்க ஆஞ்சநேயர்

பெங்களூர் லட்சுமி லே அவுட் பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் கோபுரம் தங்கத் தகடுகளால் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆஞ்ச நேயருக்கு கிரேனில் ஏறி தான் பூசாரி அபிஷேகம் செய்வார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com