என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

தன் நெஞ்சை பிளந்து ராமன் சீதையை காட்டிய அனுமன்
- ஏனெனில் இராமர் சீதையை விட அவருக்கு உயர்வானது வேறொன்றுமில்லை.
- மார்பினைத் திறந்து அதில், தன் இதயத்தில் ராமர் சீதை வீற்றிருப்பதைக் காட்டுகிறார்.
ராவண வதம் முடித்து ராமன் முதலானோர் அயோத்தி திரும்பி ராமன் முடி சூட்டிய பின், தனக்கு உதவி செய்தவர்களுக்கு தக்க பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது இராமன் அருகே யாதொரு பரிசினையும் எதிர்பாராத அனுமன் வர,
இராமன் அனுமனை ஆரத் தழுவிக்கொண்டு, அனுமன் செய்த உதவிகளுக்கெல்லாம் எப்பரிசினாலும் ஈடுகட்ட முடியாது எனப் புகழ்கிறார்.
அக்கணம் சீதையோ ஏதாவது ஒரு பரிசினை தங்கள் நினைவாக அனுமனுக்கு தர வேண்டுமன விழைந்து,
தன் கழுத்தில் அணிந்திருந்த இரத்திங்கள் பதித்த விலை உயர்ந்த மாலையைப் பரிசளிக்கிறார்.
அதை பெற்றுக்கொண்ட அனுமன், அந்த மாலையில் பதித்திருந்த இரத்தினங்களை வெளியே எடுத்து அதில் ராமர் சீதை தெரிகிறார்களா எனப் பார்க்கிறார்.
ஏனெனில் இராமர் சீதையை விட அவருக்கு உயர்வானது வேறொன்றுமில்லை.
இதை அறியாத ஒரு சிலர் அனுமனைப் பார்த்து நகைக்க,
அனுமனோ அனைவரும் அறியும் வண்ணம் தனது மார்பினைத் திறந்து அதில்,
தன் இதயத்தில் ராமர் சீதை வீற்றிருப்பதைக் காட்டுகிறார்.