search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல் காந்தி நடைபயணம்"

    • ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நாளையுடன் முடிவடைகிறது.
    • கார்கே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரை'யை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். இந்த யாத்திரை மராட்டியத்தில் நேற்று 4-வது நாளாக நடந்தது. பால்கர் மாவட்டத்தில் அவர் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி பொதுமக்களை சந்தித்தார். மேலும் ஆங்காங்கே அவர் மக்கள் மத்தியில் பேசினார்.

    ராகுல்காந்தியின் யாத்திரை இன்று (சனிக்கிழமை) தானே மாவட்டத்தில் நடைபெறுகிறது. அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் யாத்திரையை நிறைவு செய்கிறார்.

    பின்னர் அன்று மாலையில் மும்பை சிவாஜி பார்க்கில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்து உள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார்.

    இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்- சரத்சந்திர பவார் கட்சி தலைவர் சரத்பவார் கலந்துகொள்கிறார்கள்.

    மேலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி உள்ளிட்ட மற்ற கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க இருப்பதாக மராட்டிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் தெரிவித்தார்.

    இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார். மும்பை செல்லும் அவர் ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்த கொள்வதும், இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால், இந்த பொதுக்கூட்ட செலவு காங்கிரஸ் கட்சியின் செலவில் சேர்த்துக் கொள்ளப்படும் என விஜய் வடேடிவார் தெரிவித்துள்ளார்.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று நடை பயணம் மேற்கொள்கிறார்.
    • இன்று முதல் 6-ந்தேதி வரை மத்திய பிரதேசத்தில் நடை பயணம் மேற்கொள்கிறார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை பாரத் ஜோடோ நியாய யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    மணிப்பூர், அசாம், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் நடை பயணத்தை முடித்துள்ளார். அதேவேளையில் கடந்த ஐந்து நாட்கள் நடை பயணம் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்த நிலையில் ஐந்து நாட்கள் ஓய்விற்குப் பிறகு இன்று ராகுல் காந்தி நடை பயணத்தை மீண்டும் தொடங்குகிறார் என காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொது செயலாளர் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    மேலும், "ஐந்து நாட்களுக்குப் பிறகு ராகுல் காந்தி இன்று மதியம் 2 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் இருந்து நடை பயணத்தை தொடங்குகிறார். மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவிற்குள் மதியம் 3 மணியளவில் நாங்கள் நுழைவோம். மத்திய பிரதேச மாநிலத்தில் மார்ச் 6-ந்தேதி வரை நடை பயணம் தொடரும்.

    மார்ச் 5-ந்தேதி பிரசித்தி பெற்ற மஹாகாலேஷ்வர் கோவிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்ய இருக்கிறார். மார்ச் 7-ந்தேதி நடை பயணம் குஜராத் மாநிலத்திற்குள் நுழையும். நடை பயணத்தின்போது மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்" என்றார்.

    பா.ஜனதா ஆளும் அசாம் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ராகுல் காந்தி நடை பயணத்திற்கு இடையூறு அளிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது குற்றிப்பிடத்தக்கது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் பா.ஜனதா ஆளும் மாநிலங்களாகும்.

    • மணிப்பூர் முதல் மும்பை வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்.
    • இன்று மேற்கு வங்காளத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இன்று கொல்கத்தா மாநிலத்தில் அவரது நடைபயணம் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி மேற்கு வங்காள மாநிலத்தின் கதிஹார் என்ற இடத்தில் நடைபயணம் மேற்கொண்டு வந்தார். அப்போது ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வீச்சில் கார் கண்ணாடி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. லேசான தாக்குதல் சம்பவம் என்பதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.

    இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில் "கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தியிருக்கலாம். காவல்துறையினர் இந்த சம்பவத்தை புறக்கணித்துள்ளனர். போலீசாரின் புறக்கணிப்பால் ஏராளமான விசயங்கள் நடந்திருக்கலாம். இது சிறு சம்பவம்தான்" என்றார்.

    கொல்கத்தா மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வது குறித்து தன்னிடம் ஏதும் தெரிவிக்கவில்லை என மம்தா பானர்ஜி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். மக்களவை தேர்தலுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி விலகியுள்ளார்.

    இதனால் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வார்த்தை போரில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • அசாம் மாநில அரசு பல தடைகளை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
    • வருகிற 25-ந்தேதி வரை அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் நடைபாதை மேற்கொண்டு வருகிறார். அசாம் மாநிலத்தில் அவருடைய நடை பயணத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த நிலையில் இன்று நகோன் பகுதியில் நடைபயணம் மேற்கொள்வதற்காக, பிரத்யேக பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாஜனதா தொண்டர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம், மோடி, மோடி என முழக்கமிட்டனர்.

    உடனடியாக பேருந்தை நிறுத்துமாறு டிரைவரிடம் கேட்டுக்கொண்ட ராகுல் காந்தி, கீழே இறங்கி அவர்களை சந்தித்தார். அதன்பிறகு பேருந்தில் இருந்தபடியே அவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தார்.

    இது தொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி "அன்பிற்கான கடை எல்லோருக்காகவும் திறந்திருக்கும். இந்தியா ஒன்றுபடும், இந்துஸ்தான் வெல்லும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • ஜனவரி 14-ந்தேதி ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்குகிறார்.
    • மணிப்பூரில் இருந்து மகாராஷ்டிரா வரை 14 மாநிலங்கள் வழியாக நடை பயணம் மேற்கொள்கிறார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த மாதம் 27-ந்தேதி (டிசம்பர்) சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் இன்று நடைபயணத்திற்கான லோகோ மற்றும் முழக்கம் ஆகியவற்றை வெளியிட்டனர்.

    ராகுல் காந்தி கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி "பாரத் நயா யாத்ரா" என்ற பெயரில் நடைபயணத்தை வருகிற ஜனவரி 14-ந்தேதி முதல் மேற்கொள்கிறார். 14 மாநிலங்கள் வழியாக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    மணிப்பூர் தலைநகர் இம்பாலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் நூறாவது நாளை டிசம்பர் 16 அன்று ஜெய்ப்பூரில் கோலாகலமான நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
    • தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் அமைப்புகள் அனைத்தும் கோலாகலமாக கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இருக்கிற தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் நூறாவது நாளை டிசம்பர் 16 அன்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கோலாகலமான நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

    அதையொட்டி அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளான தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் அமைப்புகள் அனைத்தும் கோலாகலமாக கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வுகளின் ராகுல்காந்தியின் 100 நாள் இந்திய ஒற்றுமைப் பயணம் இந்திய அரசியலில் ஏற்படுத்தியிருக்கிற தாக்கத்தையும், அதன் சிறப்பம்சங்களையும் மக்களிடையே பரப்புகிற வகையிலும், இந்திய ஒற்றுமைப் பயணத்தின் மகத்தான வெற்றி குறித்தும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஓரணியில் திரண்டு மிகச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×