search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கான லோகோ, முழக்கம் வெளியீடு
    X

    ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கான லோகோ, முழக்கம் வெளியீடு

    • ஜனவரி 14-ந்தேதி ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்குகிறார்.
    • மணிப்பூரில் இருந்து மகாராஷ்டிரா வரை 14 மாநிலங்கள் வழியாக நடை பயணம் மேற்கொள்கிறார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த மாதம் 27-ந்தேதி (டிசம்பர்) சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் (பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் இன்று நடைபயணத்திற்கான லோகோ மற்றும் முழக்கம் ஆகியவற்றை வெளியிட்டனர்.

    ராகுல் காந்தி கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி "பாரத் நயா யாத்ரா" என்ற பெயரில் நடைபயணத்தை வருகிற ஜனவரி 14-ந்தேதி முதல் மேற்கொள்கிறார். 14 மாநிலங்கள் வழியாக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    மணிப்பூர் தலைநகர் இம்பாலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    Next Story
    ×