search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்னம்"

    • இந்தப் பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பாக்கப்படுகிறது.
    • இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி தியேட்டர்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார்.அவரது இயக்கத்தில் 3- வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார். இது விஷாலுக்கு 34- வது படமாகும்.

    இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் முதல் 'சிங்கிள்' கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.'டோன்ட் வோரி டா மச்சி' என்ற வரிகளுடன் இந்த பாடல் அமைந்தது. ரசிகர்களிடம் இந்த பாடல் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் 'செகண்ட் சிங்கிள்' நாளை வெளியிடப்படும் என தயாரிப்பு குழு அறிவித்து உள்ளது. இந்தப் பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பாக்கப்படுகிறது.

    இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி தியேட்டர்களில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரம்மாண்ட படைப்புகளாக இவை தயாராகி வருகின்றன.
    • பல படங்களுக்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

    ரசிகர்களால் டி.எஸ்.பி. என்று அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத். அதிரடி மற்றும் ஆத்மார்த்த இசையால் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே இவர் ஈர்த்து வருகிறார்.

    தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் உருவான 'புஷ்பா' திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ஒரே சமயத்தில் ஐந்து மொழிகளில் ஹிட் அடித்தது. இந்நிலையில், ஐந்து முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது இசையமைத்து வருகிறார்.

    அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி', சூர்யா நடிக்கும் 'கங்குவா', தனுஷ் நடிப்பில் உருவாகும் 'குபேரா', விஷால் நடிக்கும் 'ரத்னம்', மற்றும் 'புஷ்பா 2' என்று தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசை ஆதிக்கம் நீண்டு கொண்டே செல்கிறது.

     


    மேற்கண்ட ஐந்து திரைப்படங்களும் பிரபல இயக்குநர்கள், முன்னணி தயாரிப்பு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன. வித்தியாசமான கதைக் களங்களோடு பன்மொழிகளில் பிரம்மாண்ட படைப்புகளாக இவை தயாராகி வருகின்றன.

    இந்து ஐந்து படங்கள் தவிர பவன் கல்யாண் நடிப்பில் 'ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் 'உஸ்தாத் பகத்சிங்', நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'தாண்டேல்', புதுமுகங்கள் நடிக்கும் 'ஜூனியர்' உள்ளிட்ட மேலும் பல திரைப்படங்களுக்கும் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • விஷாலின் அடுத்த படமான "ரத்னம்" படத்தின் முதல் பாடல் அங்கு வெளியிடப்பட்டது.
    • நான் இதனை கடந்த 10 வருடங்களாக பின்பற்றி வருகிறேன். இதில் எனக்கு எதுவும் தப்பாக தெரியவில்லை.

    நடிகர் விஷால் நேற்று நடைபெற்ற வி.ஐ.டி வைப்ரன்ஸ் ஃபெஸ்ட் 2024 என்கிற கல்லூரி விழாவில் பங்கேற்றார்.

    விஷாலின் அடுத்த படமான "ரத்னம்" படத்தின் முதல் பாடல் அங்கு வெளியிடப்பட்டது.

    ரத்னம் படக்குழுவினர் இயக்குனர் ஹரி, சமூத்திரகனி, தேவி ஸ்ரீ ப்ரசாத் என அனைவரும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.அப்போது அக்கல்லூரி மாணவர் ஒருவர் விஷாலிடம் கேள்வி கேட்டார்.

    சமீபமாக, விஷால் சாப்பிடுவதற்கு முன்பு அவர் உணவிற்கு நன்றி கூறும் முறையை நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்போம்.

    அதைப்பார்த்து பலர் அவரைப் போலவே நடித்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸை பதிவிட்டிருந்தனர். அந்த வணங்கும் முறைக்கு பின் ஏதேனும் காரணம் இருக்கிறதா ? என்று கேட்டான்.

    அதற்கு பதிலளித்த விஷால், "நான் இதனை கடந்த 10 வருடங்களாக பின்பற்றி வருகிறேன். இதில் எனக்கு எதுவும் தப்பாக தெரியவில்லை. அனைத்து கடவுளும் எனக்கு ஒன்று தான். எனக்கு முதல் கடவுள் கேமராதான். அது தான் எனக்கு சாப்பாடு அளிக்கிறது. நான் இதை பப்லிசிட்டிகாகலாம் எதுவும் செய்யவில்லை" என்று கூறினார்.

    • சரியான ஒரு 'ஆக்ஷன்' படம் பண்ண வேண்டும் என்று நான் நினைத்து இருந்தேன்
    • விஷால் பெர்பாமென்ஸ் கண்கலங்க வைக்கிற மாதிரி இருந்தது



    நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார்.அவரது இயக்கத்தில் 3- வது முறையாக இதில் இணைந்து உள்ளார். தற்போது இது விஷாலுக்கு 34- வது படம் ஆகும்.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடைபெற்று வருகின்றன.படத்தின் முதல் 'சிங்கிள்' பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.'டோன்ட் வோரி டா மச்சி' என்ற வரிகளுடன் இந்தபாடல் அமைந்து உள்ளது.

    இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.கவிஞர் விவேகா இந்த பாடலை எழுதி உள்ளார்.'கார்த்தி கே.சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம், நடித்து உள்ளனர்.இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஹரி பேசியதாவது:-

    இந்த படத்தை பற்றி நான் சொல்வது என்றால் சரியான ஒரு 'ஆக்ஷன்' படம் பண்ண வேண்டும் என்று நான் நினைத்து இருந்தேன். ஏற்கனவே விஷாலுடன் 2 படம் பண்ணி இருந்தாலும் இது ஒரு சரியான படம். 'சாமி', 'சிங்கம்' படம் போன்று ஆக்சன் பட எனர்ஜி இந்த கதைக்குள் இருக்கிறது. ரொம்பவே நல்லா அமைந்து இருக்கிறது.

    விஷால் ரொம்பவே வேற லெவலில் ஆக்சன் பண்ணி இருக்கிறார். பெர்பாமென்ஸ் கண்கலங்க வைக்கிற மாதிரி இருந்தது. எனக்காக 20 நாட்களில் தாமிரபரணி விஷாலாக வந்து நின்றார். எல்லாமே ஆரம்பிச்ச மாதிரி இருந்தது.படத்தை முடித்து விட்டோம். இன்றைக்கு 'பர்ஸ்ட் சிங்கிள்' உங்கள் முன் வெளியிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் ஹரியுடன் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.
    • இன்று மாலை 7 மணிக்கு வி.ஐ.டி கல்லூரியில் நடக்கும் வைப்ரன்ஸ் 24 ஃபெஸ்டில் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

    மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் ஹரியுடன் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.

    ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது.

    இயக்குநர் ஹரி எப்பொழுதும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் கதை சொல்வதில் ஆற்றல் பெற்றவர். சிங்கம், சாமி, யானை போன்ற படங்களே இதற்கு சாட்சி.

    ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமூத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ ப்ரசாத் இசையமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டோன் பென்ச் ஃபில்ம்ஸ் மற்றும் zee ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

    இந்நிலையில் படத்தின் முதல் பாடலான "டோண்ட் வொரி டோண்ட் வொரி டா மச்சி" எனும் பாடல் வெளியாக உள்ளது.

    இன்று மாலை 7 மணிக்கு வி.ஐ.டி கல்லூரியில் நடக்கும் வைப்ரன்ஸ் 24 ஃபெஸ்டில் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

    • விஷால் ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றயுள்ளார்.
    • 2026- ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார் என தகவல் வெளியானது.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தனது 'மக்கள் நல இயக்கம்' மூலம் பல உதவிகளை செய்து வருகிறார். இதையடுத்து நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை இன்று காலை விஷால் அறிவிப்பார் என்றும் 2026- ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்றும் தகவல் பரவி வந்தது.

    இந்நிலையில், இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.


    என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், "இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு" என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

    அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் 'தேவி அறக்கட்டளை' மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.


    விஷால் அறிக்கை

    அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.

    நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, "நன்றி மறப்பது நன்றன்று" என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.

    தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்னம்’.
    • இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரத்னம்'. இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பாராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தோடு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை போன்ற இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.


    ரத்னம் போஸ்டர்

    இந்நிலையில், 'ரத்னம்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


    • நடிகர் விஷால் ‘ரத்னம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தினை இயக்குனர் ஹரி இயக்குகிறார்.

    இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ரத்னம்' திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பாராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தோடு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகுகிறது. இதையடுத்து 'ரத்னம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், 'ரத்னம்' படத்தின் புதிய அறிவிப்பை விஷால் வெளியிட்டுள்ளார். அதன்படி, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை போன்ற இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை விஷால் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் விஷால் 'ரத்னம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ரத்னம்' திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பாராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தோடு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் கோடையில் திரையரங்குகளில் வெளியாகுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நடிகர் விஷால், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி. உங்களின் மற்றொரு சாதனைக்கு வாழ்த்துகள். ஜெய் ஸ்ரீராம். ராமர் கோவில் இன்னும் பல ஆண்டுகள் நினைவுகூரப்படும். இந்த தருணத்திற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவருக்கும் தலைமுறை தலைமுறைகளாக இங்கு வந்து, அஞ்சலி செலுத்துவார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் பலர் கலந்து கொண்டுள்ளனர்.


    • கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
    • படம் அடுத்தாண்டு கோடையில் வெளியாகிறது.

    இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ரத்னம்' திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பாராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தோடு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் அடுத்தாண்டு கோடையில் வெளியாகிறது. இதையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'வாராய் ரத்னம்' நாளை காலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    • நடிகர் விஷால் 'ரத்னம்' திரைப்படத்தில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    செல்லமே படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால். அதன்பின்னர் சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். விஷால் நடித்த 'மார்க் ஆண்டனி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.


    இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ரத்னம்' திரைப்படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இளம் பெண்ணுடன் விஷால்

    இந்நிலையில், நடிகர் விஷால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு நியூயார் நகரத்தில் இளம்பெண் ஒருவருடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது ஒருவர் தங்களை வீடியோ எடுப்பதை பார்த்து பதறிப்போன விஷால் முகத்தை மறைத்துக்கொண்டு அந்த பெண் உடன் தலைதெறிக்க ஓடிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதைப்பார்த்த நெட்டிசன்கள் அந்தப் பெண் விஷாலின் காதலியா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் இது பட புரொமோஷன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • நடிகர் விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ரத்னம்'. இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ரத்னம் போஸ்டர்

    ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 'ரத்னம்' படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியாகி வைரலானது.


    ரத்னம் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆக்ரோஷத்துடன் விஷால் நிற்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'ரத்னம்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    ×