search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெஸ்சி"

    • கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்த டுவிட் தற்போது வைரலானது.
    • என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன் என தகவல்.

    கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றுள்ள நிலையில், உலக முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் உலக அளவில் புகழ் பெற்ற பயண ஆர்வலரான ஜோஸ் மிகுவல் போலன்கோ என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 21ந் தேதி தமது டுவிட்டர் பதிவில், 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் 18-ந் தேதி, 34 வயதான லியோ மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்று எல்லா காலத்திலும் சிறந்த வீரராக மாறுவார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய டுவிட்டை மீண்டும் பார்க்கவும் என்று பதிவிட்டிருந்தார். அவர் கணித்தபடி தற்போது அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பையை மெஸ்சி பெற்று தந்துள்ளதால், போலன்கோவின் டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


    இந்நிலையில் தமது கணிப்பு நிறைவேறிய பிறகு, போலன்கோ,  ஸ்பானிஷ் மொழியில் இன்று மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள்(மெஸ்சி) முதல் உலகக் கோப்பையில் நான் இருந்தேன், இப்போது உங்கள் கைகளால் வானத்தைத் தொட்ட உங்களின் கடைசி போட்டியிலும் என்னால் இருக்க முடிந்தது, லியோ. டியாகோ செய்தது போல். என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன், நன்றி அர்ஜென்டினா, நாங்கள் உலக சாம்பியன்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்சை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வீழ்த்தியது.
    • கோப்பை வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தனர்.

    சென்னை:

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று மோதின. ஆட்டநேர முடிவில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நீடித்ததால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது.

    அதன்பின், பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

    இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உறுதியாக மிகவும் சிறப்புடைய ஒரு போட்டி. பிரான்சு அணியின் ஒருபோதும் விடாத மனப்பான்மை மற்றும் எம்பாப்பேவின் ஹாட்ரிக் கோல் இந்த போட்டியை உலகக் கோப்பையின் சிறந்த இறுதிப் போட்டிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

    உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா மற்றும் G.O.A.T மெஸ்சிக்கு வாழ்த்துக்கள். மார்டினசுக்குச் சிறப்புப் பாராட்டுச் சொல்ல வேண்டும் என பதிவிட்டுளார்.

    • உலக கோப்பை இறுதி போட்டி தனது கடைசி சர்வதேச ஆட்டம் என்று குரோஷியாவை வீழ்த்திய பிறகு மெஸ்சி தெரிவித்தார்.
    • மரடோனா வழியில் மெஸ்சி நாட்டுக்காக உலக கோப்பையை பெற்று கொடுப்பாரா? என்ற ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

    உலகின் தலை சிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி கிளப் போட்டிகளில் பல கோப்பைகளை வென்று இருக்கிறார். அர்ஜென்டினா அணிக்காக உலக கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கம் 32 வயதான அவருக்கு நீண்ட காலமாக இருக்கிறது.

    2014-ல் இறுதிப்போட்டி வரை வந்து ஜெர்மனியிடம் தோற்று உலக கோப்பையை இழந்தார்.

    கடந்த ஆண்டு பிரேசிலை வீழ்த்தி கோபா அமெரிக்கா கோப்பையை வென்று அர்ஜென்டினாவுக்கு பெருமை சேர்த்தார். 28 ஆண்டு கனவை நனவாக்கினார். அதே போன்று மரடோனா வழியில் மெஸ்சி நாட்டுக்காக உலக கோப்பையை பெற்று கொடுப்பாரா? என்ற ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர். 36 ஆண்டுகால அர்ஜென்டினாவின் கனவை அவர் நிறைவேற்றுவாரா என்ற எதிர் பார்ப்பும் இருக்கிறது.

    உலக கோப்பை இறுதி போட்டி தனது கடைசி சர்வதேச ஆட்டம் என்று குரோஷியாவை வீழ்த்திய பிறகு மெஸ்சி தெரிவித்தார். இதனால் உலக கோப்பையுடன் அவர் வெளியேறுவாரா ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த உலக கோப்பையில் மெஸ்சியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருக்கிறது. தனது முழு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 5 கோல்கள் அடித்துள்ளார். 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்துள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் பந்தை கடத்தி செல்லும் விதம் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது.

    வீரர்களை ஏமாற்றி பந்தை கொண்டு செல்வதில் அவருக்கு நிகரான வீரர் யாரும் இல்லை என்பதை இந்த தொடரில் அவர் பல ஆட்டத்தில் நிரூபித்து காட்டியுள்ளார். குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-வது கோல் அடிக்க மெஸ்சி பந்தை கொண்டு சென்ற விதம் மிகவும் அபாரமாக இருந்தது.

    தேவைக்கு ஏற்ப வேகமாக ஓடுவது, பந்தை எதிர் அணி வீரர்களின் காலுக்கு இடையில் அடித்து கொண்டு செல்வது என்பது உள்பட பல்வேறு மேஜிக்கை வெளிப்படுத்தி வருகிறார்.

    உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்தார். அவர் 11 கோல்கள் அடித்துள்ளார். குரோஷியாவுக்கு எதிரான அரை இறுதியில் கோல் அடித்ததன் மூலம் அவர் பாடிஸ்டுடாவை (10 கோல்) முந்தினார்.

    உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மெஸ்சியின் கனவு நனவாகுமா? என்று அர்ஜென்டினா ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கிறார்கள்.

    • ஆறு போட்டிகளில் நான்கில் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்
    • அரையிறுதியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அசத்தினார்

    கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    நாளை நடைபெறும் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் குரோசியா- மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் சாம்பியனுக்காக பிரான்ஸ்- அர்ஜென்டினா அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த அணியின் கேப்டன் மெஸ்சிக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை. இதற்கு முன் 2014-ல் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

    இதனால் மெஸ்சிக்கு உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை என கருதப்பட்டது. ஆனால், அதன்பின் மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது சிறப்பான விளையாட்டால் தற்போது அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    குரோசியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். அதன்பின் அல்வாரெஸ் கோல் அடிக்க துணை புரிந்தார்.

    இந்த போட்டியின்போது மெஸ்சி தசைப்பிடிப்பால் அவதிப்பட்டாராம். 100 சதவீதம் உடற்தகுதியுடன் இல்லையாம். இருந்தாலும் விளையாடுகிறேன் என மெஸ்சி தன்னம்பிக்கையுடன் விளையாடினாராம்.

    தற்போது இடது காலில் தசைப்பிடிப்பு (hamstring) ஏற்பட்டதன் காரணமாக நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இதனால் அர்ஜென்டினா அணி மெஸ்சி காயத்தால் கவலையடைந்துள்ளது.

    ஒரு வேளை நாளைமறுதினம் பிரான்ஸ்க்கு எதிரான இறுதிப் போட்டியில் மெஸ்சி 100 சதவீத உடற்குதியுடன் விளையாடவில்லை என்றால், அது அர்ஜென்டினாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.

    டி மரியா அரையிறுதியில் காயம் காரணமாக விளையாடவில்லை. தற்போது அவர் உடற்தகுதி பெற்று விட்டதால் இறுதிப் போட்டியில விளையாட வாய்ப்புள்ளது.

    இந்த உலகக் கோப்பையில் மெஸ்சி 5 கோல் அடித்துள்ளார். 3 கோல் அடிக்க துணை புரிந்துள்ளார். அவருடன் எம்பாப்வேவும் 5 கோல் அடித்துள்ளார். இருவரும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

    • உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார்.
    • அவருக்கு அடுத்தபடியாக மரடோனா, மெஸ்சி உள்ளனர்.

    கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவர் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார். மரடோனாவின் இந்த சாதனையை லியோனஸ் மெஸ்சி சமன் செய்தார்.

    கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் உலகின் முன்னணி வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான மெஸ்சி மெக்சிகோவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். ஏற்கனவே சவுதி அரேபியாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பையில் 8 கோல்களை (21 ஆட்டம்) அவர் தொட்டார்.

    மரடோனா கடந்த 2020 ஆண்டு நவம்பர் 25-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது 2-வது ஆண்டு நினைவு தினத்துக்கு மறுநாளில் மெஸ்சி இந்த சாதனையை சமன் செய்தார். உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மரடோனா, மெஸ்சி உள்ளனர்.

    • நாஜி நவுஷி என்ற பெண்மணிக்கு 33 வயதாகும். இவர், 5 குழந்தைகளின் தாய்.
    • மெஸ்சியின் ஆட்டத்தை நேரில் பார்க்க கேரளாவில் இருந்து கத்தாருக்கு பயணித்த 5 குழந்தைகளின் தாய்

    தோஹா:

    உலகக் கோப்பை போட்டி காரணமாக உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களை கால்பந்து ஜூரம் பற்றிக்கொண்டுள்ளது. நம் நாட்டிலும் கால்பந்து மோகம் அதிகமுள்ள மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் இதன் பரபரப்பு பரவியிருக்கிறது. இந்நிலையில், கேரளாவில் இருந்து கத்தாருக்கு காரில் தனியாக பயணம் மேற்கொண்டுள்ளார். நாஜி நவுஷி என்ற பெண்மணி. 33 வயதாகும் இவர், 5 குழந்தைகளின் தாய்.

    அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்சியின் அதிதீவிர ரசிகை. களத்தில் தனது அபிமான ஹீரோவின் சாகசத்தை கண்ணாரக் கண்டு ரசிக்க வேண்டும் என்பதே நவுஷியின் கார் பயணத்தின் நோக்கம். மலையாள தேசத்தில் இருந்து 'மணல் தேசத்துக்கு' தனது பயணத்தை கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கினார் நவுஷி. அவரது கார், மும்பையில் இருந்து ஓமன் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக கத்தாருக்கு நவுஷி தானே தனியாக காரை ஓட்டிச்சென்றார்.


    இவரின் நாயகரின் அணியான அர்ஜென்டினா, சவுதி அரேபியாவுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதில் அனேக அர்ஜென்டினா ரசிகர்களைப் போல நவுஷிக்கும் வருத்தம்தான். ஆனால், 'உலக கோப்பையை வெல்லும் அர்ஜென்டினாவின் பயணத்தில் இது ஒரு சிறு பின்னடைவுதான். எனது ஹீரோ மெஸ்சி ஆடுவதை நேரில் காணப்போகிறேன் என்பதே என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது' என்கிறார் இவர் உற்சாகப் படபடப்புடன்.

    நவுஷியின் மனம் கவர்ந்த முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா, கட்டாய வெற்றி நெருக்கடியில் நேற்று நள்ளிரவு மெக்சிகோவை சந்தித்து வெற்றி பெற்றது. நவுஷியின் கார் ஒரு நகரும் வீடாகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இதன் மேற்புறத்தில் கூடார வசதியும், காருக்குள் மினி சமையல்கூடமும் அமைக்கப்பட்டுள்ளன. அரிசி, கோதுமை மாவு, மசாலாக்கள் போன்ற சமையல் பொருட்களையும் போதுமான அளவு 'ஸ்டாக்' வைத்திருக்கிறார். தனக்குத் தேவையான உணவுகளை தானே சமைத்துக்கொள்கிறார்.

    நாஜி நவுஷி தனது காருக்கு 'ஊலு' என்று செல்லப்பெயர் சூட்டியிருக்கிறார். இந்த மலையாள வழக்குமொழிச் சொல்லுக்கு 'அவள்' என்று பொருள். கால்பந்து காதலி நவுஷியை சுமந்துகொண்டு பாலைவன மண்ணில் பறந்துகொண்டிருக்கிறது, 'ஊலு'.

    • அர்ஜென்டினா இந்த ஆட்டத்தில் தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.
    • உலகின் தலைசிறந்த வீரரான அவருக்கு இது கடைசி உலக கோப்பை என்பதால் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    லுசாயில்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 ('சி' பிரிவு ) என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-வது போட்டியில் மெக்சிகோவை இன்று எதிர் கொள்கிறது . இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு லுசாயில் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி அர்ஜென்டினாவுக்கு உள்ளது. தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை பயன்படுத்தி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.

    மெஸ்சிக்கு மிகவும் கடினமான சோதனயாகும். உலகின் தலைசிறந்த வீரரான அவருக்கு இது கடைசி உலக கோப்பை என்பதால் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். மெக்சிகோ முதல் ஆட்டத்தில் போலந்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.

    இரு அணிகளும் 35 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் அர்ஜென்டினா 16-ல், மெக்சிகோ 5-ல் வெற்றி பெற்றன. 14 போட்டி டிரா ஆனது.

    இதே பிரிவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் போலந்து-சவுதி அரேபியா அணிகள் (மாலை 6.30) மோதுகின்றன.

    சவுதி அரேபியா முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் விளையாடும். அந்த அணி இன்றும் வெற்றி பெற்றால் 2-வது சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பை பெறும். போலந்து முதல் ஆட்டத்தில் டிரா செய்ததால் சவுதி அணியை வீழ்த்த முயற்சிக்கும்.

    குரூப்-டி பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் துனிசியா-ஆஸ்திரேலியா (மாலை 3.30), பிரான்ஸ்-டென்மார்க் (இரவு 9.30) அணிகள் மோதுகின்றன.

    துனிசியா முதல் போட்டியில் கோல் எதுவுமின்றி டென்மார்க்குடன் டிரா செய்தது. ஆஸ்திரேலியா 1-4 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் தோற்றது. இதனால் இரு அணிகளும் முதல் வெற்றிக்காக காத்திருக்கின்றன.

    நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி டென்மார்க்கை வீழ்த்தி 2-வது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. டென்மார்க் முதல் வெற்றி வேட்கையில் உள்ளது.

    • 32 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது.
    • சவுதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம்.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் யாருமே எதிர் பார்க்காத வகையில் அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்சி பெனால்டி மூலம் கோல் அடித்தார். சவுதி அரேபியா தரப்பில் 48-வது நிமிடத்தில் சலோ அல்ஷெகரியும், 53-வது நிமிடத்தில் சலீம் அல்வாஸ்ரியும் கோல் அடித்தனர்.

    அர்ஜென்டினா அதிர்ச்சிகரமாக தோற்றாலும் அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அணி அடித்த 3 கோல்கள் ஆப்சைடாக அறிவிக்கப்பட்டது. மேலும் அர்ஜென்டினா வீரர்கள் அடித்த பல ஷாட்களை சவுதி அரேபியா கோல் கீப்பர் தடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.

    32 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. இதற்கு முன்பு இத்தாலியில் 1990-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் அந்த அணி ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கேமரூனிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்தது. தற்போது ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியாவிடம் தொடக்க ஆட்டத்தில் வீழ்ந்துள்ளது.

    இந்த தோல்வியால் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி மிகுந்த வருத்தம் அடைந்தார். தோல்விக்கு பிறகு அர்ஜென்டினா கேப்டனான அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சவுதி அரேபியாவுக்கு எதிரான தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய அடியாகும். இந்த தோல்வியால் மனது வலிக்கிறது. 2-வது பாதி ஆட்டத்தில் 5 நிமிடங்கள் செய்த தவறு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. 1-2 என்ற கோல் கணக்கில் பின் தங்கிய பிறகு அதில் இருந்து மீள்வது கடினமாகி விட்டது.

    சவுதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் பந்தை நன்றாக நகர்த்தி செல்கிறார்கள். இந்த தோல்வியை நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.

    நாங்கள் கடினமாக போராடினோம். அதே நேரத்தில் தோல்விக்கு சாக்குகள் எதுவும் கூற விரும்பவில்லை. நாங்கள் முன்பை விட ஒருங்கிணைந்து விளையாட இருக்கிறோம். இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம். மெக்சிகோவை வீழ்த்த முயற்சிப்போம்.

    இவ்வாறு மெஸ்சி கூறியுள்ளார்.

    இந்த தோல்வியால் அர்ஜென்டினாவுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல் சுற்றிலேயே வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    அர்ஜென்டினா எஞ்சிய ஆட்டங்களில் மெக்சிகோ, போலந்துடன் மோத வேண்டி உள்ளது. இந்த இரண்டு ஆட்டத்திலும் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தோற்றால் 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி விடும்.

    லா லிகா தொடரில் 400-வது கோலை பதிவு செய்து பார்சிலோனா முன்னணி வீரரான மெஸ்சி சாதனைப் படைத்துள்ளார். #LaLiga #Messi
    அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா லீக்கில் விளையாடி வருகிறார். நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா - எய்பர் அணி மோதின. இதில் பார்சிலோனா 3-0 என வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் மெஸ்சி ஒரு கோலும், சுவாரஸ் இரண்டு கோலும் அடித்தனர்.

    இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் மெஸ்சி லா லிகாவில் 400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் முன்னணி ஐந்து லீக் தொடரில் ஒரே தொடரில் 400 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    ஒட்டுமொத்தமாக அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடம்பிடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 507 போட்டிகளில் விளையாடி 409 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். ரொனால்டோ ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி நாடுகளில் உள்ள கிளப் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
    உலகக்கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் முன்னாள் சாம்பியன்கள் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணி மோத உள்ளதால் இன்றைய ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #worldcup2018 #LionelMessi #argentinavsfrance
    ரஷியாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால் பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்), பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஐப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.

    நடப்பு சாம்பியனான ஜெர்மனி, சவுதி அரேபியா, எகிப்து, ஈரான், மொராக்கோ, பெரு, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா, தென்கொரியா, துனிசியா, பனாமா, செனகல், போலந்து ஆகிய 16 அணிகள் முதல் சுற்றோடு வெளியேறின.

    2-வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். இதனால் ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பாக இருக்கும். இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன.

    இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ்-’டி’ பிரிவில் 2-ம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணிகள் மோது கின்றன. இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா லீக் சுற்றில் தொடக்கத்தில் திணறியது. ஐஸ்லாந்துடன் டிரா செய்த அந்த அணி குரோஷியாவிடம் தோற்றது.

    அடுத்து நைஜீரியாவிடம் போராடி வென்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. அர்ஜென்டினா அணியில் கேப்டன் மெஸ்சி நட்சத்திர வீரராக உள்ளார். முதல் 2 ஆட்டத்தில் சொபிக்க தவறிய அவர் கடைசி போட்டியில் ஒரு கோல் அடித்து பார்முக்கு திரும்பி உள்ளார். அவருக்கு ஏஞ்சல்டிமரியா, மார்கஸ் ரோஜோ ஆகியோர் பக்க பலமாக உள்ளனர். இதனால் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை வீழ்த்தி கால் இறுதிக்குள் அர்ஜென்டினா நுழையுமா என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ஆனால் பிரான்சின் தடுப்பு ஆட்டத்தை உடைத்து கோல் அடிப்பது கடும் சவாலாக இருக்கும். இதில் மெஸ்சி ஜொலிப்பது மிகவும் அவசியம்.

    முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் பலம் வாய்ந்து இருக்கிறது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, பெரு அணிகளை வீழ்த்தியது. டென்மார்க்குடன் டிரா செய்தது. அந்த அணிக்கு 2-வது சுற்றில் இருந்துதான் சவால் ஆரம்பமாகிறது. நட்சத்திர வீரர் கிரிஸ்மான் தனது முழு திறமையை இன்றும் நிரூபிக்கவில்லை. பால்போக்பா, பாப்பே, ஆலிவர் ஜுரூட் நல்ல நிலையில் உள்ளனர். பிரான்ஸ் அணி தடுப்பு மற்றும் தாக்குதல் ஆட்டம் என இரண்டிலும் சிறப்பாகவே இருக்கிறது.

    இதனால் கால் இறுதிக்குள் நுழையும் வேட்கையுடன் அந்த அணி உள்ளது. முன்னாள் சாம்பியன் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    இப்போட்டி குறித்து பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ன்ஸ் கூறியதாவது-

    அர்ஜென்டினா மற்றும் மெஸ்சிக்கு எதிராக களத்தில் விளையாடும் போது அவரை தடுக்க பல்வேறு வழிகளை செயல்படுத்த வேண்டும். அவர் ஆட்டத்தில் வித்தியாசத்தை காட்டுவார் என்பதை அறிவோம் என்றார். #worldcup2018 #LionelMessi #argentinavsfrance

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் மெஸ்சி மற்றும் ரொனால்டோ சிறப்பாக விளையாடி தங்கள் அணிக்கு வெற்றியை தேடி தருவார்களா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. #worldcup2018 #LionelMessi #Ronaldo
    ரஷியாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்), பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஐப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.

    நடப்பு சாம்பியனான ஜெர்மனி, சவுதி அரேபியா, எகிப்து, ஈரான், மொராக்கோ, பெரு, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா, தென்கொரியா, துனிசியா, பனாமா, செனகல், போலந்து ஆகிய 16 அணிகள் முதல் சுற்றோடு வெளியேறின.

    2-வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். இதனால் ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பாக இருக்கும். இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. தற்போது கால்பந்து உலகில் நட்சத்திர வீரர்களாக மெஸ்சி (அர்ஜென்டினா), ரொனால்டோ (போர்ச்சுக்கல்) வலம் வருகிறார்கள்.

    அவர்கள் இருவருக்கும் உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. மெஸ்சி பார்சிலோனா கிளப் அணிக்கும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் கிளப் அணிக்கும் விளையாடி வருகிறார்கள்.

    இந்த இரு அணிகளும் மோதும்போது மெஸ்சி- ரொனால்டோ இருவருக்கும் இடையே நேரடி போட்டியாகவே கருதப்படும். அந்த அளவுக்கு இருவரும் களத்தில் நேருக்கு நேர் மல்லு கட்டுவார்கள்.

    உலக கோப்பையில் இன்று நடக்கும் ஆட்டங்களில் இருவரும் களம் இறங்குகிறார்கள். மெஸ்சி பிரான்சு அணிக்கு எதிராகவும், ரொனால்டோ உருகுவே அணிக்கு எதிராகவும் விளையாடுகிறார்கள். இதில் தங்களது அணியை வெற்றி பெற வைத்து கால் இறுதிக்கு அழைத்து செல்வது மெஸ்சியா, ரொனால்டோவா? என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் நிலவுகிறது.

    இருவருமே தங்களது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜொலிக்க வேண்டும் என்று பெரும்பாலான ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

    இன்றைய போட்டியில் அர்ஜென்டினா- போர்ச் சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் கால் இறுதி யில் இவ்விரு அணிகளும் மோதும் வாய்ப்பு ஏற்படும்.
    ஆனால் இருவரும் இன்று களம் இறங்கி எதிராக விளையாடும் அணிகள் பலம் பொருந்தியதாக இருக்கிறது. இதனால் அவர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

    மெஸ்சி மற்றும் ரொனால்டோ விளையாடும் போட்டி என்பதால் இது மிகவும் முக்கியமான ஆட்டங்களாக கருதப்படுகிறது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றி பெற்றால் காலிறுதியில் போர்ச்சுக்கல் - அர்ஜெண்டினா அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அனைவரும் இரண்டு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் உள்ளனர். #worldcup2018 #LionelMessi #Ronaldo
    உலக கால்பந்து போட்டியில் மெஸ்சியின் அர்ஜெண்டினா அணி தோற்ற விரக்தியில் ரசிகர் ஒருவர் தற்கொலை கடிதம் எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தின் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த தினு அலெக்ஸ் என்ற வாலிபர் அர்ஜெண்டினா அணியின் ஆதரவாளராக இருந்தார். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் மெஸ்சியின் தீவிர ரசிகராக இருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்தது.


    இதனால் மனமுடைந்த அலெக்ஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வீட்டில் இருந்த தற்கொலை கடிதத்தில் மெஸ்சி தோற்தை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பேசிய அலெக்சின் தந்தை, அலெக்ஸ் மெஸ்சியின் தீவிர ரசிகன். அவன் அணி தோல்வியடைந்ததை அடுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டான் என கூறினார். கால்பந்து அணி தோல்வியடைந்தற்கு வாலிபர் வீடை விட்டு வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×