search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala women"

    • நாஜி நவுஷி என்ற பெண்மணிக்கு 33 வயதாகும். இவர், 5 குழந்தைகளின் தாய்.
    • மெஸ்சியின் ஆட்டத்தை நேரில் பார்க்க கேரளாவில் இருந்து கத்தாருக்கு பயணித்த 5 குழந்தைகளின் தாய்

    தோஹா:

    உலகக் கோப்பை போட்டி காரணமாக உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களை கால்பந்து ஜூரம் பற்றிக்கொண்டுள்ளது. நம் நாட்டிலும் கால்பந்து மோகம் அதிகமுள்ள மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் இதன் பரபரப்பு பரவியிருக்கிறது. இந்நிலையில், கேரளாவில் இருந்து கத்தாருக்கு காரில் தனியாக பயணம் மேற்கொண்டுள்ளார். நாஜி நவுஷி என்ற பெண்மணி. 33 வயதாகும் இவர், 5 குழந்தைகளின் தாய்.

    அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்சியின் அதிதீவிர ரசிகை. களத்தில் தனது அபிமான ஹீரோவின் சாகசத்தை கண்ணாரக் கண்டு ரசிக்க வேண்டும் என்பதே நவுஷியின் கார் பயணத்தின் நோக்கம். மலையாள தேசத்தில் இருந்து 'மணல் தேசத்துக்கு' தனது பயணத்தை கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கினார் நவுஷி. அவரது கார், மும்பையில் இருந்து ஓமன் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக கத்தாருக்கு நவுஷி தானே தனியாக காரை ஓட்டிச்சென்றார்.


    இவரின் நாயகரின் அணியான அர்ஜென்டினா, சவுதி அரேபியாவுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதில் அனேக அர்ஜென்டினா ரசிகர்களைப் போல நவுஷிக்கும் வருத்தம்தான். ஆனால், 'உலக கோப்பையை வெல்லும் அர்ஜென்டினாவின் பயணத்தில் இது ஒரு சிறு பின்னடைவுதான். எனது ஹீரோ மெஸ்சி ஆடுவதை நேரில் காணப்போகிறேன் என்பதே என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது' என்கிறார் இவர் உற்சாகப் படபடப்புடன்.

    நவுஷியின் மனம் கவர்ந்த முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா, கட்டாய வெற்றி நெருக்கடியில் நேற்று நள்ளிரவு மெக்சிகோவை சந்தித்து வெற்றி பெற்றது. நவுஷியின் கார் ஒரு நகரும் வீடாகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இதன் மேற்புறத்தில் கூடார வசதியும், காருக்குள் மினி சமையல்கூடமும் அமைக்கப்பட்டுள்ளன. அரிசி, கோதுமை மாவு, மசாலாக்கள் போன்ற சமையல் பொருட்களையும் போதுமான அளவு 'ஸ்டாக்' வைத்திருக்கிறார். தனக்குத் தேவையான உணவுகளை தானே சமைத்துக்கொள்கிறார்.

    நாஜி நவுஷி தனது காருக்கு 'ஊலு' என்று செல்லப்பெயர் சூட்டியிருக்கிறார். இந்த மலையாள வழக்குமொழிச் சொல்லுக்கு 'அவள்' என்று பொருள். கால்பந்து காதலி நவுஷியை சுமந்துகொண்டு பாலைவன மண்ணில் பறந்துகொண்டிருக்கிறது, 'ஊலு'.

    சபரிமலையில் ஐயப்பனை தரிசித்த பிந்து, கனகதுர்கா இருவரும் கேரளாவுக்கு வெளியே உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் மாறி மாறி தங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை.

    சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல பல இளம்பெண்கள் முயன்றனர்.

    சபரிமலை கோவில் ஆச்சாரப்படி இளம்பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை மீறி கடந்த 2-ந்தேதி கேரளாவின் மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டைச் சேர்ந்த இளம்பெண்கள் பிந்து, கனகதுர்கா இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசித்தனர்.

    பிந்து, கனகதுர்கா இருவரும் சபரிமலையில் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள், பா.ஜனதா கட்சி இணைந்து முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் கலவரங்கள் நடந்தன.

    இதற்கு பதிலடியாக கம்யூனிஸ்டு கட்சியினரும் பேரணி, போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக பா.ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரின் தலைவர்கள் வீடு, அலுவலகங்கள் தாக்கப்பட்டன.

    கேரளாவில் நடந்த வன்முறை காரணமாக சபரிமலை கோவிலில் தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா இருவரும் போலீஸ் துணையுடன் தலைமறைவானார்கள். இவர்களை தேடி அலைந்த போராட்டக்காரர்கள் கேரளாவில் உள்ள பிந்து, கனகதுர்கா வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர்.

    மேலும் பிந்து, கனகதுர்கா இருவரும் கேரளா வந்தால் அவர்களை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்தனர். இதனால் தலைமறைவான பிந்து, கனகதுர்கா இருவரும் இதுவரை சொந்த ஊர் திரும்பவில்லை.

    பிந்து, கனகதுர்கா இருவரும் கேரளாவுக்கு வெளியே உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் மாறி மாறி தங்கி வருவதாக தெரிய வந்துள்ளது. இதுபற்றி பிந்துவும், கனகதுர்காவும் கூறும்போது, சபரிமலைக்கு சென்றதால் எங்களுக்கு பயம் எதுவும் இல்லை. எங்களது ஒரே குறிக்கோள் சபரிமலைக்கு செல்ல வேண்டும், ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்பது தான். அது நிறைவேறியது.

    இப்போது உள்ள சூழ்நிலை மாறும். நாங்கள் கேரள அரசையும், போலீஸ் அதிகாரிகளையும் நம்புகிறோம். கேரள மக்களும், கேரள சமூகமும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் என்று கருதுகிறோம் என்றனர்.  #Sabarimala

    ×