search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டை"

    • நாமக்கல் மண்டலத்தில் 1350 கோழிப்பண்ணை கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 6 1/2 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
    • கடந்த வாரம் ஒரு முட்டை ரூ 4.35 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 4.65 க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1350 கோழிப்பண்ணை கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 6 1/2 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    இங்கு உற்பதத்தி செய்யப்படும் முட்டைகள் சத்துணவு மற்றும் உள்மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன. வடமாநிலங்களில் உற்பத்தி குறைவால் நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை அதிகளவில் செல்கின்றன.

    இது மட்டுமின்றி துபாய், மஸ்கட், இலங்கை உள்பட பல்வேறு வெளிநா டுகளுக்கு முட்டைகள் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ஒரு முட்டை ரூ 4.35 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 4.65 க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளன.

    இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணை யாள ர்கள் சங்க தலைவர் சிங்க ராஜ் கூறியதாவது:-

    நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் வடமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அனுப்புவது அதிகரித்துள்ளது. மழைகாரணமாக நுகர்வு அதிகம் உள்ளதால் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

    • மஞ்சள் கருவில் 100 சதவீதம் கொழுப்பு உள்ளது.
    • முட்டை ஒரு சிறந்த உணவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    வளரும் குழந்தைகளுக்கு முட்டையை பச்சையாகக் கொடுத்தால் உடல் வலுப்பெறும் என்றும், பூப்படைந்த பெண்களுக்கு 'பச்சை முட்டை' தருவது நல்லது என்றும் கூறுகிறார்கள். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முட்டை ஒரு சிறந்த உணவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு முட்டையின் எடையில் சுமார் 60 சதவீதம் வெள்ளை கருவும், 30 சதவீதம் மஞ்சள் கருவும் உள்ளன. வெள்ளை கருவில் 90 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. 10 சதவீதம் புரதம் உள்ளது. இதில் கொழுப்பு சுத்தமாக இல்லை. கார்போஹைட்ரேட் சத்தும் குறைவு.

    மஞ்சள் கருவில் 100 சதவீதம் கொழுப்பு உள்ளது. இதன் மஞ்சள் நிறம் குறிப்பிட்ட பறவை இனம் சாப்பிட்ட உணவில் உள்ள 'கரோட்டினாய்டு', 'ஸாந்தோபில்' எனும் மஞ்சள் நிறமிகளின் அளவை பொறுத்து உருவாகிறது. உதாரணமாக மஞ்சள் நிற மக்காச்சோளத்தை தின்று வளரும் பறவையின் முட்டை, அதிக அடர்த்தியுடன் கூடிய மஞ்சள் கருவைப் பெற்றிருக்கும். மஞ்சள் கருவில் உள்ள நிறமிகளில் 'லூட்டின்' எனும் நிறமிதான் அதிகம். 100 கிராம் கோழி முட்டையில் தண்ணீர் 75 கிராம், கார்போஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கிராம், புரதச்சத்து 12.6 கிராம் வைட்டமின்- ஏ, வைட்டமின்-டி உள்ளிட்ட பத்து வகை வைட்டமின்கள், கால்சியம், இரும்பு உள்ளிட்ட 7 வகை தாதுச்சத்துகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் என பல சத்துகள் உள்ளன. ஒரு முட்டை சாப்பிட்டால் 155 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. ஒரு நேரத்தில் இரண்டு முட்டை சாப்பிட்டால் ஒரு சராசரி மனிதருக்கு காலை உணவுக்கு தேவையான சக்தி கிடைத்துவிடும்.

    'முட்டையை வேக வைக்காமல், பச்சையாகக் குடித்தால் உடலுக்கு அதிக சத்து கிடைக்கும்' என்று ஒரு நம்பிக்கை உள்ளது. குறிப்பாக, குழந்தைகள், இளம்பெண்கள், விளையாட்டு வீரர்கள், பளு தூக்குபவர்கள் போன்றோர் அதிக சத்தைப் பெறுவதற்காக பச்சை முட்டையை குடிப்பார்கள். இதில்தான் ஆபத்து உள்ளது.

    'பச்சை முட்டை'யின் வெள்ளைக்கருவில் 'அவிடின்' எனும் புரதச்சத்து உள்ளது. இது முட்டையில் உள்ள பயாட்டின் எனும் வைட்டமினுடன் இணையும்போது, பயாட்டின் சத்து சிறுகுடலில் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் முட்டையை வேகவைத்துவிட்டால், அந்த வெப்பத்தில் அவிடின் அழிந்துவிடும். இதன் பலனாக, முட்டையில் உள்ள பயாட்டின் முழுமையாக உடலில் சேரும். அவிடின் சத்தைவிட பயாட்டின்தான் நமக்கு முக்கியம். குறிப்பாகக் கூந்தல் வளர்ச்சிக்கு இது தேவை. ஆகவே, வேகவைத்த முட்டையை சாப்பிடுவதே நல்லது.

    முட்டையில் 'சால்மோனல்லா' போன்ற பாக்டீரியா கிருமிகள் இருக்க வாய்ப்பு உள்ளது. முட்டையை அவிக்கும்போது, அவை இறந்துவிடும் என்பதால் நோய்த்தொற்று ஏற்படுவது தடுக்கப்படும். இப்போது ஹார்மோன் ஊசி போட்டுத்தான் பெரும்பாலான கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த மருந்துகளின் பாதிப்பு இறைச்சியில் மட்டுமல்லாமல், முட்டையிலும் இருக்கும் சாத்தியம் உள்ளது. முட்டையை வேகவைக்கும்போது இந்தப் பாதிப்புகள் குறைந்துவிடும். இருந்தாலும் நாட்டுக்கோழி முட்டைகளை வாங்கி பயன்படுத்துவதே மிக சிறந்தது.

    • சளி இருமலுக்கு ஆஸ்த்துமா நோய்க்கு நல்ல மருந்தாக இருப்பதால் வாத்து முட்டை விலை உயர்ந்தாலும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.
    • சில வாரத்துக்கு முன்பு 8 ரூபாய்க்கு விற்ற வாத்து முட்டை தற்போது 4 ரூபாய் உயர்ந்து 12 ரூபாய்க்கு விற்பனை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அசைவ பிரியர்கள் உள்ளதால் ஆடு, கோழி, காடை, வாத்து இறைச்சி விற்பனை ஜோராக நடக்கிறது.

    பருவநிலை மாற்றத்தால் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமலால் அவதிப்படுகின்றனர். சளி இருமலுக்கு ஆஸ்த்துமா நோய்க்கு நல்ல மருந்தாக இருப்பதால் வாத்து முட்டை விலை உயர்ந்தாலும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.

    சில வாரத்துக்கு முன்பு 8 ரூபாய்க்கு விற்ற வாத்து முட்டை தற்போது 4 ரூபாய் உயர்ந்து 12 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

    இது குறித்து வாத்து முட்டை விற்பனை செய்யும் கடை உரிமையாளர் கூறியதாவது, தேவை அதிகரித்ததால், வாத்து முட்டை கடும்தட்டு பாடு ஏற்பட்டதால் வாத்து முட்டை விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கறிக்கோழி முட்டையை விட வாத்து முட்டைகள் அதிக சத்துக்கள் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாத்து பண்ணைகள் மூலம் முட்டை கொள்முதல் செய்து பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்கிறோம். வாத்து முட்டை 12 ரூபாய்க்கும், வேக வைத்த வாத்து முட்டை 15 ரூபாயும், வாத்து முட்டை ஆம்லெட் ரூ.30 ஆகும் விலை உயர்ந்துள்ளது என கூறினார்.

    • கடந்த ஜூன் 30-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • படிப்படியாக முட்டை விலை சரிவடைந்து கடந்த 10-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆனது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.

    கடந்த ஜூன் 30-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.5.50 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக முட்டை விலை சரிவடைந்து கடந்த 10-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆனது.

    பின்னர் நாள்தோறும் 5 பைசா வீதம் உயர்வடைந்து கடந்த 17-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.65 ஆனது. நேற்று நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    அகில இந்திய என்.இ.சி.சி அறிவிப்பின்படி, இன்னும் 3 நாட்களுக்கு முட்டை விலை இதே நிலையில் நீடிக்கும் என்றும், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனை விறுவிறுப்பாக இருப்பதால், பண்ணையாளர்கள் யாரும் என்.இ.சி.சி விலையைவிட குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என்றும், மண்டல என்.இ.சி.சி. துணைத்தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-520, பர்வாலா-375, பெங்களூரு-505, டெல்லி-418, ஐதராபாத்-455, மும்பை-515, மைசூரு-512, விஜயவாடா-440, ஹொஸ்பேட்-465, கொல்கத்தா-460.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.93 ஆக பி.சி.சி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.77 ஆக சிகா நிர்ணயித்து உள்ளது.

    • முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாமக்கல்லில் தினசரி நிர்ணயம் செய்கிறது.
    • முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அதன் மூலம் தினமும் 6 கோடிக்கும் அதிகமான முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாமக்கல்லில் தினசரி நிர்ணயம் செய்கிறது.

    அதன்படி நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டையின் விலை 460 காசிலிருந்து 465 காசாக உயர்ந்தது.

    நாமக்கல் மண்டலத்திற்குட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 101 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 103 ரூபாயாக உயர்ந்தது. முட்டை கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 77 ரூபாயாக நீடிக்கிறது.

    • முட்டை சராசரியான முட்டைகளின் அளவை காட்டிலும் 2 மடங்குக்கு மேல் அதிகமாக இருந்தது.
    • முட்டை விவசாயிகளின் தகவல் தொடர்பு நிபுணர் மற்றும் முட்டை விவசாயிகள் அவரது பண்ணையில் திரண்டு ராட்சத முட்டையை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்.

    சாதாரணமாக ஒரு கோழி முட்டையின் எடை 50 கிராம் முதல் 70 கிராம் வரை இருக்கும். ஆனால் கனடா நாட்டில் ஒரு கோழி 202 கிராம் எடையில் முட்டையிட்டுள்ளது. அங்குள்ள மணிடோபா பகுதியை சேர்ந்த ஆஷாபார்டெல் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் 2 வயது நிரம்பிய கோழி ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டையிடும் பருவத்தை எட்டிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காலையில் ஒரு சத்தம் கேட்டுள்ளது. உடனே ஆஷா அங்கு சென்ற போது தரையில் ராட்சத முட்டை ஒன்று கிடந்தது. அதை பார்த்ததும் ஆஷா ஆச்சரியம் அடைந்தார்.

    ஏனென்றால் அந்த முட்டை சராசரியான முட்டைகளின் அளவை காட்டிலும் 2 மடங்குக்கு மேல் அதிகமாக இருந்தது. இந்த முட்டை சிறிய மாம்பழம் அளவில் இருந்ததை என்னால் நம்பவே முடியவில்லை என ஆஷா கூறினார். இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பரவியதும் முட்டை விவசாயிகளின் தகவல் தொடர்பு நிபுணர் மற்றும் முட்டை விவசாயிகள் அவரது பண்ணையில் திரண்டு ராட்சத முட்டையை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். அதே நேரம் உலகிலேயே அதிக எடை கொண்ட கோழி முட்டை என கின்னஸ் சாதனை படைத்த முட்டை என்றால் அது 1956-ம் ஆண்டு நியூஜெர்சியில் ஒரு கோழியால் இடப்பட்ட 454 கிராம் எடை கொண்ட கோழி முட்டை ஆகும்.

    • கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • ரவுடிகளின் அட்டகாசத்தால் வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த உப்புரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர்.இவர் பொன்னேரி தாயுமான் செட்டி தெருவில் முட்டை கடை வைத்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மதியம் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் முட்டை கடையின் முதல் மாடியில் உள்ள பேனர் கடையின் செல்போன் நம்பர் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.மேலும் சேவியரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனை சேவியர் கண்டித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அரிவாளுடன் முட்டை கடைக்குள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த முட்டைகளை அரிவாளால் வெட்டி உடைத்து வெளியே வீசினர். சுமார் 2 ஆயிரம் முட்டைகளை மர்ம நபர்கள் உடைத்தனர். இதனை கண்ட கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து சேவியர் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் விரைந்து வந்து முட்டை கடையை சூறையாடி தப்பிய ஒருவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் ஏலியம்பேடு பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது 6 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. தப்பி ஓடிய மற்றவர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த மாதம் புதிய பஸ் நிலையம் தேரடி தெருவில் மர்மகும்பல் கத்தியுடன் 4 கடைகளை அடித்து சூறையாடினர். ரவுடிகளின் அட்டகாசத்தால் வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர். ரவுடிகள் குறித்து போலீசாரிடம் புகார் செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • கடந்த 30-ந்தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • கடந்த ஜூலை 1-ந் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.40 ஆனது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த 30-ந்தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. கடந்த ஜூலை 1-ந் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.40 ஆனது, 2-ந் தேதி மீண்டும் 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 3-ந்தேதி மேலும் 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.20 ஆனது. 4-ந் தேதி மீண்டும் 20 பைசா குறைக்கப்பட்டு ரூ.5 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இன்று அதிரடியாக 30 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, 5 நாட்களில் ஒரு முட்டைக்கு 80 பைசா விலை சரிவு ஏற்பட்டதால் கோழிப்பண்ணையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனால், தினசரி 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகும் நாமக்கல் மண்டலத்தில், கோழிப்பண்ணை தொழிலில் நாள் ஒன்றுக்கு ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-சென்னை-560, பர்வாலா-421, பெங்களூரு-540, டெல்லி-465, ஹைதராபாத்-470, மும்பை-560, மைசூர்-570, விஜயவாடா-450, ஹொஸ்பேட்-500, கொல்கத்தா-520.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 108 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 95 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.
    • 5 நாட்களில் ஒரு முட்டைக்கு 50 பைசா விலை சரிவடைந்ததால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 30-ம் தேதி ஒரு முட்டை விலை ரூ.5.50 ஆக இருந்தது. 1-ம் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டை விலை ரூ.5.40 ஆனது. 2-ம் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.30 ஆனது.

    இதேபோல் 3-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மேலும் 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் விலை 5.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணை கொள்முதல் விலை ரூ.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 நாட்களில் ஒரு முட்டைக்கு 50 பைசா விலை சரிவடைந்ததால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-

    சென்னை-580, பர்வாலா-446, பெங்களூரு-580, டெல்லி-492, ஹைதராபாத்-500, மும்பை-585, மைசூர்-580, விஜயவாடா-500, ஹொஸ்பேட்-540, கொல்கத்தா-540. பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.108 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. மேலும் முட்டைக் கோழி ஒரு கிலோ ரூ. 95 ஆக நிர்ணயித்துள்ளது.

    • கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • கடந்த 30-ந் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில், 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என். இ.சி.சி.), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. கடந்த 30-ந் தேதி 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 1-ந் தேதி மீண்டும் 10 பைசா குறைக்கப்பட்டு ஒரு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 நாட்களில் மட்டும் முட்டை விலை 20 காசுகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-சென்னை-600, பர்வாலா-473, பெங்களூர்-580, டெல்லி-492, ஹைதரா பாத்-540, மும்பை-605, மைசூர்-600, விஜயவாடா-535, ஹொஸ்பேட்-560, கொல்கத்தா-565.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 120 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக் கோழி ஒரு கிலோ ரூ.97 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • முட்டை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 10 பைசா குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்வரத்து அதிகரித்து வருவதால் முட்டை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-610, பர்வாலா-473, பெங்களூர்-600, டெல்லி-490, ஹைதராபாத்-540, மும்பை-605, மைசூர்-603, விஜயவாடா-535, ஹொஸ்பேட்-560, கொல்கத்தா-570.

    முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.95-க்கும் விற்கப்பட்டது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டை கோழி கிலோ ரூ.97 ஆக உயர்ந்தது.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 120 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

    • முட்டை பண்ணை கொள்முதல் விலை 550 காசுகளாக நீடிக்கும்.
    • முட்டை கோழி விலை ரூ.95 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் டாக்டர் செல்வ ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    தற்போது முட்டை விற்பனை சீராக உள்ளதாகவும், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாதலும், தினசரி முட்டை விலை நிர்ணயம் மாற்றும் இன்றி 550 காசுகளாக நீடிக்கும் என பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை அடுத்து முட்டை பண்ணை கொள்முதல் விலை 550 காசுகளாக நீடிக்கும் என ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.128 ஆகவும், முட்டை கோழி விலை ரூ.95 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

    ×