search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிவாள்"

    • ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளவில்லை என ஊராட்சி நிர்வாகம் சார்பில் மீண்டும் புகாராளிக்கப்பட்டது.
    • ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் வேளானேரி கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலி (வயது 55). இவரது குடும்பத்தினர் கடந்த பல வருடங்களாக பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து காம்பவுண்டு சுவரை கட்டி தெருவை மறைத்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களை சங்கிலியும், அவரது குடும்பத்தினரும் நாள்தோறும் ஆபாசமாகவும் மிகவும் தரக்குறைவாக பேசி வருவதாகவும் புகார் எழுந்தது. இதனால் அந்த பாதையை கடந்து தங்களது வீடுகளுக்கு சென்று வருவதில் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    தனிப்பட்ட ஒரு குடும்பத்தினர் பொதுப்பாதையை ஆக்கிரமித்துள்ளது குறித்து வேளானேரி ஊராட்சி மன்றத்தலைவரான போதும்பொண்ணு முனியாண்டியிடம் அப்பகுதி குடியிருப்பு பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    மேலும் ஊராட்சி மன்ற தலைவர் போதும்பெண்ணு, இதுகுறித்து நரிக்குடி ஒன்றிய பி.டி.ஓ., திருச்சுழி தாசில்தார் ஆகியோரிடம் புகாரளித்தார். அந்த பகுதியை அளந்து ஆக்கிரமிப்பு இருந்தால் பாரபட்சமின்றி அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

    இது தொடர்பாக ஊராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றிய நிலையில் அளவீடுகள் செய்வதற்கான கட்டணமும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செலுத்தப்பட்டது. இதனால் சங்கிலி குடும்பத்தினருக்கும், ஊராட்சி மன்றத்தலைவர் போதும்பொண்ணுவுக்கும் இடையே பகை மூண்டது. இதற்கிடையில் தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 10 அடி பொதுப்பாதையை மறைத்து சங்கிலி குடும்பத்தினர் காம்பவுண்டு சுவர் கட்டியது உறுதியானது. அந்த காம்பவுண்டு சுவரை அகற்ற வருவாய்த்துறையினர் தயாராகினர்.

    இதற்காக போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அங்கு சென்றபோது கடும் எதிர்ப்பு தெரிவித்த சங்கிலி குடும்பத்தினர் திடீரென தங்களது உடலில் மண்எண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த சங்கிலி குடும்பத்தினரை போலீசார் எச்சரித்தனர். அதன் பிறகு ஓரிரு நாட்களில் தாங்களாகவே ஆக்கிரமிப்பை எடுத்துக்கொள்வதாக சங்கிலி குடும்பத்தினர் கேட்டு கொண்டதன் பேரில் அரசு அதிகாரிகள் சில நாட்கள் அவகாசம் அளித்தனர்.

    அதற்கு பிறகும் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளவில்லை என ஊராட்சி நிர்வாகம் சார்பில் மீண்டும் புகாராளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சங்கிலி குடும்பத்தினர் இதற்கெல்லாம் ஊராட்சி மன்றத் தலைவர் போதும்பொண்ணுதான் காரணம் என்று கூறி பெண் என்றும் பாராமல் தரக்குறைவாக பேசி வந்தனர்.

    கடந்த மாதம் 18-ந்தேதி மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்றும் முயற்சியும் தள்ளிப்போனது. இதனால் காம்பவுண்டு சுவரை கடந்து செல்லும் பொதுமக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் சங்கிலி குடும்பத்தினர் பொதுமக்கள் நடந்து செல்லும் பொதுப்பாதையை மண் கொண்டு வழி மறித்து அடைத்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக் கேட்ட ஊராட்சி மன்றத்தலைவர் போதும் பொண்ணுவை வெட்ட அரிவாளுடன் சங்கிலி ஆவேசமாக வந்துள்ளார்.

    இதனால் அச்சமடைந்த போதும்பொண்ணு தனது கணவரான முனியாண்டியுடன் நரிக்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். தனது உயிருக்கு பாதுகாப்பு கோரியதுடன் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சங்கிலி மற்றும் அவரை தூண்டிவிட்ட சங்கிலியின் மனைவியான ஜோதிலட்சுமி ஆகியோர் மீதும் புகார் அளித்தார்.

    அத்துடன் ஆக்கிரமித்து கட்டியுள்ள காம்பவுண்டு சுவரால் உயிர் பலி போன்ற பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்விரைவில் அந்த சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பா ளையத்தில் உள்ள காவிரி கரையோரத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண்ண சாமி கோவில் வளாகத்தில் சுமார் 18 அடி உயரத்தில் 750 கிலோ எடையில் இரும்பாலான அரிவாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பா ளையத்தில் உள்ள காவிரி கரையோரத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண்ண சாமி கோவில் வளாகத்தில் சுமார் 18 அடி உயரத்தில் 750 கிலோ எடையில் இரும்பாலான அரிவாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கருப்பண்ண சாமி மற்றும் 18 அடி உயரமுள்ள அரிவாள் ஆகியவற்றிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கருப்பண்ணசாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் பிலிக்கல்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • ரவுடிகளின் அட்டகாசத்தால் வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த உப்புரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர்.இவர் பொன்னேரி தாயுமான் செட்டி தெருவில் முட்டை கடை வைத்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மதியம் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் முட்டை கடையின் முதல் மாடியில் உள்ள பேனர் கடையின் செல்போன் நம்பர் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.மேலும் சேவியரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனை சேவியர் கண்டித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அரிவாளுடன் முட்டை கடைக்குள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த முட்டைகளை அரிவாளால் வெட்டி உடைத்து வெளியே வீசினர். சுமார் 2 ஆயிரம் முட்டைகளை மர்ம நபர்கள் உடைத்தனர். இதனை கண்ட கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து சேவியர் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் விரைந்து வந்து முட்டை கடையை சூறையாடி தப்பிய ஒருவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் ஏலியம்பேடு பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது 6 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. தப்பி ஓடிய மற்றவர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த மாதம் புதிய பஸ் நிலையம் தேரடி தெருவில் மர்மகும்பல் கத்தியுடன் 4 கடைகளை அடித்து சூறையாடினர். ரவுடிகளின் அட்டகாசத்தால் வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளனர். ரவுடிகள் குறித்து போலீசாரிடம் புகார் செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • பழனி புறநகர் பகுதிகளிலும் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அடிக்கடி மர்ம நபர்கள் சுற்றி பொதுமக்களை மிரட்டி வருகின்றனர்.
    • பொதுமக்களை அச்சுறுத்தும் நபர்களை போலீசார் பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பழனி:

    பழனி 11வது வார்டு பெரியகடை வீதி குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் மணி. இவர் தொடர்ந்து அப்பகுதியில் அரிவாளை கையில் வைத்துக் கொண்டு குடிபோதையில் யாரா இருந்தாலும் வெட்டுவேன் என மிரட்டி பேசி வந்துள்ளார்.

    மேலும் தனது வீட்டில் முன்பு அரிவாளை வைத்துக் கொண்டு சினிமாவில் கிளைமாக்ஸ் காட்சிகளில் வருவது போல அமர்ந்து கொண்டு யாரும் இந்த தெருவை கடந்து செல்லக்கூடாது. மீறினால் வெட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார். இவரது மிரட்டல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதே போல பழனி புறநகர் பகுதிகளிலும் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அடிக்கடி மர்ம நபர்கள் சுற்றி பொதுமக்களை மிரட்டி வருகின்றனர். கோவில் நகரான பழனியில் இது போன்ற நபர்களால் சமூக விரோத செயல்கள் அதிகரித்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

    எனவே இவரைப் போன்று பொதுமக்களை அச்சுறுத்தும் நபர்களை போலீசார் பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தில் விசாரணைக்கு சென்ற போலீசாரை வெட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு
    • தலை, கழுத்து, கை உள்பட 5 இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பார்வதிபுரம் கட்டையன் விளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் ஊருக்கு வந்துள் ளார்.

    இவரது மனைவி ஏஞ்சலின் தயா (36). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் அரிவாளால் மனைவி ஏஞ்சலின் தயாவை தலை, கழுத்து, கை உள்பட 5 இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

    இதில் ஏஞ்சலின் தயா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து வடசேரி போலீசில் ஏஞ்சலின்தயா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் செல்வ ராஜ் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனைவியை அரிவாளால் வெட்டியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் செல்வராஜுக்கும் அவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் இடையே இருந்த பழக்கத்தை ஏஞ்சலின் தயா பலமுறை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அவரை வெட்டி இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் தேடுவது அறிந்த செல்வராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு தோப்புக்கு டெனிஷாவை வரவழைத்து உள்ளார்
    • மறைத்து வைத்திருந்த வெட்டுகத்தியால் டெனிஷாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி உள்ளார்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் மடிச்சல் ஈத்தவிளை பகுதியை சேர்ந்த டெனிஷா (வயது 22).

    இவர் மார்த்தாண்டம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். அப்போது அங்கு படித்த மார்த்தாண்டம் கல்லுத்தொட்டி பகுதியை சேர்ந்த வெர்ஜின் ஜோஸ்வா (22) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக டெனிஷா, வெர்ஜின் ஜோஸ்வாவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் தாங்கள் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோக்களை தருவதாக மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு தோப்புக்கு டெனிஷாவை வரவழைத்து உள்ளார். அவர் அங்கு வந்தததும் வெர்ஜின் ஜோஸ்வா மறைத்து வைத்திருந்த வெட்டுகத்தியால் டெனிஷாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று உள்ளார்.

    டெனிஷாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மார்த்தாண்டம் போலீசார், வெர்ஜின் ஜோஸ்வாவை தேடி வந்த நிலையில், அவர் விரிகோடு பகுதியில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தலை துண்டாகி தண்டவாளத்தில் கிடந்த வெர்ஜின் ஜோஸ்வாவின் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. டெனிஷாவும், வெர்ஜின் ஜோஸ்வாவும் மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ. வரலாறு 3 ஆண்டுகள் சேர்ந்து படித்துள்ளனர். அப்போது இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். அப்போதே பல இடங்களுக்கு சுற்றி திரிந்து இருவரும் பல்வேறு கோணங்களில் போட்டோக்களை எடுத்து வைத்துக்கொண்டனர். 3 ஆண்டுகள் படிப்பு முடிந்த பின்பு டெனிஷா பி.எட். படிக்க சென்றுள்ளார்.

    வெர்ஜின் ஜோஸ்வா ஒரு சில தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு, ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இந்நிலையில் டெனிஷா வுக்கும், வெர்ஜின் ஜோஸ்வா வுக்கும் இடையே காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது வெர்ஜின் ஜோஸ்வாவின் நடவடிக்கை களில் மாற்றம் ஏற்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.

    இதனால் அவருடன் பேசுவதை டெனிஷா தவிர்த்து வந்துள்ளார். இதில் விரக்தி அடைந்த வெர்ஜின் ஜோஸ்வா, படிக்கும் காலங் களில் எடுத்த போட்டோக்கள் மற்றும் செல்பி எடுத்த போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் அவரை தீவிரமாக காதலிப்பதாக ஓவியங்களை வரைந்து சமூக வலைதளங் களில் பரவ விட்டார். தனக்கு இறுதி ஊர்வலம் நடப்பதாக சவப்பெட்டிகளை வாசகங்களுடன் சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். தான் அவரை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், காதலி தன்னை விட்டு வெகுதூரம் பிரிந்து செல்வதாகவும் அவரது பதிவேற்றங்கள் மற்றும் எழுத்துக்கள் வெளிப்படுத்தி உள்ளது.

    சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை பார்த்த டெனிஷா அதிர்ச்சி அடைந்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து அவர், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களை அழித்து விடும்படியும், மேலும் அவரிடம் இருந்த போட்டோக்களை திருப்பி தந்து விடும்படியும் கெஞ்சி கேட்டுள்ளார். அதற்கு வெர்ஜின் ஜோஸ்வா உன்னுடைய முடிவு எனக்கு தெரிய வேண்டும், நீ என் வீட்டு அருகாமையில் வந்து போட்டோக்களை பெற்றுக்கொள் என கூறி அழைத்துள்ளார். வேறு வழி இன்றி டெனிஷா கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வெர்ஜின் ஜோஸ்வாவை சந்திக்க சென்றுள்ளார்.

    அப்போது ஆள் ஆரவாரம் அற்ற பகுதிக்கு சென்ற டெனிஷா, ஏற்கனவே தீர்க்கமான முடிவில் இருந்த வெர்ஜின் ஜோஸ்வா வாகனத்தில் பெரிய வெட்டு கத்தியை மறைத்து வைத்து காத்திருந்தார். இருவரும் சிறிது நேரம் சிரித்து சிரித்து பேசியதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் திடீரென மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தி எடுத்து அவரை வெட்டி சாய்த்தார். அலறியபடி ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மாணவியின் அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதியில் நின்ற சிறுவன் கத்தி கூச்சலிட்டு உள்ளான்.

    அப்போது மாணவி ஆரவாரம் இன்றி கிடப்பதை பார்த்ததும் வெர்ஜின் ஜோஸ்வா இறந்து விட்டார் என நினைத்து தான் கொண்டு வந்த வெட்டுக்கத்தி மற்றும் 2 மொபைல் போன்களையும் தூக்கி வீசி விட்டு தான் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி அருகில் உள்ள முண்டவிளை ரெயில்வே கிராசின் அருகாமையில் எதிரே வந்த ெரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவில் திருவிழாவில் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.

    விருதுநகர்

    தென்காசி மாவட்டம் தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது33). இவரது மனைவி ராஜ லட்சுமி(25). விருதுநகர் மாவட்டம் மூர்த்தி நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவிக்கும், ராஜலட்சுமி யின் சகோதரர் சதீஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்துள்ளது.

    இது தொடர்பான பிரச்சினையில் 6 மாதங்களுக்கு முன்பு சதீஷ் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து ராஜலட்சுமி மற்றும் மணிமாறன் குடும்பத்தினரிடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்தநிலையில் சொந்த ஊரான வெம்பக்கோட்டை அருகேயுள்ள கொட்டமடக்கி பட்டியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு ராஜலட்சுமி கணவருடன் வந்தார். அங்கு மணிமாறன் சாமியாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அவர் ராஜலட்சுமியை பார்த்ததும் ஆவேசமடைந்து திட்டியுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் ராஜலட்சுமியின் சகோதரி முனீஸ்வரியை மணிமாறன் அரிவாளால் வெட்டினார். அதை தடுக்க வந்த சுரேசுக் கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதனால் காயமடைந்த இருவரையும் அங்கிருந்த வர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக ராஜ லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வெம்பக் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.

    • அரிவாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கீரைத்துரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தான போஸ் ரோந்து பணியில் ஈடுபட்டார். பத்திர காளியம்மன் கோவில் தெரு தண்டவாளம் அருகே சென்ற போது அங்கு சந்தேகப்படும் வகையில் பதுங்கியிருந்த 2 வாலிபர்களை மடக்கினார்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கொலை செய்யும் நோக்கத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் கீரைத்துரை வேத பிள்ளை தெருவை சேர்ந்த முத்து ராமலிங்கம் மகன் ராஜ்குமார் என்ற ராசுக்குட்டி (24), புது மகாளிப்பட்டி ரோடு முத்து கருப்பன் மகன் தாமரை செல்வம் என்ற குட்டைச்செல்வம் (22) என்பதும் தெரிய வந்தது.இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரும் யாரை கொலை செய்ய பதுங்கி இருந்தார்கள்? எதற்காக கொலை செய்ய திட்டமிட்டார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பழைய மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் முத்துகாமாட்சி (வயது 50), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி செல்வி (47). சம்பவத்தன்று குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முத்துகாமாட்சி மனைவியை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ராமேசுவரம் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.
    • அசம்பாவித சம்பவம் நடத்துவதற்காக அரிவாளுடன் சுற்றி திரிந்ததனரா?

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலையில் சிலர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக தமிழ் பல்கலைக்கழகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 6 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் தஞ்சை அடுத்த திருக்கானூர் பட்டியை சேர்ந்த ஆனந்த் (வயது 22), வல்லத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (19), கிஷோர் (29), மேலூரை சேர்ந்த முரளிதரன் (19) மற்றும் 18 வயது சிறுவர்கள் 2 பேர் என்பதும், அரிவாளுடன் சுற்றி திரிந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடத்துவதற்காக அரிவாளுடன் சுற்றி திரிந்ததனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
    • இரணியல் போலீசார் தப்பி ஓடிய ஜெயபாலை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் மேனகா (வயது 39).

    இவரது கணவர் ஜோஸ்லின் பாபு,கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு 12 வயது மகளுடன் வசித்து வந்த மேனகா, 8 ஆண்டுகளுக்கு முன்பு திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (45) என்ற ஓட்டல் தொழிலாளியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 7 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு 2 குழந்தைகளுடன் மேனகா குருந்தன் கோட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று குருந்தன்கோடு வந்த ஜெய பால், ஆலயத்திற்கு சென்று வந்த மேனகா மற்றும் குழந்தைகளை குருந்தன் கோடு கிராம ஊராட்சி சேவை மையம் முன்பு தடுத்து நிறுத்தி வாக்கு வாதம் செய்துள்ளார்.

    மேலும் மகனை தன்னு டன் அனுப்ப கூறி தகராறு செய்து உள்ளார். ஆனால் மகனை கொடுக்க மேனகா மறுத்தார். இதனால் ஆத்தி ரம் அடைந்த ஜெயபால் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மேனகாவை வெட்டினார்.

    இதில் மேனகாவுக்கு கழுத்து, நாடி, முதுகு, விரல் உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. அவரது 12 வயது மகள் தலையிலும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே ஜெயபால் தப்பி ஓடி விட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த மேனகா மற்றும் அவரது மகளைஅங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்து வர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மேனகாவின் உறவுப் பெண் சிஜி (27) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய ஜெயபாலை தேடி வருகின்றனர்.

    • விவசாயியை அரிவாளால் வெட்டிய பெண் உள்பட 4 பேருக்கு வலை வீசி தேடி வருகின்றனர்.
    • 4 மாதங்களுக்கு முன்பு முருகன் மகன் தமிழரசனை கைது செய்தது தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது

    மதுரை

    மதுரை மேலூரை அடுத்த வண்ணம்பாறைபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), விவசாயி. இவர் சம்ப வத்தன்று மாலை வீட்டில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகன் (49), அவரது மனைவி செல்வி (45) மற்றும் மகன்கள் மீனாட்சி சுந்தரேஸ் (19), தமிழரசன் (18) ஆகிய 4 பேரும் கும்பலாக வந்து தங்களை பற்றி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு உளவு கூறியதாக தகராறு செய்து ரமேசை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இது தொடர்பாக ரமேஷ் கீழவளவு போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    இதில், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முருகன் மகன் தமிழரசனை கைது செய்தது தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

    இதன் அடிப்படையில் ரமேசை வெட்டியதாக முருகன், அவரது மனைவி செல்வி, மகன்கள் மீனாட்சி சுந்தரேஸ், தமிழரசன் ஆகிய 4 பேரையும் கீழவளவு போலீசார் தேடி வருகின்றனர்.

    ×