search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், அரிவாளுடன் சுற்றித்திரிந்த 6 பேர் கைது
    X

    தஞ்சையில், அரிவாளுடன் சுற்றித்திரிந்த 6 பேர் கைது

    • போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.
    • அசம்பாவித சம்பவம் நடத்துவதற்காக அரிவாளுடன் சுற்றி திரிந்ததனரா?

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலையில் சிலர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக தமிழ் பல்கலைக்கழகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 6 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் தஞ்சை அடுத்த திருக்கானூர் பட்டியை சேர்ந்த ஆனந்த் (வயது 22), வல்லத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (19), கிஷோர் (29), மேலூரை சேர்ந்த முரளிதரன் (19) மற்றும் 18 வயது சிறுவர்கள் 2 பேர் என்பதும், அரிவாளுடன் சுற்றி திரிந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடத்துவதற்காக அரிவாளுடன் சுற்றி திரிந்ததனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×