search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிவாளுடன் பதுங்கியிருந்த  2 வாலிபர்கள் கைது
    X

    அரிவாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது

    • அரிவாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கீரைத்துரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தான போஸ் ரோந்து பணியில் ஈடுபட்டார். பத்திர காளியம்மன் கோவில் தெரு தண்டவாளம் அருகே சென்ற போது அங்கு சந்தேகப்படும் வகையில் பதுங்கியிருந்த 2 வாலிபர்களை மடக்கினார்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கொலை செய்யும் நோக்கத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் கீரைத்துரை வேத பிள்ளை தெருவை சேர்ந்த முத்து ராமலிங்கம் மகன் ராஜ்குமார் என்ற ராசுக்குட்டி (24), புது மகாளிப்பட்டி ரோடு முத்து கருப்பன் மகன் தாமரை செல்வம் என்ற குட்டைச்செல்வம் (22) என்பதும் தெரிய வந்தது.இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரும் யாரை கொலை செய்ய பதுங்கி இருந்தார்கள்? எதற்காக கொலை செய்ய திட்டமிட்டார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×