search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம்"

    • மின் ஊழியர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    சுசீந்திரம் அருகே உள்ள பரப்புவிளையை சேர்ந்தவர் ஜெயசிங், கட்டிட தொழிலாளி. இவரது மகன் விஷ்வா (வயது 15). இவன் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    நேற்று இவன், தனது நண்பர்களுடன் பழை யாற்றில் பெருக்கெ டுத்து ஓடும் வெள்ளத்தை பார்க்க சென்றான். வேகமாக சென்றபோது எதிர்பாராத விதமாக சறுக்கி விழுந்த விஷ்வா, அருகில் உள்ள மின் கம்பத்தை பிடித்துள் ளான். அப்போது மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தான்.

    அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின் ஊழியர்களின் கவனக் குறைவே, மாணவன் விஷ்வா மின்சார தாக்குத லுக்கு ஆளானதற்கு கார ணம் என அந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

    மேலும் அவர்கள் நாகர் கோவில்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் ஆசிராமம் சந்திப்பு பகுதி யில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்ட னர். அப்போது அங்கு வந்த சுசீந்திரம் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்படும் கட்டிடத்திற்கு மின் இணைப்பு கொடுத்த போது, ஒரு வயர் கீழே விழுந் துள்ளது. அதனை முறையாக சரி செய்யாமல், மின் கம்பத்தில் மின் ஊழியர்கள் சுற்றி வைத்துச்சென்றனர். இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்ட போதும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அந்த மின்கம் பத்தை மாணவன் விஷ்வா தொட்டதால் தான் மின்சா ரம் தாக்கி உள்ளது. எனவே மின் ஊழியர்களின் கவ னக்குறைவே இந்த விபத் துக்கு காரணம் என்றனர்.

    இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி விசாரணை நடத்தி மின் ஊழியர்கள் ஆண்டாள்புரம் கெர்வின் (26), குலசேகரன்புதூர் சதீஷ் (40) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலியானார்.
    • கணபதி பாண்டூர் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா உ.நெமிலி பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 28)கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று வழக்கம் போல் நெமிலி அருகே பாண்டூர் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கொடுத்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாளை 13ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
    • திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.

    அவிநாசி:

    அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின்கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நாளை 13ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    இதில், திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.

    இதில், மின்நுகா்வோா் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி தெரிவித்துள்ளாா். 

    • மின்சாரம் தாக்கியதில் கபிலேஷ் சம்பவ இடத் திலேயே இறந்தார்.
    • அவர்களது குடும்பத்தினரிடம் மேல் சிகிச்சைக்காக நிதி உதவிகளை வழங்கி னார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி கிராமத்தில் கடந்த 7-ம் தேதி இரவு நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி நிகழ்ச்சியில் பரமக்குடி சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன்கள் கோகுல், ராகுல் (10) கபி லேஷ் (7) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கிய தில் கபிலேஷ் சம்பவ இடத் திலேயே இறந்தார். இதில் படுகாயம் அடைந்த கோகுல், ராகுலை மதுரை தனியார் மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவர்களை அமைச்சர் ராஜகண்ண ப்பன் சார்பில் அவரது மகன் மருத்துவர் திலீப் ராஜகண்ணப்பன் இறந்த கபிலேஷ் குடும் பத்தினிரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கோகுல், ராகுலை பார்த்து விட்டு அவர்களது குடும்பத்தினரி டம் மேல் சிகிச்சைக்காக நிதி உதவிகளை வழங்கி னார்.

    இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புது வீட்டுக்கு வந்த உமாபதி, ஈரக்கையோடு சுவிட்ச் போர்டில் பிளக்கை சொறுகினார்.
    • சிகிச்சை பலனின்றி உமாபதி பரிதாபமாக இறந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராபுரம் ஊராட்சி நடுத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன்.

    இவரது மனைவி உமாபதி (வயது 45).

    இவர்கள் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த வீட்டில் மின்விசிறி போடுவதற்கு சுவிட்ஜ் அமைக்கப்பட்டது.

    அப்போது புது வீட்டுக்கு வந்த உமாபதி, ஈரக்கையோடு சுவிட்ஸ் போர்டில் பிளக்கை சொறுகினார்.

    இதில் மின்சாரம் தாக்கி உமாபதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி உமாபதி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கீழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவியின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூ.25 ஆயிரம் வழங்கினார்.
    • ஜோஸ்லின் ஹெனியா செரங்காட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    திருப்பூர்:

    திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துபட்டியை சேர்ந்தவர் டேவிட்ராஜ்-ரூபிஜெனிபர். இந்த தம்பதியின் மகள் ஜோஸ்லின் ஹெனியா (வயது 14). டேவிட்ராஜ் தனது குடும்பத்துடன் திருப்பூர் செரங்காட்டில் குடியிருந்து வருகிறார்.

    இவருடைய மகள் ஜோஸ்லின் ஹெனியா செரங்காட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி கழிவறைக்கு சென்ற போது மின்சாரம் தாக்கி காயம் அடைந்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மாணவிக்கு செவித்திறன் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

    மேலும் கழுத்து, கை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த மேயர் தினேஷ்குமார் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ செலவை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அது மட்டுமின்றி அந்த மாணவியின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூ.25 ஆயிரம் வழங்கினார்.

    • இருமத்தூர் துணைமின் நிலையத்தில் நாளை 24-ந்தேதி வியாழக்கிழமை மாதாந்திர பரா மரிப்பு பணிகள் நடைபெறு கிறது.
    • நாளை 24-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநி யோகம் நிறுத்தம் செய்யப் படுகிறது.

    மொரப்பூர்,  

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற் பொறி யாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டு ள்ளதாவது:-

    இருமத்தூர் துணைமின் நிலையத்தில் நாளை 24-ந்தேதி வியாழக்கிழமை மாதாந்திர பரா மரிப்பு பணிகள் நடைபெறு கிறது. அதனால் கம்பைநல்லூர், பூமி சமுத்திரம், க. ஈச்சம் பாடி, சொர்ணம்பட்டி, மாவடிபட்டி, மல்ல சமுத்தி ரம், செங்குட்டை, சமத்துவ புரம், அக்ரஹாரம், முத்தம் பட்டி, மல்லம்மா புரம், பள்ளம்பட்டி, பெரிச்சா கவுண்டம்பட்டி, காட்ட னூர், சொர்னம்பட்டி, பட்டாக பட்டி, பெரம் மாண்டப்பட்டி, கெலவள்ளி, கொங்கரப் பட்டி, கூடு துறைபட்டி, பள்ளத்தூர், மரியம்பட்டி, கோணம்பட்டி, காடை யாம்பட்டி, வகுரப்பம்பட்டி, பள்ளிப்பட்டி, இருமத்தூர், வாடமங்கலம், கொன்றம் பட்டி மற்றும் திப்பம்பட்டி ஆகிய கிராமங்களுக்கும் நாளை 24-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநி யோகம் நிறுத்தம் செய்யப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே போல் கடத்தூர், ஆர்.கோபிநாதம்பட்டி ஆகிய துணை நிலையத்தில் நாளை மாதாந்தி பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் கடத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கடத்தூர், புளியம் பட்டி, ரேக அல்லி, சுங்கர அள்ளி, தேக்கல்நாயக்கன் பட்டி, நத்த மேடு, புதுரெட்டியூர், நல்ல குட்டல அள்ளி, முத்தனூர், மணியம்பாடி, கதிர் நாயக்கன் அல்லி , ராணி மூக்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலும், ஆர்.கோபிநாதம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பொம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, கருத்தங்குளம், சுந்தரம் பள்ளி ஆகிய கிராமங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களிலும்மின் கம்பிகளின் தரம் உயர்த்தும் வேலைகள் நடைபெறு வதால், நாளை வியாழக் கிழமை 24-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தும் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறி யாளர் சுரேஷ் தெரிவித்து ள்ளார்.

    • வீட்டில் மின்மோட்டாரை தங்கராசு இயக்கினார்.
    • அப்போது எதிர்பாராவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன் கோட்டகம் வடபாதி முதலியார் தெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது50).

    இவர் திருத்துறைப்பூண்டியில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். நேற்று காலை தனது வீட்டில் மின்மோட்டாரை தங்கராசு இயக்கினார்.

    அப்போது எதிர்பாராவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தங்கராசு மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே தங்கராசு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தங்கராசு குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தங்கராசுவுக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    • ரமேஷ் தனியார் கம்பெனியில் கடந்த 8 மாதமாக டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
    • மின்கம்பி மீது பட்டு மின்சாரம் பாய்ந்து டிரைவர் ரமேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உடல் கருகி இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் ஏழுமலைகவுன்டர்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 36) டிரைவர். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை குருபீடபுரம் கூந்தலூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 8 மாதமாக டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று கொட்டையூர் பகுதியில் உள்ள கல்குவாரியில் கற்களை டிப்பர் லாரியில் ஏற்றிகொண்டு மீண்டும் கம்பெனிக்கு வந்தார்.

    அப்போது டிப்பர் லாரியின் பின்பக்க டோர் சரியாக மூட வில்லை. இதனால் டிப்பர் லாரியின் பின்புற கதவை தூக்கும்போது மேலே சென்ற மின்கம்பி மீது பட்டு மின்சாரம் பாய்ந்து டிரைவர் ரமேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உடல் கருகி இறந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து எடைக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் ஓடிக்கொண்டிருந்த டேபிள் பேன் வயரை பிடித்துள்ளது.
    • அப்போது மின் வயரில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வீரணம்பாளையத்தில் உள்ள ஒரு தம்பதியினரின் ஒரு வயது குழந்தை சம்பவத்தன்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் ஓடிக்கொண்டிருந்த டேபிள் பேன் வயரை பிடித்துள்ளது. அப்போது மின் வயரில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது.

    குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து எழுந்த பெற்றோர் மின்சாரம் தாக்கி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த குழந்தையை உடனடியாக மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கடந்த ஒரு வாரமாக சுயநி னைவு சுயநினைவு இல்லாமல் இருந்த அக்குழந்தை இறந்து விட்டது. இது குறித்த செய்தி வாட்ஸ் அப்பில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குழந்தைகள் உள்ள வீட்டில் மின் உபகரணங்களை பயன்படுத்தும் போது குழந்தை களுக்கு எட்டாத வகையில் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம் என மின்சார துறையினர் கேட்டு கொண்டு உள்ளனர்.

    • சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அழகன். இவரது மனைவி பட்டு(வயது68). இவர் சம்பவத்தன்று தனது கன்று குட்டியை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஓட்டிச்சென்றார். அப்போது, வயல்வெளி பகுதியில் அறுந்து கிடந்த உயர்மின் அழுத்த கம்பியை தெரியாமல் மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மின் இணைப்பை துண்டித்து விட்டு அவரை மீட்டனர்.
    • சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுப்பாளையம் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மோகன் பாபு(வயது24) விவசாயி ஆவார். இந்நிலையில்,நேற்று இரவு இப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்பொழுது மின்சார ஒயர் ஒன்று அறுந்து வயல்வெளியில் விழுந்து கிடந்தது. இன்று காலை வழக்கம் போல் புதுப்பாளையம் கிராமம், முருகர் கோவில் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு மோகன் பாபு சென்றார். அப்பொழுது அங்கு அறுந்து கிடந்த மின்சார ஒயரை எதிர்பார்க்காமல் மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் தாக்கியதால் கூக்குரல் இட்ட வண்ணம் அலறி துடித்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மின் இணைப்பை துண்டித்து விட்டு அவரை மீட்டனர்.

    ஆனால்,அதற்குள் அவர் இறந்து போனார். தகவல் அறிந்த ஆரணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியான மோகன் பாபு உடலை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×