பரமத்திவேலூர் அருகே பரிதாபம்டேபிள் பேன் வயரை பிடித்த குழந்தை மின்சாரம் தாக்கி சாவு

இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் ஓடிக்கொண்டிருந்த டேபிள் பேன் வயரை பிடித்துள்ளது. அப்போது மின் வயரில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது.
பரமத்திவேலூர் அருகே பரிதாபம்டேபிள் பேன் வயரை பிடித்த குழந்தை மின்சாரம் தாக்கி சாவு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வீரணம்பாளையத்தில் உள்ள ஒரு தம்பதியினரின் ஒரு வயது குழந்தை சம்பவத்தன்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் ஓடிக்கொண்டிருந்த டேபிள் பேன் வயரை பிடித்துள்ளது. அப்போது மின் வயரில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து எழுந்த பெற்றோர் மின்சாரம் தாக்கி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த குழந்தையை உடனடியாக மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கடந்த ஒரு வாரமாக சுயநி னைவு சுயநினைவு இல்லாமல் இருந்த அக்குழந்தை இறந்து விட்டது. இது குறித்த செய்தி வாட்ஸ் அப்பில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் உள்ள வீட்டில் மின் உபகரணங்களை பயன்படுத்தும் போது குழந்தை களுக்கு எட்டாத வகையில் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம் என மின்சார துறையினர் கேட்டு கொண்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com