search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மான்"

    • கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகின்றன.
    • மானின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பீலிக்காம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

     காங்கயம் :

    காங்கயம்-தாராபுரம் சாலையில் உள்ள ஊதியூா் மலையில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகின்றன. இந்நிலையில் ஊதியூா் வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு வெளியேறிய புள்ளிமான் குண்டடம் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மானின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பீலிக்காம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    குடிநீர் தேடி வனங்களில் இருந்து வெளியேறும் விலங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. எனவே வனங்களில் குடிநீா்த் தொட்டி அமைத்து தண்ணீா் நிரப்ப வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

    • வாகனம் மோதி மான் பரிதாபமாக இறந்தது.
    • நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகைகள் வைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் அதிக அளவில் மான்கள் நடமாட்டம் உள்ளது. நகரின் எல்லை பகுதியில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.இதில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர்.

    அமராவதி புதூரில் இருந்து புளியால் வரை உள்ள காட்டுப் பகுதிகளில் மான்கள் அதிகமாக உள்ளது. இந்தப் பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு தண்ணீர் குடிப்பதற்காக மான்கள் நெடுஞ்சாலையைக் கடந்து வருவது வழக்கம்.

    அப்படி கடந்து வரும் போது வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை தேவகோட்டை அருகே திருச்சி-ராமேசு வரம் தேசிய நெடுஞ்சாலையில் மாரிச்சான்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் மான் ஒன்று இறந்து கிடந்தது.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மானின் உடலை மீட்டுச் சென்றனர்.

    மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், நெடுஞ்சாலை ஓரங்களில் மான்கள் நடமாட்டம் குறித்தும், வேகக்கட்டுபாடுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தும் வகையிலும் எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது.
    • மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.

    ஏற்காடு:

    ஏற்காடு வனப்பகுதியில் மான்கள். காட்டெருமை, குரங்கு போன்ற வனவிலங்குகள் இருக்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் ஏற்காடு பெட்பெட் ரோடு பகுதியில் பூசாரி தோட்டம் என்னும் தனியார் தோட்டத்தில் ஆண் மான் ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தது. இதை தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்கள் பார்த்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.இதை தொடர்ந்து வனவர் சக்தி வேல் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மானை கைப்பற்றி ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தார்.

    இது குறித்து ஏற்காடு வனக்காப்பாளர் பழனிவேல் கூறுகையில், இறந்த மானுக்கு சுமார் 4 வயது இருக்கும். மர்ம விலங்கு கடித்ததில் மான் இறந்துள்ளது. மர்ம விலங்கு வீடுகளில் வளர்க்கப்படும் நாயாக இருக்கலாம். எனி னும் கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தால் தான் அந்த மான் இறப்பு குறித்து தெரியவரும் என்றார்.

    • வனக்காப்பாளரிடம் புள்ளிமான் ஒப்படைக்கப்பட்டது.
    • கண்மாய் கரையில் புள்ளிமான் செத்து கிடந்தது.

    புதுக்கோட்டை,

    காரையூர் அருகே அரசமலை சம்புருதி கண்மாய் கரையில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், அங்கு விரைந்து சென்ற அரசமலை வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன் ஆகியோர் கிராம உதவியாளர்களுடன் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த வனக்காப்பாளர் கனகவள்ளியிடம் புள்ளிமான் ஒப்படைக்கப்பட்டது.

    • காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரியும் மான்கள் மற்றும் மயில்கள் பயிர்களை அழித்து நாசம் செய்துவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
    • மான்கள் இருப்பதை 50 கி. மீ., தொலைவில் இருக்கும் சிறுத்தைகள் மோப்ப சக்தியால் கண்டுகொள்கிறது.

     அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளன. கடந்த 40, 50 ஆண்டுகளுக்கு முன் தென்னை, வாழை, மஞ்சள், நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செழித்து வளர்ந்து எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் விரித்தாற்போல் லேசான காற்றுக்கு பயிர்கள் அசைவது ரம்மியமாக காட்சியளிக்கும். காலப்போக்கில் பருவமழை சரிவர பெய்யாமல் விவசாயம் நலிவடைந்த நிலையில் பலர் திருப்பூர் போன்ற நகரங்களில் வெவ்வேறு தொழில்களை நாடிச்சென்றனர். இருப்பினும் பழமையை மறவாமல் விவசாயம்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அங்கம் என்ற நோக்கில் பல இன்னல்களுக்கிடையே சில விவசாயிகள் மனம் தளராமல் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பயிர்களை நல்லமுறையில் பாதுகாத்து இரவு விடியவிடிய கண்விழித்து தண்ணீர் பாய்ச்சி, உரம் வைத்து நல்லமுறையில் பயிர்களை பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தோட்டம் ,காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரியும் மான்கள் மற்றும் மயில்கள் பயிர்களை அழித்து நாசம் செய்துவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில் ,முன்பெல்லாம் தோட்டம், காடுகளில் விவசாயதொழிலுடன் ஆடு,மாடு, கோழிவளர்ப்பில் ஈடுபடுவார்கள். நாகரீக உலகத்தில் தற்போது நாட்டுக்கோழி, ஆடுகள் வளர்ப்பது மறைந்துவருகிறது. அதேசமயம் மான், மயில்கள் தோட்டத்திற்குள் புகுந்து விவசாயபயிர்களை நாசம் செய்துவிடுகிறது. அரும்பாடுபட்டு வளர்த்த பயிர்கள் நாசமாவதுடன் எங்கள் பாடு வீணாகி பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மட்டுமே மான்கள் இருந்த நிலையில் இப்போது அவினாசி ஒன்றியத்தில் 40 கி.மீ சுற்றளவிற்கு தோட்டம் ,காடுகளில் மான்கள், மயில்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த மான்கள் இருப்பதை 50 கி. மீ., தொலைவில் இருக்கும் சிறுத்தைகள் மோப்ப சக்தியால் கண்டுகொள்கிறது. எனவேதான் சிறுத்தை நடமாட்டம் தொடங்கிவிட்டது. வாழ்நாள் முழுவதும் மான், மயில்களுடன் போராடுவது போதாதென்று தற்போது எந்த நேரத்தில் தோட்டப்பகுதிக்குள் சிறுத்தை வருமோ என்ற அச்சத்தில் உள்ளோம்

    மான், மயில்களின்தொந்தரவை கட்டுப்படுத்த அரசு,விவசாயத்துறை, தோட்டக்கலை துறையினரிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் அதற்குஎந்த முயற்சியும் எடுப்பதில்லை. அரசும் கண்டுகொள்வதில்லை. இவர்கள் இதற்கு தீர்வுகாண அவினாசி ஒன்றியத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றுதிரண்டு சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வது ஒன்றுதான் வழிஎன்றனர்.

    • வாகனம் மோதி மான் பலியானார்.
    • பின்னர் ராயபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு கட்டி வைத்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே ராயபாளையம், சமத்து வபுரம், சிவரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இரை தேடி வரும் மான்கள் நாய்களால் வேட்டையாட பட்டும், சாலை விபத்தில் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை ராயபாளையம் கிராமத்தில் இரை தேடி வந்த 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமானை அப்பகுதியில் இருந்த நாய்கள் துரத்தி கடித்தன. இதை கண்ட கிராம மக்கள் நாய்களை துரத்திவிட்டு மானை மீட்டனர். பின்னர் ராயபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு கட்டி வைத்தனர்.

    இதுபற்றி சாப்டூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வனவர் ஜெய்சங்கர் தலை மையிலான வனத்துறை அலுவலர்கள் வந்து கயமடைந்த மானுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதேபோல் திருமங்கலம் -விருதுநகர் 4 வழிச்சாலையில் மேலக்கோட்டை தனியார் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஊரணியில் தண்ணீர் அருந்திவிட்டு சாலையை கடக்க முயன்ற ஒரு புள்ளி மான் விபத்தில் பலியானது. இந்த புள்ளிமான் விருதுநகரில் இருந்து மதுரைக்குச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது. இது பற்றி தகவல் கிடைத்தது. சாப்டூர் வனவர் ஜெய்சங்கர் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் மானை மீட்டு பிேரத பரிசோதனைக்கு கொண்டுச்சென்றனர்.

    திருமங்கலம் அருகே ஒரே நாளில் நாய்கள் கடித்து ஆண் புள்ளிமான் காயமடைந்த சம்பவமும், வாகன விபத்தில் சிக்கி பெண் புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் அலட்சியம் செய்யாமல் திருமங்கலம் பகுதியில் வனச்சரகம் அமைத்து வனவிலங்குகளை காக்க வேண்டும் என்று கூறினர்.

    • உப்பு கரை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளுக்கு 2 மான்கள் வந்தன.
    • கூட்டமாக நுழையும் மான்களை விவசாயிகளால் கட்டுப்படுத்த முடிவதில்லை.

    திருப்பூர் :

    சில ஆண்டுகளுக்கு முன் பொங்கலூர் கண்டியன்கோவில் பகுதியில் உள்ள உப்பு கரை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளுக்கு 2 மான்கள் வந்தன.தற்போது அவை பல்கி பெருகி பெரும் கூட்டமாக உருவெடுத்துள்ளன.

    அவை விளை நிலங்களில் புகுந்து விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களை சேதப்படுத்துகின்றன. விவசாயிகளுக்கு இதனால் கணிசமான இழப்பு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் கூட்டமாக நுழையும் மான்களை விவசாயிகளால் கட்டுப்படுத்த முடிவதில்லை.இதே நிலை தொடர்ந்தால் இன்னும் பல மடங்கு பெருகிவிடும். மான்கள் கூட்டம் பெருகினால் விவசாயம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும்.

    அவற்றை பிடித்து வனப்பகுதியில் விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தண்ணீர் குடிப்பதற்காக திருச்சி-அரியலூர் சாலையை கடக்க முயன்ற போது, அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் பலத்த காயமடைந்தது.
    • வனத்துறையினர் மானை மீட்டு சிகிச்சைக்காக கீழப்பழுவூர் கால் நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த தவுத்தாய்குளம் அருகேயுள்ள வனப் பகுதியில் இருந்து 3 வயது மதிக்கதக்க புள்ளிமான் ஒன்று அங்குள்ள ஏரியில் தண்ணீர் குடிப்பதற்காக திருச்சி-அரியலூர் சாலையை கடக்க முயன்ற போது, அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் பலத்த காயமடைந்தது.

    இதையறிந்த அப்பகுதி வழியாகச் சென்றவர்கள், இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மானை மீட்டு சிகிச்சைக்காக கீழப்பழுவூர் கால் நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    ×