search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் படுகாயம்
    X

    அரியலூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் படுகாயம்

    • தண்ணீர் குடிப்பதற்காக திருச்சி-அரியலூர் சாலையை கடக்க முயன்ற போது, அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் பலத்த காயமடைந்தது.
    • வனத்துறையினர் மானை மீட்டு சிகிச்சைக்காக கீழப்பழுவூர் கால் நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த தவுத்தாய்குளம் அருகேயுள்ள வனப் பகுதியில் இருந்து 3 வயது மதிக்கதக்க புள்ளிமான் ஒன்று அங்குள்ள ஏரியில் தண்ணீர் குடிப்பதற்காக திருச்சி-அரியலூர் சாலையை கடக்க முயன்ற போது, அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் பலத்த காயமடைந்தது.

    இதையறிந்த அப்பகுதி வழியாகச் சென்றவர்கள், இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மானை மீட்டு சிகிச்சைக்காக கீழப்பழுவூர் கால் நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    Next Story
    ×