search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம காய்ச்சல்"

    • பருவ காலத்தில் காய்ச்சல் உச்சம் தொடுவதற்கு முன்பே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
    • காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அனைவருக்கும் இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்காது.

    சென்னை:

    பருவகால மாற்றம் தொற்று நோய்கள் பரவுவதற்கு ஏற்றகாலம். சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்வதால் மழைக் காலத்தில் பரவும் காய்ச்சல், வயிற்றுபோக்கு போன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

    வைரஸ் காய்ச்சல் மட்டு மில்லாமல் விஷக்காய்ச்சலும் பரவுவதால் காய்ச்சல் தானே, வரும் போகும் என்று சாதாரணமாக இருப்பதும் ஆபத்தை ஏற்படுத்தி விடும். விஷகாய்ச்சலாக இருந்தால் கர்ப்பிணிகள், வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் ஆகியோரை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கி விடும். ரத்த நாளங்கள் உள்பட உடலில் பல பாகங்களில் வீக்கத்தை உருவாக்கும். இதனால் பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

    எனவே காய்ச்சல் கண்டவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது. காய்ச்சல் கண்டவர்கள் இருமல், சளி, உடல் வலி ஆகியவற்றால் ஒருவாரத்துக்கும் மேலாக அவதிப்படுகிறார்கள்.

    இந்த மாதிரி காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகள் வந்தால் சுகாதாரத் துறை கண்காணிக்க வேண்டும். உடனடியாக சம்பந்தப்பட்ட வரை பரிசோதித்து வைரஸ் தாக்குதலா? பாக்டீரியாவா? என்ன வகை காய்ச்சல்? தண்ணீர் மூலம் பரவி உள்ளதா? உணவு மூலம் வந்துள்ளதா? என்பதை கண்டறிந்து உடனடியாக அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.

    கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டதை போல் பருவகால காய்ச்சல் மற்றும் நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்து கொள்ள ஆண்டுதோறும் பருவகாலம் தொடங்குவதற்கு முன்பே நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என்கிறார்கள் டாக்டர்கள்.

    இது ரூ.700 முதல் ரூ.1000 வரை விலை உடையது. அதிலும் வயதானவர்கள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், சர்க்கரை நோயாளிகள் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது என்கிறார்கள்.

    இந்த மாதிரி தடுப்பூசி போட்டுக் கொள்வதால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான ஆபத்துக்களை தவிர்க்க முடியும் என்கிறார்கள்.

    இந்த மாதிரி தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 70 சதவீதம் பேர் உயிர் ஆபத்துக்களில் இருந்து தப்புகிறார்கள்.

    இந்த தடுப்பூசி போடுபவர்கள் கடந்த பருவகாலத்தில்தானே போட்டோம் என்று விட்டு விடுவதால் எந்த பலனும் இல்லை. பருவ காலத்தில் காய்ச்சல் உச்சம் தொடுவதற்கு முன்பே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    ஆண்டுதோறும் இந்த மாதிரி விஷ காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி ஏராளமானவர்களை தாக்குகிறது. இதில் பலர் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்படும் அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள்.

    இதன் அறிகுறி கடுமையான காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தலைவலி, இருமல், உடல் மற்றும் மூட்டுவலி, வாசனை இழப்பு போன்றவையாகும்.

    காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அனைவருக்கும் இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்காது. பொதுவாக வைரஸ் காய்ச்சல் மூச்சு காற்று மூலம் பரவுகிறது. எனவே காய்ச்சல் வராமல் தடுக்கவும், பரவுவதை தவிர்க்கவும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி டாக்டர்கள் கூறியதாவது:-

    * கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்க வேண்டும்.

    * குடிநீர் பாதுகாப்பானதாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    * தெருவோரங்களில் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    * முக கவசம் அணிதல், கூட்டங்களை தவிர்த்தல் நல்லது.

    * வீடுகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

    * ஆண்டுதோறும் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    * வயதானவர்கள் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.

    • கடந்த மாதம் பெய்த மழையின்போது டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.
    • ஈக்கள் மூலம் 600 வகையான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுகின்றன.

    சென்னை:

    சென்னையில் கடந்த மாதம் வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென்று பலத்த மழையும் பெய்தது. இந்த திடீர் தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் சென்னையில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

    பலருக்கு காய்ச்சலுடன் தொண்டைவலி, சளி, இருமல் உள்ளிட்ட உடல்நிலை பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் மர்ம காய்ச்சல் பரவுவதால் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் புற நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து வருகிறது.

    இது பெரும்பாலும் சாதாரண பாதிப்புகள் என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு பலவித உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    மேலும் கடந்த மாதம் பெய்த மழையின்போது டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.

    மேலும் சென்னையில் ஈக்களின் பெருக்கமும் அதிகரித்து விட்டது. ஈக்கள் அதிக அளவில் பெருகியதால் அதன்மூலம் வாந்தி, பேதி, காலரா, டைபாய்டு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பழங்கள், மீன், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஈக்கள் மொய்ப்பதால், அந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஈக்கள் மூலம் 600 வகையான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுகின்றன. இந்த தொற்றுக்களே வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன.

    சென்னையில் அதிகரித்து வரும் மர்ம காய்ச்சலால் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சை பெறவருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஈக்கள் மூலமே அதிக நோய் பரவுகிறது.

    எனவே மீன் மற்றும் இறைச்சிகளை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகளை நன்றாக அலசியபின் சாப்பிடலாம். ஈக்கள் மொய்க்கும் இடங்களில் உணவுப்பொருட்களை வைக்கக் கூடாது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் கொசு மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் மழைநீர் வடிகால் தொட்டி, வடிகால், நீர்நிலைகள், குப்பை தொட்டிகள் இருக்கும் பகுதிகளில் மருந்து தெளிக்கப்படுகிறது. கொசு புகையும் அடிக்கப்படுகிறது. பொதுமக்களும் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்" என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மர்மக் காய்ச்சலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களுக்கும் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • மர்மக்காய்ச்சல் குறித்து மக்களிடம் எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஒரு வகையான மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. மர்மக் காய்ச்சலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களுக்கும் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆனால், மர்மக்காய்ச்சல் குறித்து மக்களிடம் எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டுவதும், மாலை நேரங்களில் மழை பெய்வதுமான மாறுபட்ட காலநிலை தான் மர்மக் காய்ச்சலுக்குக் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    தமிழகத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் குறித்து மக்களிடம் ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அனைத்து கிராமங்களிலும் அதிக எண்ணிக்கையில் மருத்துவ முகாம்களை நடத்தி, மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குழந்தை அப்ரினுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது.
    • மர்ம காய்ச்சல் பாதிப்பால் குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் வசித்து வருபவர் நஜீபுத்தீன். இவரது மனைவி இம்ரான்பேகம். இவர்களுக்கு 11 மாதத்தில் அப்ரின் என்று பெண் குழந்தை இருந்தது.

    இவர்களது சொந்த ஊர் அசாம் மாநிலம் ஆகும். நஜீபுத்தீன் தேர்வாய் கண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் குழந்தை அப்ரினுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறைய வில்லை.

    இதையடுத்து குழந்தை அப்ரினை ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

    மர்ம காய்ச்சல் பாதிப்பால் குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுகாதார அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

    • 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    • வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அனைவருக்கும் பரவி வருவதாக கூறினார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட உப்பளம், பரிக்கப்பட்டு ஆகிய கிராமங்களில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 5 பேருக்க டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு வாரத்திற்கு உடல்வலியும், கை, கால் மூட்டு வலியும் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்து உள்ளனர். மேலும் வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அனைவருக்கும் பரவி வருவதாக கூறினார்கள்.

    இதைத்தொடர்ந்து காய்ச்சல் பரவிய உப்பளம், பரிக்கப்பட்டு கிராமங்களில் சுகாதாரப் பணி மாவட்ட துணை இயக்குனர் ஜவகர்லால், மீஞ்சூர் வட்டார மருத்துவர் மகேந்திரவர்மன் தலைமையில், 4 மருத்துவர்கள், 5 செவிலியர்கள் மருத்துவ முகாமிட்டு பரிசோதனை செய்து வருகிறார்கள். அதிக காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் கொசு மருந்து அடித்தல், வீடு வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்றுதல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல், தெருக்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த வகையான வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது என்று கண்டறியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரப் பணி மாவட்ட துணை இயக்குனர் ஜவகர்லால் கூறியதாவது:-

    பொதுமக்கள் சேமித்து வைக்கின்ற தண்ணீரை மூடி வைக்க வேண்டும். வாரம் இரு முறை தண்ணீரை மாற்ற வேண்டும். குளிர்சாதன பெட்டியின் பின்பக்கம் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். இதனை சரியாக செய்யாததே அதிகமான வீடுகளில் காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக உள்ளது. காய்ச்சல் பாதித்த பொதுமக்கள் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். தன்னிச்சையாக கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடக்கூடாது. பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள் கொடுத்தால் சம்பந்தப்பட்ட மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகளில் அனைத்து வகை பரிசோதனையும் செய்யப்படும். மேலும் மலேரியா நிபுணர் குழுவும் ஆய்வு செய்து வருகிறது. கிராமங்களில் காய்ச்சல் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில மாதங்களாக மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • சிறுமி உயிரிழப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் ராஜபாண்டி நகர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார்.

    உடனே சிறுமியை மீட்டு அவரது குடும்பத்தினர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடந்த சில மாதங்களாக மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், பலியான சிறுமி கடுமையாக காய்ச்சல் பாதிப்பிற்கு பிறகே அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தார். காய்ச்சல் பாதிப்பு முற்றிய நிலையில் இருந்தது. டெங்கு காய்ச்சலால் சிறுமி இறக்கவில்லை என்றார்.

    • கடுமையான பனிப்பொழிவு போன்ற சீதோசன மாற்றம் ஏற்பட்டுள்ளது.
    • தனியார் மருத்துவமனைகளும் பெரு மளவு குவிந்து வருகின்றனர்

    பாப்பிரெட்டிப்பட்டி, 

    தருமபுரி மாவட்டத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதாலும், அதிகாலை நேரத்தில் கடுமையான பனிப்பொழிவு போன்ற சீதோசன மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாகவும் பள்ளி குழந்தைகள், பெரியவர்கள், வயதான வர்கள் என பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், அரூர், மொரப்பூர், தருமபுரி அதனை ஒட்டி உள்ள நூற்றுக்கணக்கான கிராமப் பகுதிகளில் பெருமளவு பொதுமக்கள் சளி, காய்ச்சல், கண் எரிச்சல், கண் வீக்கம், தலைவலி, இருமல், உடல் வலி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தனியார் மருத்துவமனைகளும் பெரு மளவு குவிந்து வருகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், இந்த நோய் பள்ளி குழந்தைகள் இடையே அதிக அளவில் வேகமாக பரவி வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் குறிப்பாக சிந்தல் பாடி, பெம்மிடி, கடத்தூர், பாப்பி ரெட்டிப்பட்டி, பையர் நத்தம் போன்ற பகுதிகளில் அரசு மருத்துவம னைகளில் போதிய செவிலியர்கள், மருத்து வர்கள் இல்லாததாலும் ஒரே நேரத்தில் அதிக அளவிலான புற நோயாளிகள் குவிவதாலும் மருத்துவம் பார்ப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக உடல் நலம் பாதிக்கப்படுபவர்களை இரவு நேரங்களில் அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றால் மருத்துவர்கள், செவிலியர்கள் குறைபாடு காரணமாக சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

    இதனால் கடத்தூர், சிந்தல்பாடி, பொம்மிடி அரசு மருத்துவமனைகளில் வெளியில் இருந்து வரும் நோயாளிகளை அழைத்து வரும், உறவினர்களுக்கும் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கும் அடிக்கடி வாய் தகராலும் முற்றி வருகிறது.

    தனியார் மருத்துவமனை களுக்குச் சென்றால் ஊசி போட்டு மருந்து வாங்கினால் ஒரு நோயாளிக்கு ரூ.500 செலவாகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்கள் கூடும் இடங்க ளிலும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • ஆலங்குளம் யூனியனில் 60 பணியாளர்களும், பேரூராட்சியில் 30 பணியாளர்களும் கூடுதலாக நியமனம் செய்து வீடு வீடாக சென்று குடிநீரை ஆய்வு செய்தல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே பனியின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த சீதோஷண நிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மாவட்டத்தில் சமீப காலமாக டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி மட்டுமல்லாது பாவூர்சத்திரம், ஆலங்குளம், சங்கரன்கோவில், புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

    ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல் அறிகுறியாக வெள்ளையனுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படும் ஏராளமான சிறுவர்கள்-சிறுமியர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நகரங்களை விட கிராமங்களில் அதிக அளவு பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால் அவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை அறியமுடியாமல் சுகாதாரத்துறையினர் தவிக்கின்றனர்.

    இதுதொடர்பாக தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் முரளி சங்கர் கூறியதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட உடையாம்புளி, ஓடைமறிச்சான், மருதம்புத்தூர், மாறாந்தை, நாலாங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு கடந்த 10 நாட்களாக அதிகரித்து வந்தது. இதையடுத்து காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதிகளில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம். கொசு உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் அனைத்து யூனியன்களின் வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தி காய்ச்சல் பாதிப்புள்ள இடங்களில் கூடுதல் பணியாளர்கள் நியமித்துள்ளோம்.

    ஆலங்குளம் யூனியனில் 60 பணியாளர்களும், பேரூராட்சியில் 30 பணியாளர்களும் கூடுதலாக நியமனம் செய்து வீடு வீடாக சென்று குடிநீரை ஆய்வு செய்தல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது அந்த பகுதிகளில் பாதிப்பு குறைந்து வருகிறது. சமீபத்தில் 2 சிறுமிகள் உயிரிழந்தது மூளை காய்ச்சலால் தான். நேற்று கடையம் பகுதியில் இறந்த 8 மாத சிறுவன் சமீபத்தில் 4 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவந்துள்ளான். அதன்பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உரிய பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை.

    பெரும்பாலும் டெங்குவில் இருந்து மீள ஒவ்வொருவரின் உடலிலும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 2.50 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலும் இருந்தால் போதுமானது. பொதுமக்கள் தங்களது பகுதியில் கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியை நாட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுமி செண்பக மாலினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்தது.
    • மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழந்தார். சக்திவேல் என்பவரின் மகள் செண்பக மாலினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்ததை அடுத்து, ஆலங்குளம் அரசு மருத்துவனையில் வெள்ளிக்கிழமை புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

    நள்ளிரவு ஒரு மணிக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மீண்டும் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சலுக்கு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவில் 70-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    திருநெல்வேலி:

    திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அதிகளவில் பரவும் காய்ச்சலால் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவில் 70-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், டெங்கு காய்ச்சலும் அதிகளவில் பரவுவதால் அதனைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னை நகர் பகுதிகளில் தற்போது புதிதாக ப்ளூ என்ற மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • கடலூர் பகுதிகளில் இந்த காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கடலூர் :

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து குளிர் மற்றும் கடும் பனி முடிவுக்கு வந்த நிலையில் சென்னை நகர் பகுதிகளில் தற்போது புதிதாக ப்ளூ என்ற மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலால் சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்   இதேபோன்று சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலூர் பகுதிகளில் இந்த காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  ந்நிலையில் கடும் குளிர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த கடலூர் வாசிகள் தற்போது மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு அவர்களால் சரிவர பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை.   குறிப்பாக அன்றாடம் கூலி வேலை பார்த்து சாப்பிடும் பாமர மக்கள் மற்றும் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்பவர்கள்

    இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சரிவர வேலைக்கு செல்ல முடியாமல் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. மேலும் வீட்டில் உள்ள வயதானவர்களும் இதனால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. எனவே பொதுமக்கள் மத்தியில் பரவி வரும் இந்த மர்ம காய்ச்சலை முற்றிலும் தடுக்க உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் தெருக்கள் மற்றும் வீதிகளில் ஆங்காங்கே சேரும் குப்பைகளை அகற்றி கொசு மருந்து அடிக்க வேண்டும்.   குறிப்பாக நீண்ட நாட்களாக மழை நீர் மற்றும் கழிவு நீரால் குட்டைகளில் பல மாதங்களாக தேங்கியி ருக்கும் அசுத்தமான நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக குழந்தை சிவதர்ஷினி மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • மர்ம காய்ச்சலால் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே‌ மிகுந்த சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 37), இவரது மனைவி ஜெயஸ்ரீ (32). இந்த தம்பதிக்கு தர்ஷன் (9) என்ற மகனும், சிவதர்ஷினி என்ற (3½) மகளும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக குழந்தை சிவதர்ஷினி மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து சிவதர்ஷினியை அவரது பெற்றோர், பரமத்திவேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    குழந்தைக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து வந்ததால் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தை சிவதர்ஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மர்ம காய்ச்சலால் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சிறுமி டெங்கு காய்ச்சலால் இறந்திருக்கலாம் என்ற அச்சத்தால், அப்பகுதியில் காய்ச்சல் பரவாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் சுகாதாரத்துறையினர் முகாம் நடத்தி, அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்து காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×