என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி
- கடந்த சில மாதங்களாக மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சிறுமி உயிரிழப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் ராஜபாண்டி நகர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார்.
உடனே சிறுமியை மீட்டு அவரது குடும்பத்தினர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த சில மாதங்களாக மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், பலியான சிறுமி கடுமையாக காய்ச்சல் பாதிப்பிற்கு பிறகே அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தார். காய்ச்சல் பாதிப்பு முற்றிய நிலையில் இருந்தது. டெங்கு காய்ச்சலால் சிறுமி இறக்கவில்லை என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்