search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டல பூஜை"

    • இன்று பிற்பகலில் 18-ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை.
    • மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 30-ந் தேதி திறக்கப்படும்.
    • மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14-ந் தேதி நடைபெறும்.

    சபரிமலை :

    மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் நடை திறந்த நாள் முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்தனர்.

    ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதில் ஒரு சில நாட்களில் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் மேல் இருந்தது. இதுபோக நிலக்கல் உள்பட பல இடங்களில் உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

    ஒரு கட்டத்தில் பம்பை முதல் சன்னிதானம் வரை கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் சிறு குழந்தைகள், 50 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதற்கிடையே நடப்பு சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973-ம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி மண்டல பூஜைக்கு முதல் நாள் அதாவது 26-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். இந்த தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பத்தனம்திட்டை ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு கடந்த 23-ந் தேதி தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.

    இந்த ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) மதியம் பம்பை கணபதி கோவில் வந்தடைகிறது. அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு வருவார்கள். மாலை 5.30 மணிக்கு சன்னிதானம் வந்தடையும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.

    அப்போது 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு ராஜீவரரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும். பின்னர் 18-ம் படி வழியாக சன்னிதானத்துக்கு கொண்டு வரப்பட்டுமாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    நாளை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். 11 மணிக்கு களபாபிஷேகம் முடிந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் தங்கி அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும்.

    பகல் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜைகளுக்கு பின் இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டல பூஜை நிறைவு பெறும். இதனால் தங்க அங்கியை சன்னிதானத்துக்கு கொண்டு வருவதையொட்டி இன்று பிற்பகலில் 18-ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை.

    பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 30-ந் தேதி திறக்கப்படும். மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14-ந் தேதி நடைபெறும்.

    • 200ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது.
    • நவம்பர் 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே மாதப்பூரில் சுமார் 200ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்ற ஆகம விதிப்படி கடந்த நவம்பர் 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடைபெற்றது. மண்டல பூஜையின் நிறைவு நாளான 48ம் நாள் பூஜை நடைபெற்றது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை ,புண்யாஹவாசனம் அதனை தொடர்ந்து மாகாளியம்மனுக்கு 108 கலசபூஜையுடன் 108 சங்காபிஷேகமும் நடைபெற்றுது.நிறைவாக தீபாராதனை நடைபெற்றது.மண்டல பூஜையை முன்னிட்டு தொடர்ந்து 48 நாட்களாக அன்னதானம் வழங்கப்பட்டது.மண்டல பூஜையை தென் சேரி மலை ஆதீனம் முத்து சிவ இராமசாமி அடிகளார் தலைமையில், அடிகளார் பெருமக்கள் நடத்தி வைத்தனர்.

    • 27-ந் தேதி சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடக்கிறது.
    • ஐயப்பன் தங்க அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாள் நடைபெறும் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

    இதற்காக கடந்த மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் நாள் முதல் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வர தொடங்கினர். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை எட்டியது.

    மண்டல பூஜை நடைபெறும் 27-ந்தேதி இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கோவில் நிர்வாகத்தினர் எதிர்ப்பார்க்கிறார்கள். இதற்காக கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். 450 பவுன் எடையுள்ள இந்த தங்க அங்கி ஆரன்முளாவில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜையின் போது இந்த தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து நேற்று புறப்பட்டது.

    தங்க அங்கி ஊர்வலத்துக்கு 65 இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஊர்வலம் பல்வேறு கோவில்களுக்கும் சென்று நாளை மறுநாள் 26-ந் தேதி மதியம் பம்பை சென்றடைகிறது. அங்கு கணபதி கோவிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்று விட்டு அன்று மாலை சபரிமலை சன்னிதானம் சென்றடைகிறது.

    அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் 18-ம் படி வழியாக கருவறைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    27-ந் தேதி சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடக்கிறது. அப்போது ஐயப்பன் தங்க அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். மேலும் மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகளும் சபரிமலையில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • 27-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது.
    • 26-ந் தேதி மதியம் இந்த ஊர்வலம் பம்பையை வந்தடையும்.

    கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

    மண்டல பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி வருகிறார்கள். தினமும் ஏராளமான பக்தர்கள் வருவதால் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது.

    நேற்று ஒரு நாளில் மட்டும் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இன்றும் 18-ம் படி ஏற 84 ஆயிரத்து 483 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    சபரிமலை ஐயப்பனுக்கு வருகிற 27-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது. அன்று ஐயப்பன் தங்க ஆபரணம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அவர் அணியும் தங்க ஆபரணங்கள் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.

    அங்கிருந்து இன்று தங்க ஆபரணம் ஊர்வலமாக சபரிமலை எடுத்து வரப்படும். அந்த ஆபரணங்கள் வைக்கப்பட்ட தேர் பலத்த பாதுகாப்புடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் சபரிமலை நோக்கி புறப்பட்டது. இந்த தேருக்கு ஏராளமான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.

    26-ந் தேதி மதியம் இந்த ஊர்வலம் பம்பையை வந்தடையும். பின்னர் அங்கிருந்து சன்னிதானம் கொண்டு செல்லப்படும். பின்னர் கருவறைக்கு எடுத்து செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

    இதற்கிடையே மண்டல பூஜை விழாவின் ஒரு பகுதியாக சபரிமலை கோவில் நிர்வாகம் சார்பில் கற்பூர ஆழி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஊர்வலம் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இதற்காக கற்பூர ஆழி கோவில் சன்னிதானத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் எழுப்பிய சரண கோஷம் சபரிமலை முழுவதும் எதிரொலித்தது.

    மண்டல பூஜைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கோவில் நிர்வாகிகள் கருதுகிறார்கள். எனவே கோவிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சன்னிதானம் மற்றும் பக்தர்கள் வரிசையில் நிற்கும் பகுதி, பம்மை, நிலக்கல் பகுதியிலும் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.

    மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த வருடம் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியதால் நெரிசலை தவிர்க்க பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதாவது ஒரு நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய முடியும் என கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. உடனடி முன்பதிவு நடைமுறையும் நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 26-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது. இதற்காக பத்தனம்திட்டை ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்க அங்கி ஊர்வலம் நாளை (வெள்ளிக்கிழமை) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்படுகிறது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தங்க அங்கி கொண்டு வரப்படுகிறது.

    27-ந் தேதி மதியம் 12.30 மணிக்கு மேல் மண்டல பூஜை தந்திரி தலைமையில் நடைபெறும். அன்று இரவு வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பிறகு மகர விளக்கு பூஜைக்காக 30-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும். ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.

    இதனையொட்டி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அருள்வார்.

    இதற்கிடையே மண்டல பூஜைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தங்க அங்கி மலைக்கு எடுத்து வருவதையொட்டி 26-ந் தேதி மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அன்றைய தினம் 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசன முன்பதிவு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மண்டல பூஜை நடைபெறும் 27-ந் தேதி சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அய்யப்ப சுவாமி கோவிலில் 50-ம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேணுகோபால அய்யப்ப சுவாமி கோவிலில் 50-ம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது.

    இன்று காலை கணபதி பூஜை உடன் தொடங்கிய இவ்விழாவில் சுவாமிக்கு பால்,பன்னீர், திராட்சை, சந்தனம், இளநீர், நெய் போன்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு மகாதீபம் காட்டப்பட்டது.

    இதனை அடுத்து கணபதி ஹோமம் நடைபெற்ற நிலையில் அய்யப்ப பக்தர்களுக்கு கன்னி பூஜை நடைபெற்றது. இதையடுத்து உற்சவரின் திருவீதி உலா நடைபெற்றது.

    நகரத்தின் முக்கிய வீதிகளிலான ,பட்டாளம்மன் கோவில் தெரு, பேருந்து நிலையம் ,காவல் நிலையம், ஸ்தூபி மைதானம் தருமபுரி சாலை மற்றும் திரௌபதி அம்மன் கோவிலை அடைந்து திருவீதி உலா நிறைவு பெற்றது.

    இதில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி அய்யப்ப பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

    • ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள ரெகுநாதபுரத்தில் புகழ்பெற்ற வல்லபை அய்யப்பன் கோவில் உள்ளது. எருமேலிக்கு அடுத்தபடியாக பேட்டை துள்ளல் விழாவும், பம்பைக்கு அடுத்தபடியாக ஆராட்டு விழாவும் ஆண்டு தோறும் இங்கு விமரிசையாக நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் வல்லபை அய்யப்பன் கோவிலில் இன்று காலை மண்டல பூஜை கொடியேற்றம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

    முன்னதாக தலைமை குருக்கள் மோகன் சாமி தலைமையில் கோவிலில் கணபதி ஹோமமும், அஷ்டா பிஷேகமும் நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டு அய்யப்பன் சன்னதிக்கு எதிரே உள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என்று பக்திபரவசத்துடன் முழக்கமிட்டனர். வல்லபை அய்யப்பா சேவை நிலையம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.மோகன் சுவாமி கூறியதாவது:-

    ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை யானது சபரிமலையில் நடைபெறுவது போன்றே ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    தினசரி காலை மற்றும் மாலை இருவேளையும் சுவாமி நகர்வலம் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்று பின்னர் பூதபலி பூஜை நடைபெறும். வரும் 26-ந்தேதி மாலை பள்ளி வேட்டை புறப்பாடு (நகர் ஊர்வலம்) நடைபெறும். அப்போது கோவில் நடைசாத்தப்பட்டு இருக்கும். 27-ந்தேதி காலை 8மணிக்கு மண்டல பூஜையன்று பேட்டை துள்ளல், ஆராட்டு விழா நடைபெறும். காலை 10 மணிக்கு சன்னிதானத்தின் முன்புறம் கொடியிறக்கம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனையும், மகா அன்னதானமும் நடைபெறும். 31-ந்தேதி காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை இருமுடி கட்டுதல் நடைபெறுகிறது.

    இரவு 10 மணிக்கு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு இரவு 12 மணிக்கு 2023-ம் ஆண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சபரிமலை யாத்திரை புறப்பாடு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மண்டல பூஜை நடந்தது.
    • மண்டல பூஜை விழாவில் கமுதி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தேவர் சிலை, முருகன் கோவில், விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 28-ந் தேதி நடந்தது.

    இதையடுத்து 48 நாட்கள் தேவர், முருகன், விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன. 48 -வது மண்டல பூஜை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், தங்கவேல், பழனி ஆகியோர் தலைமையில் நடந்தது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவினரால் யாக சாலை பூஜை நடத்தப்பட்டு தேவர், முருகன், விநா யகர் சிலைகளுக்கு 22 வகையான அபிஷேகங்கள் நடந்தன.

    அக்டோபர் மாதம் நடந்த தேவர்குருபூஜையின் போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வழங்கிய வெள்ளி கவசத்தை அவரது மகன் ஜெயபிரதீப், அ.தி.மு.க. எம்.பி. ஆர்.தர்மர் முன்னிலையில் தேவர் சிலைக்கு அணிவித்தார். அப்போது அவருக்கு மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் வினோதினி சீனிவாசகம் சார்பில் 2 அடி வேல் பரிசாக வழங்கப்பட்டது. பொதுமக்களின் பார்வைக்காக வைக்க ப்பட்ட தேவரின் வெள்ளி கவசத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    மண்டல பூஜை விழாவில் கமுதி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

    • அய்யப்பசுவாமி திருவீதி உலா பல்லடம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது.
    • அய்யப்பசுவாமி கோவிலில் 63ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மண்டல பூஜை நடைபெற்றது.

    பல்லடம் : 

    பல்லடம் சந்தைப்பேட்டை அய்யப்பசுவாமி கோவிலில் 63ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மண்டல பூஜை நடைபெற்றது. விழாவில் விநாயகர் பூஜை, சூக்தபாராயணம், மகாலட்சுமி ஹோமம், மகா சங்கல்பம், மற்றும் அய்யப்ப சுவாமிக்கு லட்சார்ச்சனை,மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யப்ப சுவாமியை வழிபட்டனர். மண்டல பூஜையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டல பூஜை சங்காபிசேக விழா நிறைவாக தங்க முலாம் பூசிய யானை வாகனத்தில் அய்யப்பசுவாமி திருவீதி உலா பல்லடம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

    • ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் 63-ம் ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது.
    • 15ந் தேதி நவகலச அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் , பறையெடுப்பு நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் 63-ம் ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி 14ந் தேதி மஹா கணபதி ஹோமம், பிரம்ம ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி சபரிமலை பிரதம அர்ச்சகர் தலைமையில் கொடியேற்றம், உற்சவத்துடன் விழா தொடங்கியது. 15ந் தேதி நவகலச அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் ,பறையெடுப்பு நடைபெற்றது. 16ந்தேதி மகா விஷ்ணுபூஜை, நவகலச அபிஷேகம் நடந்தது. 17ந் தேதி மஹா கணபதி ஹோமம், மண்டல பூஜை ஆரம்பம், நவகலச அபிஷேகம், உற்சவ பலி பூஜை, பறையெடுப்பு நடைபெற்றது.

    நேற்று 18ந் தேதி பகவதி சேவை, பறையெடுப்பு, தாயம்பகை மேளம் நடைபெற்றது. மேலும் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கொடியேற்று ஆராட்டு உற்சவத்தில் ஸ்ரீ பூதபலி என்கிற பூஜையை சபரிமலை பிரதான தந்திரி செய்தார். இரவு 10 மணிக்கு பள்ளிவேட்டை நிகழ்ச்சி தொடங்கியது. இதில் அய்யப்ப சுவாமி வேட்டைக்கு செல்லுதல் நடந்தது.

    ஆராட்டு நாளான இன்று(19-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அய்யப்ப சுவாமி திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு ஆராட்டு நிகழ்ச்சிக்கு புறப்பட்டார். பின்னர் சபரிமலை பிரதம தந்திரி கண்டரு பிரம்ம ஸ்ரீ மகேஷ் மோகனரு தலைமையில் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் மேள தாளங்கள் முழங்க அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாலையணிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 6-30மணிக்கு ஈஸ்வரன் கோவிலில் இருந்து அய்யப்பன் ரதத்தில் முக்கிய வீதிகள் வழியாக அய்யப்பன் கோவிலை சென்றடையும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9-30மணிக்கு கொடி இறக்குதலுடன் உற்சவம் நிறைவடைகிறது.

    மண்டல பூஜையையொட்டி நன்கொடையாளர்கள் சார்பில் 14ந் தேதி முதல் இன்று வரை இரவு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். சபரிமலையில் மகர விளக்கு பூஜை முடியும் வரை அய்யப்பன் கோவிலில் இருந்து சபரிமலைக்கு செல்ல பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • கோவில் கும்பாபிஷேகம் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் நாள் சிறப்பாக நடைபெற்றது .
    • மண்டல பூஜையின் இறுதி நாளான 48ம் நாள் பூஜை நேற்று நடைபெற்றது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரைப்புதூர் கிராமம் அல்லாளபுரத்தில்800 ஆண்டுகளுக்கு முன்னதாக சேர சோழ பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் உடனமர் ஸ்ரீ உலகேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் நாள் சிறப்பாக நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜையின் இறுதி நாளான 48ம் நாள் பூஜை நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி மாலை 5.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை ,புண்யாஹவாசனம் அதனை தொடர்ந்து உண்ணாமுலை அம்மனுக்கும் உலகேஸ்வர சுவாமி, கரியகாளியம்மனுக்கு 108 கலசபூஜையுடன் முதல்காலயாக பூஜை நிறைவுற்றது.

    இன்று காலை 7.35மணிக்கு இரண்டாம் காலபூஜை தொடங்கி உண்ணாமுலை அம்மனுக்கு 108 கலசாபிஷேகமும் உலகேஸ்வர சுவாமிக்கு 108 சங்காபிஷேகமும் , கரியகாளியம்மனுக்கு 108 கலசாபிஷேகமும் நடைபெற்று இறுதியாக தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வழங்கப்பட்டது.

    • பெரிய அக்கிரமேசி கிராமத்தில் வாலேஸ்வரி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகத்துடன் மண்டல பூஜை நடந்தது.
    • 48 நாட்கள் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பெரிய அக்கிரமேசி கிராமத்தில் வாலேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 5-ந்தேதி நடந்தது. இதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது.

    மண்டல பூஜை விழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி முன்பு யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. 108 சங்காபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்த பின்பு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், திரவிய பொடிகள் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து சோனையா, கருப்பண சாமி, இருளன், ராக்கச்சி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் அருணாச்சலம், குமார், தங்கராஜ், பாண்டி வேல், கல்யாணசுந்தரம், பாலு, ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் செய்தி ருந்தனர். மண்டல பூஜை விழாவை சிவாச்சா ரியார்கள் மனோகர குருக்கள், மகேஷ் குருக்கள் நடத்தினர்.

    ×