search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அல்லாளபுரம்"

    • கோவில் கும்பாபிஷேகம் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் நாள் சிறப்பாக நடைபெற்றது .
    • மண்டல பூஜையின் இறுதி நாளான 48ம் நாள் பூஜை நேற்று நடைபெற்றது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரைப்புதூர் கிராமம் அல்லாளபுரத்தில்800 ஆண்டுகளுக்கு முன்னதாக சேர சோழ பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் உடனமர் ஸ்ரீ உலகேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் நாள் சிறப்பாக நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜையின் இறுதி நாளான 48ம் நாள் பூஜை நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி மாலை 5.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை ,புண்யாஹவாசனம் அதனை தொடர்ந்து உண்ணாமுலை அம்மனுக்கும் உலகேஸ்வர சுவாமி, கரியகாளியம்மனுக்கு 108 கலசபூஜையுடன் முதல்காலயாக பூஜை நிறைவுற்றது.

    இன்று காலை 7.35மணிக்கு இரண்டாம் காலபூஜை தொடங்கி உண்ணாமுலை அம்மனுக்கு 108 கலசாபிஷேகமும் உலகேஸ்வர சுவாமிக்கு 108 சங்காபிஷேகமும் , கரியகாளியம்மனுக்கு 108 கலசாபிஷேகமும் நடைபெற்று இறுதியாக தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வழங்கப்பட்டது.

    • மண்டலபூஜை தினத்தோறும் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    • 48 நாட்களுக்கு மண்டலபூஜை நடைபெறுகிறது.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரைப்புதூர் கிராமம் அல்லாளபுரத்தில் அமைந்துள்ள உண்ணாமுலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 8-ந்தேதி நடைபெற்றது.

    நேற்று முதல் 48 நாட்களுக்கு மண்டலபூஜை நடைபெறுகிறது. மண்டலபூஜை தினத்தோறும் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை முதல் நாள் மண்டலபூஜை நடைபெற்றது. இதில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • 5ம் கால யாக பூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
    • அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு கோவில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில் உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது.இக்கோவில் கும்பாபிஷேகவிழா இன்று நடைபெற்றது. அதன்படி நேற்று யாக சாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 4ம் கால யாகபூஜை, பூர்ணாகுதி,தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், 5ம் கால யாக பூஜை, நாடிசந்தானம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

    இதற்கிடையே நேற்று அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலுக்கு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வருகை தந்தார் .அவருக்கு கோவில் விழா குழுவினர் சார்பில் பரிவட்டம் கட்டி பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கணபதிபாளையம் சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று 8ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 6-ம் கால யாக பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மகா பூர்ணாகுதி தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. காலை 5.15 மணி முதல் உண்ணாமுலை அம்மன், உலகேஸ்வரர், கரிய காளியம்மன் கோவில் பரிவார மூர்த்திகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மகாதீபாராதனை, திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி பாரம்பரிய கலைகளான வள்ளி கும்மி, பெருசலங்கை ஆட்டம், பவளக்கொடி கும்மி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • யாகம் வளர்க்கும் சிவாச்சாரியார்களுக்கு, காப்புக் கட்டுதல் நடைபெற்றது.
    • நவக்கிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், முதல்கால யாகபூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி,அல்லாளபுரத்தில் உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில், நாளை கும்பாபிஷேகவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கின.

    யாக சாலை மண்டபத்தில் தானியங்கள் கொட்டப்பட்டும், கலசங்கள் தயார் செய்யப்பட்டும், யாகசாலை அலங்கரிக்கப்பட்டது. யாகம் வளர்க்கும் சிவாச்சாரியார்களுக்கு, காப்புக் கட்டுதல் நடைபெற்றது.தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், முதல்கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மையாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதனை தொடர்ந்து நேற்று 2-ம் கால யாகபூஜை, கும்ப அலங்காரம், யாத்ரா தானம், 3ம் கால யாகபூஜை, மூல மந்திர ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொங்கு நாட்டின் பாரம்பரியக் கலையான பெருஞ்சலங்கை ஆட்டம் நடைபெற்றது. இதனை கொங்கு பண்பாட்டு மையத்தினர் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து மங்கை வள்ளிகும்மி குழுவினரின், கும்மி ஆட்டம் நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., உலகேஸ்வரர் கோவிலுக்கு வருகை புரிந்தார். அவருக்கு கோவில் விழாகமிட்டி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • வரதராஜர் பெருமாள் கோவிலில் இருந்து 800 பேர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
    • தீர்த்தக் கலச ஊர்வலம், உலகேஸ்வரர் திருக்கோவிலுக்கு, யானை, குதிரைகளுடன் மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி, அல்லாளபுரத்தில் உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருகிற 8ந்தேதி கும்பாபிஷேகவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று மாலை அல்லாளபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் இருந்து சுமார் 800 பேர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    தொடர்ந்து தீர்த்தக் கலச ஊர்வலம், உலகேஸ்வரர் திருக்கோவிலுக்கு, யானை, குதிரைகளுடன் மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு யாகசாலை பூஜைகள் துவங்கின. சிவாச்சாரியார்கள் கலசங்களுடன் ஊர்வலமாக வந்து யாக சாலைக்கு சென்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை உள்ளிட்டவற்றை நடத்தினர்.

    தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மையாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதனை தொடர்ந்து கோமாதா பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    • 8-ந்தேதி காலை 3.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 6-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது.
    • மகா பூர்ணாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி,அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது.

    இதையொட்டி இன்று மாலை 3 மணி அளவில் அல்லாளபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, முளைப்பாரி ஊர்வலம், தீர்த்த கலச ஊர்வலம், உலகேஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    8-ந்தேதி காலை 3.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 6-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மகா பூர்ணாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. அன்று காலை 5:15 மணி முதல் உண்ணாமுலை அம்மன், உலகேஸ்வரர், கரிய காளியம்மன், பரிவார மூர்த்திகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை, திருக்கல்யாண உற்சவம், பஞ்ச மூர்த்தி சுவாமிகள் திருவீதி உலா, அன்னதானம் வழங்குதல் நடக்கிறது. மேலும் பாரம்பரிய கலைகளான வள்ளி கும்மி,பெருசலங்கை ஆட்டம்,பவளக்கொடி கும்மி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    • நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
    • கும்பாபிஷேகத்திற்காக, யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பல்லடம் :-

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி,அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

    இங்கு அடுத்த மாதம் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக, யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் உலகேஸ்வர சுவாமி, உண்ணாமலை அம்மன், மற்றும் கரிய காளியம்மனுக்கு 9 யாக குண்டம், இதர தெய்வங்களுக்கு 37 யாக குண்டங்கள் என மொத்தம், 46 யாக குண்டங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. கும்பாபிசேக் பணிகளை விழா கமிட்டியினரும், ஊர் பிரமுகர்களும், நேரில் பார்வையிட்டு ஆலோசனை கூறி வருகின்றனர்.

    • 2018ல் கும்பாபிசேகபணிகளுக்காக பாலாலயபூஜை போடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுவந்தது.
    • இருதரப்பு ஒத்துழைப்போடு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்ததனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி, அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக்கோவிலில் கடந்த 2.6.1995ல் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதற்கிடையே 12 ஆண்டுகள் இடைவெளியில் கோவில்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்படவேண்டும் என்று ஆகம விதிகள் உள்ளதாக ஆன்மிக பெரியோர்க் கூறுகின்றனர். இந்த நிலையில், பல ஆண்டுகளாக திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்படாமல் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2018ல் கும்பாபிசேகபணிகளுக்காக பாலாலயபூஜை போடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுவந்தன.

    பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்பொழுது திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த நிலையில், வரும் 8-9-2022 ஆவணி 23ந்தேதி வியாழக்கிழமை அன்று உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில், மற்றும் கரியகாளியம்மன் கோவில் ஆகிய 2 கோயில்களுக்கும் திருக்குட நன்னீராட்டு நடத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், திருக்குட நன்னீராட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு தரப்பினர், ஆகம விதிகளுக்கு மாறாக அம்மன் சிலை உள்ளதாகவும், அதனை சரியான முறையில் வைத்து, கோவிலின் பழமையான முறைகள் மாறாமல் திருக்குட நன்னீராட்டு விழா நடத்த வேண்டுமென கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அல்லாளபுரம் கோவிலில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது:- தொல்லியல் துறையின் கணக்குப்படி 400 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலில் முன்பு உலகேஸ்வரருக்கு வலதுபுறம் கிழக்குப் பார்த்து உண்ணாமுலையம்மன் சன்னதி அமைந்திருந்தது. கடந்த 1982 ம் ஆண்டு அம்மன் சன்னதி உலகேஸ்வரருக்கு இடதுபுறம் தெற்கு பார்த்து மாற்றி அமைத்து விட்டனர். இது ஆகம குறைபாடு, எனவே மீண்டும் அம்மன் சந்நிதி உலகேஸ்வரருக்கு வலதுபுறம் கிழக்கு பார்த்து அமைக்க வேண்டும். மேலும் திருப்பூர் மாவட்ட திருக்கோவில்களின் ஸ்தபதி கார்த்திக் சுட்டிக்காட்டியுள்ள கோவிலில் இருக்கும் ஆகம குறைபாடுகளை சரி செய்து திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்து அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையர் அலுவலகத்திற்கு இருதரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இது குறித்து அமைதி குழு ஒன்று ஏற்பாடு செய்து மீண்டும் ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு ஒத்துழைப்போடு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ×