search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் முளைப்பாரி ஊர்வலம்
    X

    கும்பாபிஷேக விழா மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்ற காட்சி.

    அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் முளைப்பாரி ஊர்வலம்

    • வரதராஜர் பெருமாள் கோவிலில் இருந்து 800 பேர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
    • தீர்த்தக் கலச ஊர்வலம், உலகேஸ்வரர் திருக்கோவிலுக்கு, யானை, குதிரைகளுடன் மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி, அல்லாளபுரத்தில் உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருகிற 8ந்தேதி கும்பாபிஷேகவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று மாலை அல்லாளபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் இருந்து சுமார் 800 பேர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    தொடர்ந்து தீர்த்தக் கலச ஊர்வலம், உலகேஸ்வரர் திருக்கோவிலுக்கு, யானை, குதிரைகளுடன் மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு யாகசாலை பூஜைகள் துவங்கின. சிவாச்சாரியார்கள் கலசங்களுடன் ஊர்வலமாக வந்து யாக சாலைக்கு சென்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை உள்ளிட்டவற்றை நடத்தினர்.

    தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மையாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதனை தொடர்ந்து கோமாதா பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    Next Story
    ×