search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யப்ப சுவாமி"

    • சபரிமலை சீசனையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து வருகின்றனர்.
    • சுவாமிக்கு காமாட்சி அம்மன் கோவில் சார்பில் ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டது.

    உடுமலை :

    சபரிமலை சீசனையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து வருகின்றனர். உடுமலை மற்றும் பல்வேறு அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் நடந்து வருகின்றன.

    ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமியை வழிபடுகின்றனர். உடுமலை அய்யப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. இதையொட்டி நேரு வீதி, காமாட்சி அம்மன் கோவிலுக்கு அய்யப்ப சாமி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமிக்கு காமாட்சி அம்மன் கோவில் சார்பில் ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஜெயங்கொண்டம் அய்யப்பசாமி திருவீதியுலா நடந்தது
    • திரளான இருமுடி பக்தர்கள் பங்கேற்பு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம். ஜெயங்கொண்டத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் தேதி அய்யப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து அய்யப்பனை வழிபடுவது வழக்கம். ஜெயங்கொண்டம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அய்யப்பனை வழிபடுவார்கள்.

    சுவாமிக்கு மார்கழி மாதம் முதல் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.அதனை முன்னிட்டு சுவாமிக்கு கச்சேரி நாதஸ்வரம் முழங்க சிறப்பு நெய் அபிஷேகம் மற்றும் மஞ்சள், சந்தனம் பால், தயிர், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து முக்கிய வீதிகள் வழியாக அய்யப்பன் திருவீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் கேரளம் செண்டை மேளம் முழங்க, வாணவேடிக்கையுடன், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு அம்மன், அய்யப்பன், சிவன், பார்வதி உள்ளிட்ட சாமிகள் வேடம் அணிந்து வேடதாரிகள் நடனம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் காலை மதியம் என அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த வீதி உலாவில் ஜெயங்கொண்டம் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து அய்யப்பனை வணங்கி சென்றனர்.

    • அய்யப்ப சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.
    • மகா உற்சவ விழாவையொட்டி நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் தெப்பக்குளம் கிழக்கு கரையில் உள்ள அய்யப்ப சுவாமி கோவிலில் 56-ம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகா உற்சவ விழாவையொட்டி நேற்று காலையில் கோவிலில் மூலவர் அய்யப்ப சுவாமிக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மாலையில் உற்சவர் அய்யப்ப சுவாமி யானை வாகனத்தில் திருவீதி உலா வந்தார். இரவு 7 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் தெப்பக்குளத்தில் உற்சவர் அய்யப்ப சுவாமி எழுதருளிய தெப்பம் சுற்றி வந்தது. தெப்பக்குளத்தை சுற்றி நின்ற பக்தர்கள் 'சாமியே சரணம் அய்யப்பா' என்ற பக்தி கோஷத்தை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். குளத்தில் தெப்பம் வலம் வந்தபோது பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புக்காக குளத்தை சுற்றி வந்தனர்.

    • ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் 63-ம் ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது.
    • 15ந் தேதி நவகலச அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் , பறையெடுப்பு நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் 63-ம் ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி 14ந் தேதி மஹா கணபதி ஹோமம், பிரம்ம ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி சபரிமலை பிரதம அர்ச்சகர் தலைமையில் கொடியேற்றம், உற்சவத்துடன் விழா தொடங்கியது. 15ந் தேதி நவகலச அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் ,பறையெடுப்பு நடைபெற்றது. 16ந்தேதி மகா விஷ்ணுபூஜை, நவகலச அபிஷேகம் நடந்தது. 17ந் தேதி மஹா கணபதி ஹோமம், மண்டல பூஜை ஆரம்பம், நவகலச அபிஷேகம், உற்சவ பலி பூஜை, பறையெடுப்பு நடைபெற்றது.

    நேற்று 18ந் தேதி பகவதி சேவை, பறையெடுப்பு, தாயம்பகை மேளம் நடைபெற்றது. மேலும் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கொடியேற்று ஆராட்டு உற்சவத்தில் ஸ்ரீ பூதபலி என்கிற பூஜையை சபரிமலை பிரதான தந்திரி செய்தார். இரவு 10 மணிக்கு பள்ளிவேட்டை நிகழ்ச்சி தொடங்கியது. இதில் அய்யப்ப சுவாமி வேட்டைக்கு செல்லுதல் நடந்தது.

    ஆராட்டு நாளான இன்று(19-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அய்யப்ப சுவாமி திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு ஆராட்டு நிகழ்ச்சிக்கு புறப்பட்டார். பின்னர் சபரிமலை பிரதம தந்திரி கண்டரு பிரம்ம ஸ்ரீ மகேஷ் மோகனரு தலைமையில் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் மேள தாளங்கள் முழங்க அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாலையணிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 6-30மணிக்கு ஈஸ்வரன் கோவிலில் இருந்து அய்யப்பன் ரதத்தில் முக்கிய வீதிகள் வழியாக அய்யப்பன் கோவிலை சென்றடையும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9-30மணிக்கு கொடி இறக்குதலுடன் உற்சவம் நிறைவடைகிறது.

    மண்டல பூஜையையொட்டி நன்கொடையாளர்கள் சார்பில் 14ந் தேதி முதல் இன்று வரை இரவு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். சபரிமலையில் மகர விளக்கு பூஜை முடியும் வரை அய்யப்பன் கோவிலில் இருந்து சபரிமலைக்கு செல்ல பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ×