search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டல பூஜை"

    • கோவில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மண்டல பூஜை செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நத்தம்:

    செந்துறை அருகே பெரியூர்பட்டியில் உள்ள பூமாரியம்மன் கோவிலில் 48 நாட்களுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினமும் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளும் நடந்தது. நேற்று 48வது நாள் மண்டல பூஜை விழா நடந்தது.

    முன்னதாக பூமாரியம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மண்டல பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், செந்துறை ஊராட்சி தலைவர் சபரிமுத்து உள்ளிட்ட சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மதுரை தாதம்பட்டியில் பால விநாயகர் கோவில் மண்டல பூஜை நடந்தது.
    • இந்த சிறப்பு பூஜையை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார் கிருஷ்ணகுமார் செய்தார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 8-வது வார்டு தாதம்பட்டி சடையாண்டி கோவில் வளாகத்தில் பால விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடந்தது. இதனை தொடர்ந்து தினமும் மண்டலபூஜை நடந்து வந்தது. 48-வது நாளான நேற்று மண்டல பூஜை நிறைவடைந்தது. இதையொட்டி வெள்ளை நிறபால விநாயகருக்கு பால், பன்னீர், தேன், நெய், திரவிய பொடி, திருநீர் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் செய்து தீபாராதனை நடந்தது. விநாயகர் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார். இந்த சிறப்பு பூஜையை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார் கிருஷ்ணகுமார் செய்தார்.

    • புதிதாக கட்டப்பட்ட நாகம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம்‌ நடந்தது.
    • 48 நாட்கள் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள காருகுடி கிராமத்தில் 60 அடி நீளமுடைய நாகம் குடை பிடித்து கலசத்தை காப்பது போன்ற தோற்றத்தில் புதிதாக கட்டப்பட்ட மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.

    தொடர்ந்து, 48 நாட்கள் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இந்த மண்டல பூஜை நிறைவு பூர்த்தியை முன்னிட்டு பட்டாணி கோவிலில் இருந்து பழங்கள், வஸ்திரங்கள், இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய 51 வரிசை தட்டுகளை பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து, சிவ வாத்தியங்கள், மேள தாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சிறப்பு யாகபூஜை நடத்தப்பட்டது.

    பின்னர், யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கடம் புறப்பாடாகி கோலிலை சுற்றி வலம் வந்து புனிதநீர் கொண்டு மகா மாரியம்மன், நாக விநாயகர், நாகம்மன், மதுரை வீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்நது, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அங்காள நாச்சியம்மன் ஆலயத்தில் இரண்டாம் காலவேள்வி பூஜை நடந்தது.
    • மண்டல பூஜையான நேற்று காலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில், ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சிந்தகம்பள்ளி கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரபெருமாள், ஸ்ரீ சித்தி விநாயக சுவாமி, அருள்மிகு அங்காளநாச்சியம்மன் திருக்கோயி மகா கும்பாபிஷேக விழா கடந்த 8ம்தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ரக்ஷாபந்தனம், திஹாரோஹனம், அங்குரார்பனம் முதல் கால வேள்வி பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை அங்காள நாச்சியம்மள் கோபுரத்தில் தான்யம் நிரப்புதல், கோபுர கலசத்தாபனம், சுவாமிவிக்ஹங்கள் பிரதிஷ்டை, கலசஸ்தாபனம் நடந்தது. 9ம் தேதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் யாகபூஜை மற்றும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் மகா சுதர்ஷண ஹோமம், தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியுடன் அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து அன்று மாலை அங்காள நாச்சியம்மன் ஆலயத்தில் இரண்டாம் காலவேள்வி பூஜை நடந்தது. 10ம் தேதி அங்காள நாச்சியம்மன் மகா கும்பாபிஷேகம், மஹாமங்களார்த்தி, விஷ்வரூபதரிசனம், ராஜாதரிசனம், கோ பூஜை, அன்னதானம் நடைபெற்றது. அன்று முதல் நேற்று வரை தொடர்ந்து மண்ட பூஜைகள் நடந்தது.

    மண்டல பூஜையான நேற்று காலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில், ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது-. அதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களை சேர்ந்த பெண்களும் மா விளக்கை ஊர்வலமாக எடுத்து கொண்டு, முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை தலைமையில் பம்பை இசை முழங்க ஊர்வலமாக அங்காள நாச்சியம்மன் கோயிலுக்கு சென்று, படையலிட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மெகா அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். 

    • பெருவழிப்பாதை வழியாக நடந்து வந்து 1¼ லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
    • கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

    சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் செல்ல பத்தனம்திட்டை-பம்பை இடையே வாகன வசதி உள்ளது. ஆனால் எருமேலி-பம்பை (27.5 கி.மீ) மற்றும் வண்டிப்பெரியார் புல்மேடு-பாண்டித்தாவளம் (7 கி.மீ) வழியாக நடை பயணமாக மட்டுமே செல்ல முடியும்.

    இதில் எருமேலி-பம்பை இடையே கடக்கும் பாதையை பெருவழிப்பாதை என்பார்கள். இந்த பெருவழிப்பாதையில் புனித நடை பயணமாக ஏராளமான பக்தர்கள் சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்தநிலையில் இந்த பாதை வழியாக சன்னிதானத்துக்கு சென்று வழிபட்ட பக்தர்கள் விவரம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கேரள அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நடப்பு சீசனில் எருமேலி-பம்பை வழியாக புனித நடை பயணமாக கடந்த 31-ந் தேதி வரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 146 பேர் சபரிமலை வந்து தரிசனம் செய்துள்ளனர்.

    மேலும் நடை பயணமாக வரும் வழியில் அழுதக்கடவு, மூக்குழி, கல்விடாம் குன்னு, கரிமலை, புதுசேரி, வலியான வட்டம், செரியான வட்டம் ஆகிய இடங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. யானை, சிறுத்தைகள் உள்பட வன விலங்குகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    மகரவிளக்கு பூஜை நெருங்குவதையொட்டி புல்மேடு- பாண்டித்தாவளம் வழியாகவும் தரிசனத்திற்கு நடை பயணமாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தினமும் 1 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வருவதால் மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

    அதே சமயத்தில் சன்னிதானத்தை சுற்றி வலம் வரும் பக்தர்கள் மீண்டும் தரிசனத்திற்கு முயல்வதாலும் சன்னிதானத்தில் கூட்ட நெரிசலுக்கு ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது.

    மண்டல பூஜை சமயத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜை காலத்திலும் கூடுதல் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை பகுதியில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா முன்னிட்டு நேற்று 15 நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் பகுதியில் உள்ள வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் கடந்த 11 ம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் 15 ம் நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது விழாவையொட்டி நேற்று முன்தினம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது.

    மண்டல பூஜை விழா முன்னிட்டு கோயம்புத்தூர் கிளாசிக் அன்பு மற்றும் இவரது குடும்பத்தினர் சார்பாக கலந்து கொண்ட சுமார் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை எக்ஸெல் ஜி.குமரேசன், ரைஸ் மில் உரிமையாளர் ராஜா ஹார்டுவேர்ஸ் ராஜேந்திரன் மற்றும் வீர ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

    • 14-ந் தேதி மகரஜோதி தரிசனம் நடக்கிறது
    • எருமேலி பேட்டை துள்ளல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது.

    41 நாட்களாக நடந்த மண்டல பூஜை நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 27-ந் தேதி கோவில் நடை அடைக்கப்பட்டது.

    அடுத்து ஜனவரி 14-ந் தேதி மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. இதற்காக கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரூ ராஜிவரரூ கோவில் நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்தினார்.

    இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. வருகிற 14-ந் தேதி சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு வர தொடங்கி உள்ளனர்.

    மகர விளக்கு பூஜையில் பங்கேற்க இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக நேற்றிரவே ஏராளமான பக்தர்கள் பம்பையில் காத்திருந்தனர்.

    இன்று ஒரு நாளில் மட்டும் தரிசனம் செய்ய 80 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    எருமேலி பேட்டை துள்ளல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது. 12-ந் தேதி பந்தளத்தில் இருந்து திருவாபரண பெட்டி ஊர்வலம் புறப்படுகிறது. 13-ந் தேதி பம்பை தீபம் மற்றும் பம்பா சத்யா நடைபெறும். மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் வருகிற 18-ந் தேதி நிறைவடைகிறது. வருகிற 19-ந் தேதி மகரவிளக்கு புனித யாத்திரை நிறைவடைந்து மாளிகைப் புரத்தில் இறுதி நிகழ்வாக குருதி பூஜை நடைபெறும். அதன் பிறகு 20-ந் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின் காலை 7 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    சபரிமலைக்கு மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவில் சன்னிதானம் மற்றும் பம்பை முதல் நிலக்கல் வரை சுமார் 1500 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல சபரிமலை வரும் பக்தர்களுக்காக மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    • தொட்டியம் தர்மசாஸ்தா அய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை நடைபெற்றது
    • மண்டல பூஜைைய முன்னிட்டு மூலவர் தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் நகரம் மதுரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வழிபாடு நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டல பூஜைைய முன்னிட்டு மூலவர் தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பழ வகைகள், தேன், நெய், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உட்பட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனை நடைபெற்று பின்பு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும், மாலை அணிந்த ஐயப்ப சாமிகளுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு மாலை வாணவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க ஸ்ரீ தர்மசாஸ்தா ஐய்யப்பன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் தொட்டியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டியம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்.


    • ரத்தினாம்பிகை சமேத ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்ப சாமி கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது.
    • மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழு ,அகில பாரத அய்யப்பா சங்கத்தினர் செய்திருந்தனர்.

    உடுமலை:

    உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தினாம்பிகை சமேத ரத்தின லிங்கேஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்ப சாமி கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது. அகில பாரத அய்யப்பா சேவா சங்கம் சார்பில் அய்யப்ப சாமி அலங்கரிக்கப்பட்டு செண்டை மேளம் முழங்க கோவிலில் இருந்து புறப் பட்டு தில்லைநகர் ருத்ரப்பா நகர் ,ராமசாமி நகர், கங்காதரன் லேஅவுட்முக்கிய வீதிகளில் திருவீதி உலா நடந்தது. மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழு ,அகில பாரத அய்யப்பா சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன.
    • பக்தர்கள் சரண கோஷம் முழங்கியபடி தரிசனம் செய்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை களுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு போன்றவற்றின் மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் பெற்று வருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான வசதிகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.

    கடந்த 39 நாட்களில் சபரிமலையில் 29 லட்சத்து 8 ஆயிரத்து 500 பேர் தரிசனம் பெற்றுள்ளனர். இவர்களில் 6 லட்சம் பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு இதுவரை ரூ.222 கோடியே 98 லட்சம் கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இதில் ரூ.70 கோடி பிரசாதமாக பெறப்பட்டுள்ளது.

    நடை திறக்கப்பட்டு 41 நாட்கள் ஆன நிலையில், இன்று மண்டல பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதற்காக அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன.

    தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடந்தன. களபாபிஷேகத்திற்கு பிறகு பகல் 12.30 மணிக்கு பிரசித்தி பெற்ற மண்டல பூஜைகள் நடைபெற்றன. தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் இந்த பூஜைகள் நடந்தன.

    அப்போது பக்தர்கள் சரண கோஷம் முழங்கியபடி தரிசனம் செய்தனர். மண்டல பூஜை வழிபாட்டையொட்டி பம்பை முதல் சன்னிதானம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    முன்னதாக நேற்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இன்று இரவு ஹரிவராசனம் பாடலுக்கு பிறகு கோவில் சன்னதி மூடப்படுகிறது.

    தொடர்ந்து மகர விளக்கு வழிபாட்டுக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

    • 29 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
    • மண்டல பூஜை இன்று நடக்கிறது.

    நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த சீசனில் வரலாறு காணாத கூட்டம் சபரிமலையில் அலைமோதியது. இந்தநிலையில் சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி நேற்று மாலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    இதற்கிடையே நேற்று சன்னிதானம் விருந்தினர் மாளிகையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு 39 நாட்களில் (நேற்றுமுன்தினம் வரை) சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ரூ.222 கோடியே 98 லட்சத்து 70 ஆயிரத்து 250 வருமானம் கிடைத்துள்ளது. இதில் காணிக்கையாக ரூ.70 கோடியே 10 லட்சத்து 81 ஆயிரத்து 986 வசூலானது.

    மேலும் 29 லட்சத்து 8 ஆயிரத்து 500 பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் 20 சதவீதம் பேர் குழந்தைகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் நாளை மண்டல பூஜை நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் கடந்த 18-ந்தேதி மண்டல பூஜைக்கான கொடியேற்றம் நடந்தது. 10 நாட்கள் தினமும் காலை, மாலையில் சுவாமி நகர்வலம் கோவில் வளாகத்திற்குள் நடைபெற்று பின்னர் பூதபலி பூஜை நடந்தது.

    வல்லபை அய்யப்பா சேவை நிலைய அறக்கட்ட ளையின் நிர்வாக அறங்கா வலரும், கோவில் தலைமை குருக்களுமான ஆர்.எஸ்.மோகன் கூறியதாவது:-

    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் நடைபெறும் மண்டல பூஜையானது சபரிமலையில் நடைபெறுவது போன்றே ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். நாளை (27-ந்தேதி) காலை 8 மணிக்கு மண்டல பூஜையன்று பேட்டை துள்ளல், ஆராட்டு விழா நடைபெறும்.

    அலங்காரம் செய்யப்பட்ட வல்லபை அய்யப்பன் உற்சவர் பஸ்ம குளத்திற்கு பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து சென்று அங்கு உற்சவருக்கு 16 வகையான அபிஷே கதத்துடன் ஆராட்டு விழா நடைபெறும். சன்னி தானத்தின் முன்புறம் உள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடி கம்பத்தில் கொடியிறக்கம் செய்யப்பட்டு, மூலவருக்கு 33 வகையான அபி ஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை, பஜனை நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 31-ந்தேதி காலை 6 மணி முதல் பகல் 1 மணிவரை இருமுடி கட்டுதல் நடைபெறுகிறது.

    இரவு 10 மணிக்கு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். இரவு 12 மணிக்கு 2023ம் ஆண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சபரிமலை யாத்திரை புறப்பாடு நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை ரகுநாதபுரம் வல்லபை அய்யப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் நடைபெற உள்ள மண்டல பூஜை மகா அபிஷேகத்திற்கு, பல ஆண்டுகளாக ராம நாதபுரத்தில் இருந்து வேண்டுதல்களுடன் விரதம் இருந்து பாதயாத்திரையாக அய்யப்ப பஜனைப் பாடல்கள் பாடி, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அபிஷேகத்திற்கு நெய் கொண்டு வருவது வழக்கம்.

    அதே போல் இந்த ஆண்டும் ராமநாதபுரம் மல்லம்மாள் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக சரணகோசம் முழங்க அபிஷேக நெய் கொண்டு வந்தனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×