search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காருகுடி  நாகம்மன் கோவிலில் மண்டல பூஜை பூர்த்தி விழா
    X

    அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    காருகுடி நாகம்மன் கோவிலில் மண்டல பூஜை பூர்த்தி விழா

    • புதிதாக கட்டப்பட்ட நாகம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம்‌ நடந்தது.
    • 48 நாட்கள் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள காருகுடி கிராமத்தில் 60 அடி நீளமுடைய நாகம் குடை பிடித்து கலசத்தை காப்பது போன்ற தோற்றத்தில் புதிதாக கட்டப்பட்ட மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.

    தொடர்ந்து, 48 நாட்கள் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இந்த மண்டல பூஜை நிறைவு பூர்த்தியை முன்னிட்டு பட்டாணி கோவிலில் இருந்து பழங்கள், வஸ்திரங்கள், இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய 51 வரிசை தட்டுகளை பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து, சிவ வாத்தியங்கள், மேள தாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சிறப்பு யாகபூஜை நடத்தப்பட்டது.

    பின்னர், யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கடம் புறப்பாடாகி கோலிலை சுற்றி வலம் வந்து புனிதநீர் கொண்டு மகா மாரியம்மன், நாக விநாயகர், நாகம்மன், மதுரை வீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்நது, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×