search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆராட்டு விழா"

    • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ந்தேதி திறக்கப்படுகிறது.
    • பங்குனி உத்தரதிருவிழா 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக திறக்கப்படுவதை தவிர்த்து மாதந்தோறும் 5 நாட்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இது தவிர விஷு, ஓணம் பண்டிகை மற்றும் பங்குனி உத்திரம் திருவிழா ஆகியவற்றின் போதும் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர திருவிழாவை யொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுகிறார்.

    மறுநாள் (14-ந் தேதி) முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதிஹோமம், நெய் அபிசேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 18-ந் தேதி வரை 5 நாட்கள் தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, களபாபிசேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

    பங்குனி உத்தரதிருவிழா 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை9.45 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனகுரு கொடியேற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். விழாவில் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெற உள்ளது. 25-ந் தேதி 10-ம் திருநாளில் பம்பயைில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற உள்ளது. அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இரவு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும்.

    • கேரள மாநிலம் கோட்டயத்தில் ஏட்டுமானூர் மகாதேவர் கோவில் இருக்கிறது.
    • பக்தர்கள் தரிசனத்துக்காக ஆண்டுக்கு ஒருமுறையே வெளியே எடுத்துவரப்படும்.

    கேரள மாநிலம் கோட்டயத்தில் ஏட்டுமானூர் மகாதேவர் கோவில் இருக்கிறது. அங்குள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான இங்கு, தங்கத்தில் செய்யப்பட்ட 2 அடி உயரத்தில் 13 கிலோ எடையுள்ள 7 யானை சிலைகள், அதைவிட சிறிய அளவிலான ஒரு யானை சிலை என 8 யானை சிலைகள் கோவில் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலைகள் பக்தர்கள் தரிசனத்துக்காக ஆண்டுக்கு ஒருமுறையே வெளியே எடுத்துவரப்படும். அதன்படி ஆராட்டு விழாவை முன்னிட்டு ஏழர பொன்னான என்று கூறப்படும் தங்க யானை சிலைகள் நேற்று இரவு பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டது. இதனை ஏராளமானோர் தரிசித்தனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
    • மாலை 6 மணிக்கு புத்தனார் கால்வாய் படித்துறையில் வைத்து சாமிக்கு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடந்தது.

    நாகர்கோவில் :

    மருங்கூர் சுப்ரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 6-வது நாள் சூரசம்காரம் நடந்தது. விழாவின் 10-ம் நாளான நேற்று சுப்ரமணியசாமிக்கு ஆராட்டு விழா மயிலாடி நாஞ்சில் புத்தனாறு கால்வாய் அருகே ஆராட்டு மடத்தில் உள்ள படித்துறையில் வைத்து நடைபெற்றது.

    இதற்காக சுப்ரமணியசாமி நேற்று மாலை 4 மணிக்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மருங்கூரில் இருந்து மயிலாடிக்கு ஊர்வலமாக வந்தார். தொடர்ந்து சுப்ரமணியசாமிக்கு ஆராட்டு நடந்தது. மாலை 6 மணிக்கு புத்தனார் கால்வாய் படித்துறையில் வைத்து சாமிக்கு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், மயிலாடி பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி பாபு, செயல் அலுவலர் அம்புரோஸ், துணைத்தலைவர் சாய்ராம், மருங்கூர் பேரூராட்சி தலைவி லட்சுமி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விஜய்வசந்த் எம்.பி., ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்ரமணியம், பொதுச்செயலாளர் நாகராஜன், பொருளாளர் சுடலையாண்டி, மருங்கூர் அ.தி.மு.க. பேரூர் செயலாளர் சீனிவாசன், மயிலாடி பேரூர் பா.ஜனதா தலைவர் பாபு, மயிலாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பெருமாள், பேரூர் அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் மணிகண்டன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாமா கண்ணன், அன்ன சுமதி சுதாகர், மயிலாடி தே.மு.தி.க. பேரூர் செயலளார் மூர்த்தி, சிவம்கல் தொழிலக நிறுவனர் முருகேசன், சுதன் கல்பாலிசி நிறுவனர் சுதன் உள்பட பக்தர்கள் ஆயிரக்கணக்கா னோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுப்ரமணிசாமி மீண்டும் மருங்கூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    • ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் பேட்டை துள்ளல், ஆராட்டு விழா நடந்தது.
    • விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.



    ராமநாதபுரம் அருகே ெரகுநாதபுரம் சித்திரவல்லபை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு இன்று காலை உற்சவருக்கு 16 வகையான அபிஷேகதத்துடன் ஆராட்டு விழா நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் புகழ் பெற்ற வல்லபை அய்யப்பன் ஆலயம் உள்ளது. எருமேலிக்கு அடுத்தபடியாக பேட்டை துள்ளல் விழாவும், பம்பைக்கு அடுத்தபடியாக ஆராட்டுவிழாவும் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. தென் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு ஊர்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவில் வளாகத்திற்குள் எளிமையாக மண்டல பூஜை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் வெகு விமர்சையாக நடத்த முடிவு செய்தனர்.

    கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கோவிலில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த டிச. 18-ந்தேதி மண்டல பூஜை விழாவுக்கான கொடியேற்றம் நடந்தது. நேற்று 26-ந்தேதி மாலை கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க பள்ளி வேட்டை புறப்பாடு (நகர் ஊர்வலம்) நடந்தது. அப்போது கோவில் நடை சாத்தப்பட்டது.

    இன்று மண்டல பூஜையை முன்னிட்டு காலை 5 மணிக்கு தலைமை குருக்கள் ஆர்.எஸ்.மோகன்சுவாமி தலைமையில் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் நூற்றுக்கணக்கான பக்தர்கள்

    ரெகுநாதபுரம் முத்துநாச்சியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, கோவிலிலிருந்து அய்யப்ப பக்தர்கள் ரெகுநாதபுரம் வீதிகளின் வழியாக ஆடிப்பாடி, வேடமிட்டு, வண்ணக்கலவை பூசி அய்யப்பா முழக்கத்துடன் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடத்தினர். அலங்காரம் செய்யப்பட்ட வல்லபை அய்யப்பன் உற்சவர் பஸ்மகுளத்திற்கு பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து சென்று அங்கு உற்சவருக்கு 16 வகையான அபிஷேகதத்துடன் ஆராட்டு விழா நடந்தது. தொடர்ந்து சன்னிதானத்தின் முன்புறம் உள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடி கம்பத்தில் கொடியிறக்கம் செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என்று பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். இதையடுத்து மூலவருக்கு 33 வகையான மகா அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை, பஜனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    வருகிற 31-ந்தேதி காலையில் இருமுடி கட்டுதலும். இரவு சிறப்பு பஜனை, சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சபரிமலை யாத்திரை புறப்பாடு நடக்கிறது.

    இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பன் சேவை நிலையம் அறக்கட்டளை நிறுவனர் ஆர்.எஸ். மோகன்சுவாமி ஆலோசனையின் பேரில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் 63-ம் ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது.
    • 15ந் தேதி நவகலச அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் , பறையெடுப்பு நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் 63-ம் ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி 14ந் தேதி மஹா கணபதி ஹோமம், பிரம்ம ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி சபரிமலை பிரதம அர்ச்சகர் தலைமையில் கொடியேற்றம், உற்சவத்துடன் விழா தொடங்கியது. 15ந் தேதி நவகலச அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் ,பறையெடுப்பு நடைபெற்றது. 16ந்தேதி மகா விஷ்ணுபூஜை, நவகலச அபிஷேகம் நடந்தது. 17ந் தேதி மஹா கணபதி ஹோமம், மண்டல பூஜை ஆரம்பம், நவகலச அபிஷேகம், உற்சவ பலி பூஜை, பறையெடுப்பு நடைபெற்றது.

    நேற்று 18ந் தேதி பகவதி சேவை, பறையெடுப்பு, தாயம்பகை மேளம் நடைபெற்றது. மேலும் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கொடியேற்று ஆராட்டு உற்சவத்தில் ஸ்ரீ பூதபலி என்கிற பூஜையை சபரிமலை பிரதான தந்திரி செய்தார். இரவு 10 மணிக்கு பள்ளிவேட்டை நிகழ்ச்சி தொடங்கியது. இதில் அய்யப்ப சுவாமி வேட்டைக்கு செல்லுதல் நடந்தது.

    ஆராட்டு நாளான இன்று(19-ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அய்யப்ப சுவாமி திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு ஆராட்டு நிகழ்ச்சிக்கு புறப்பட்டார். பின்னர் சபரிமலை பிரதம தந்திரி கண்டரு பிரம்ம ஸ்ரீ மகேஷ் மோகனரு தலைமையில் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் மேள தாளங்கள் முழங்க அய்யப்ப சுவாமிக்கு ஆராட்டு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாலையணிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 6-30மணிக்கு ஈஸ்வரன் கோவிலில் இருந்து அய்யப்பன் ரதத்தில் முக்கிய வீதிகள் வழியாக அய்யப்பன் கோவிலை சென்றடையும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9-30மணிக்கு கொடி இறக்குதலுடன் உற்சவம் நிறைவடைகிறது.

    மண்டல பூஜையையொட்டி நன்கொடையாளர்கள் சார்பில் 14ந் தேதி முதல் இன்று வரை இரவு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். சபரிமலையில் மகர விளக்கு பூஜை முடியும் வரை அய்யப்பன் கோவிலில் இருந்து சபரிமலைக்கு செல்ல பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • ஐப்பசி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
    • பல்லக்கு வாகனத்தில் அலங்கரிக்கபட்டு ஆலயத் திற்கு திரும்பிய சாமி சிலைகளுக்கு வழியெங்கும் பக்தர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட் டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றானது திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில்.

    இத்திருக்கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை பங்குனி, ஐப்பசி மாதங்களில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை 6-ந்தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஐப்பசி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

    இதைதொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஐப்பசி ஆராட்டு வைபவம் நேற்று நடைபெற்றது. முன்ன தாக மேற்கு வாசல் வழியாக திருவிதாங்கூர் மன்னரின் பிரநிதி உடைவாள் ஏந்தி வர கருட வாகனத்தில் எழுந்தருளிய ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீகிருஷ்ண சுவாமி விக்ரகங்களுக்கு திருவட்டாறு காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தபட்டது.

    அதை தொடர்ந்து நள்ளிரவில் தளியல் பகுதியில் அமைந்துள்ள பரளியாற்றில் ஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீகிருஷ் ணர் சாமி உற்சவமூர்த்தி களுக்கு ஆலய தந்திரி வஞ்சியூர் அத்தியறமடம் கோகுல் நாயாயணரூ தலைமையில் ஆராட்டு வைபவம் நடைபெற்றது. அதைதொடர்த்து பல்லக்கு வாகனத்தில் அலங்கரிக்கபட்டு ஆலயத் திற்கு திரும்பிய சாமி சிலைகளுக்கு வழியெங்கும் பக்தர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர். இதில் ஏராளமான பக்தர் கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×