என் மலர்
வழிபாடு

பக்தர்கள் தரிசனத்துக்கு எடுத்துவரப்பட்ட தங்க யானை சிலைகள்
- கேரள மாநிலம் கோட்டயத்தில் ஏட்டுமானூர் மகாதேவர் கோவில் இருக்கிறது.
- பக்தர்கள் தரிசனத்துக்காக ஆண்டுக்கு ஒருமுறையே வெளியே எடுத்துவரப்படும்.
கேரள மாநிலம் கோட்டயத்தில் ஏட்டுமானூர் மகாதேவர் கோவில் இருக்கிறது. அங்குள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான இங்கு, தங்கத்தில் செய்யப்பட்ட 2 அடி உயரத்தில் 13 கிலோ எடையுள்ள 7 யானை சிலைகள், அதைவிட சிறிய அளவிலான ஒரு யானை சிலை என 8 யானை சிலைகள் கோவில் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் பக்தர்கள் தரிசனத்துக்காக ஆண்டுக்கு ஒருமுறையே வெளியே எடுத்துவரப்படும். அதன்படி ஆராட்டு விழாவை முன்னிட்டு ஏழர பொன்னான என்று கூறப்படும் தங்க யானை சிலைகள் நேற்று இரவு பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டது. இதனை ஏராளமானோர் தரிசித்தனர்.
Next Story






