search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யப்பன் கோவிலில் பேட்டை துள்ளல்
    X

    ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க பள்ளி வேட்டை புறப்பாடு (நகர் ஊர்வலம்) தலைமை குருக்கள் மோகன் சுவாமி தலைமையில் நடந்தது.

    அய்யப்பன் கோவிலில் பேட்டை துள்ளல்

    • ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் பேட்டை துள்ளல், ஆராட்டு விழா நடந்தது.
    • விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.



    ராமநாதபுரம் அருகே ெரகுநாதபுரம் சித்திரவல்லபை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு இன்று காலை உற்சவருக்கு 16 வகையான அபிஷேகதத்துடன் ஆராட்டு விழா நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் புகழ் பெற்ற வல்லபை அய்யப்பன் ஆலயம் உள்ளது. எருமேலிக்கு அடுத்தபடியாக பேட்டை துள்ளல் விழாவும், பம்பைக்கு அடுத்தபடியாக ஆராட்டுவிழாவும் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. தென் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு ஊர்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவில் வளாகத்திற்குள் எளிமையாக மண்டல பூஜை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் வெகு விமர்சையாக நடத்த முடிவு செய்தனர்.

    கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கோவிலில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த டிச. 18-ந்தேதி மண்டல பூஜை விழாவுக்கான கொடியேற்றம் நடந்தது. நேற்று 26-ந்தேதி மாலை கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க பள்ளி வேட்டை புறப்பாடு (நகர் ஊர்வலம்) நடந்தது. அப்போது கோவில் நடை சாத்தப்பட்டது.

    இன்று மண்டல பூஜையை முன்னிட்டு காலை 5 மணிக்கு தலைமை குருக்கள் ஆர்.எஸ்.மோகன்சுவாமி தலைமையில் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் நூற்றுக்கணக்கான பக்தர்கள்

    ரெகுநாதபுரம் முத்துநாச்சியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, கோவிலிலிருந்து அய்யப்ப பக்தர்கள் ரெகுநாதபுரம் வீதிகளின் வழியாக ஆடிப்பாடி, வேடமிட்டு, வண்ணக்கலவை பூசி அய்யப்பா முழக்கத்துடன் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடத்தினர். அலங்காரம் செய்யப்பட்ட வல்லபை அய்யப்பன் உற்சவர் பஸ்மகுளத்திற்கு பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து சென்று அங்கு உற்சவருக்கு 16 வகையான அபிஷேகதத்துடன் ஆராட்டு விழா நடந்தது. தொடர்ந்து சன்னிதானத்தின் முன்புறம் உள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடி கம்பத்தில் கொடியிறக்கம் செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என்று பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். இதையடுத்து மூலவருக்கு 33 வகையான மகா அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை, பஜனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    வருகிற 31-ந்தேதி காலையில் இருமுடி கட்டுதலும். இரவு சிறப்பு பஜனை, சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சபரிமலை யாத்திரை புறப்பாடு நடக்கிறது.

    இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பன் சேவை நிலையம் அறக்கட்டளை நிறுவனர் ஆர்.எஸ். மோகன்சுவாமி ஆலோசனையின் பேரில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×