search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சூர்"

    • அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்
    • மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் மாணவியிடம் இதுகுறித்து கேட்டு உள்ளனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எமரால்டு கே.கே.மட்டம் பகுதியை சேர்ந்தவர் புச்சித்தன் என்ற கன்னட தாத்தா (வயது 67). இந்தநிலையில் 15.7.2020-ந் தேதி புச்சித்தன், 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி விளையாடுவது போல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்து உள்ளார்.

    இதற்கிடையே பள்ளி மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் மாணவியிடம் இதுகுறித்து கேட்டு உள்ளனர். அதற்கு அவள் முதியவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அவள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.


    மேலும் மாணவிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. சிறை தண்டனை இதுகுறித்து மாணவியின் பெற்றோர் எமரால்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புச்சித்தினை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது.


    அதன்படி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புச்சித்தனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாராயணன் தீர்ப்பளித்தார். மேலும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். பின்னர் போலீசார் புச்சித்தனை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வருவாய்துறையினர் நடவடிக்கை
    • 1 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் கேரட் சாகுபடி செய்திருந்தது தெரியவந்தது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ஓடைபுறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்ற வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தியுள்ளார்.

    இதன்படி குந்தா தாலுகா இத்தலார் கிராமம், கல்லக்கொரை பகுதியில் ஓடைபுறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து இங்கு மலைகாய்கறிகள் பயிரிட்டுள்ளதாக வருவாய்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து குந்தா தாசில்தார் இந்திரா தலைமையில் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரி, கிராமநிர்வாக அலுவலர் சவுந்திரராஜன் கிராம உதவியாளர்கள் ராம்கி, கோகுல் உள்ளிட்ட வருவாய்துறையினர் கல்லக்கொரை பகுதிக்கு சென்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

    அப்பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்ரமிப்பு களை முழுமையாக அகற்றி நிலத்தை மீட்டனர். தொடர்ந்து வருவாய் துறைக்கு சொந்தமான அவ்விடத்தில் அத்துமீறி யாரும் உள்ளே நுழையக்கூடாது எனவும், இதை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யும் வகையில் அறிவிப்பு பலகையை அமைத்தனர்.

    இதுவரை குந்தா தாலுகாகுட்பட்ட பல்வேறு இடங்களில் நீண்டகாலமாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 40 லட்சம் மதிப்பிலான சுமார் 20 ஏக்கர் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

    இதேபோல் ஊட்டியை அடுத்த ஆடாசோலை என்ற இடத்தில் சுமாா் 1 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் கேரட் சாகுபடி செய்திருந்தது தெரியவந்தது.

    ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி உத்தரவின்பேரில் வட்டாட்சியா் ராஜசேகரன் தலைமையில் வருவாய் ஆய்வாளா் இளங்கோ குரு, கிராம நிா்வாக அலுவலா் ரசியா பேகம் ஆகியோா் அப்பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டனா்.

    அத்துடன், இந்த இடம் நீா் நிலை புறம்போக்கு பகுதி, நீதிமன்ற உத்தரவுபடி மீட்கப்பட்டுள்ளது, இந்த இடத்தில் யாரும் அத்துமீறி நுழையக் கூடாது என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

    இதுகுறித்து வருவாய்த் துறையினா் கூறுகையில், ஊட்டி ஆடாசோலை கிராமத்தில் சுமாா் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 1 ஏக்கா் அரசு ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பாளா்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    அவா்கள் அங்கு கேரட் சாகுபடி செய்திருந்ததால், தற்போது அறுவடை முடிந்ததும் நிலம் மீட்கப்பட்டது என்றனா்.

    • மதுக்கடையால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வாகனப்போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக புகார் கூறப்பட்டு வந்தது.
    • மதுபான கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அரசு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த மதுக்கடையால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வாகனப்போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக புகார் கூறப்பட்டு வந்தது.

    இதை தொடர்ந்து மனித உரிமை விழிப்புணர்வு இயக்கம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளின் சார்பில் டாஸ்மாக் மதுபான கடையை அப்பகுதியில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டதுடன் இதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து கடந்த மாதம் அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் கூறப்பட்டபடி மேற்படி பகுதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடையை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதை தொடர்ந்து குடியிருப்புவாசிகள், மாணவ, மாணவிகள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி நேற்று மனித உரிமை விழிப்புணர்வு இயக்கம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம், மஞ்சூர் சிறு வனிகர்கள் நலச்சங்கம், மஞ்சூர் ஓட்டுனர், உரிமையாளர்கள் நலச்சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள், பொதுநல அமைப்புகள் சார்பில் டாஸ்மாக மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மனித உரிமைகள் விழிப்புணர்வு இயக்க நிறுவனர் அன்னமலை முருகேசன் தலைமை தாங்கினார். முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க நிர்வாகி கேப்டன் ராமச்சந்திரன், சிறு வனிகர்கள் நலச்சங்க நிர்வாகி ஆறுமுகம், ஓட்டுனர் உரிமையாளர் நலச்சங்க தலைவர் துரை, குந்தை சீமை படுகர் நலச்சங்க தலைவர் சந்திரன், ெபண்கள் உரிமை விழிப்புணர்வு நிர்வாகி சாரதா, அனைத்து படுகர் கூட்டமைப்பு நிர்வாகி சிவன், சமூக நீதி விழப்புணர்வு இயக்க நிர்வாகி மணிவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.

    இதில் பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து பல்வேறு வகையிலும் இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஊட்டி ரூரல் டி.எஸ்.பி.செந்தில்குமார், ரூரல் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் டாஸ்மாக் கடை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் பொதுநல அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக நேற்று மஞ்சூர் அரசு மதுக்கடை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தாய்சோலாவில் தனியார் எஸ்டேட்டுக்கு சொந்தமான தேயிலை தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலை உள்ளது
    • தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பணிக்கு செல்வதை புறக்கணித்து வருகின்றனர்.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள தாய்சோலாவில் தனியார் எஸ்டேட்டுக்கு சொந்தமான தேயிலை தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

    தொழிலாளர்களுக்கு வேண்டிய 2020-21-ம் ஆண்டிற்கான போனஸ், விடுப்பு ஊதியம், மருத்துவ பலன்கள், மாதந்தோறும் முறையாக ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பயன்களை வழங்க கோரி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக, பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், சுமூக தீர்வு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பணிக்கு செல்வதை புறக்கணித்து வருகின்றனர்.

    மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர். இதற்கு ஏ.ஐ.டி.யு.சி சி.ஐ.டியு, ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்ததால் நேற்று காலை தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் 150க்கும் மேற்பட்டோர் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    தொடர்ந்து அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மாதேவன், பழனி, ருத்ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தை ெதாடர்ந்து கஞ்சி திறக்கும் போராட்டமும் நடத்தினர். இதற்கிடையே அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குந்தா தாசில்தார் இந்திரா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் ரூரல் டி.எஸ்.பி.(ெபாறுப்பு) செந்தில்குமார், எஸ்டேட் நிர்வாகம் சார்பில் மேலாளர் சூசை, தொழிற்சங்கம் சார்பில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுசெயலாளர் போஜராஜ், ஏ.ஐ.டியு.சி கட்டி தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆரி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் ரகுநாதன், ஐ.என்.டி.யு.சி செயலாளர் வின்சென், சி.ஐ.டி.யு செயலாளர் அலியார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    1 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படவில்லை.இதனால் மேலும் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை பணிக்கு செல்வதை புறக்கணிக்க போவதாகவும், தொடர்ந்து கஞ்சி தொட்டி திறப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

    • கோவையில் இருந்து மஞ்சூர் வழியாக கீழ்குந்தா செல்லும் அரசு பஸ்சில் பயணித்தார்.
    • பயணிகளை கீழே இறக்கி விட்டு கிரியுடன் பஸ்சை மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி அனிக்காடு பகுதியை சேர்ந்தவர் கிரி (54). பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இவருக்கு சரோஜாதேவி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    இந்நிலையில் கிரி தொழில் சம்மந்தமாக கோவைக்கு சென்றிருந்தார். அங்கு பணியை முடித்து விட்டு மீண்டும் நேற்று காலை கோவையில் இருந்து மஞ்சூர் வழியாக கீழ்குந்தா செல்லும் அரசு பஸ்சில் பயணித்தார்.

    அப்போது நடு வழியில் பஸ் சென்ற போது ஒரு பக்கமாக சாய்ந்தபடி காணப்பட்ட கிரியை கண்டு சந்தேகம் அடைந்த கண்டக்டர் மற்றும் பயணிகள் அவரின் அருகே சென்று எழுப்ப முற்பட்டனர். ஆனால் கிரி எந்தவித அசைவும் இல்லாமல் சுயநினைவு இழந்தநிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பயணிகள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்க முயற்சித்த நிலையில் நடுக்காட்டில் செல்போன் தொடர்பு கிடைக்கவில்லை.

    இதையடுத்து டிரைவர் நவநீதகுமார் பஸ்சை விரைவாக செலுத்தி மஞ்சூர் சென்றடைந்தபின் பிற பயணிகளை கீழே இறக்கி விட்டு கிரியுடன் பஸ்சை மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் மருத்துவமனையில் கிரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து மஞ்சூர் எஸ்.ஐ.தனபால் தலைமையில் விரைந்து சென்ற போலீசார் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுக்கடை மட்டுமின்றி பல்வேறு வகையிலும் பஜார் பகுதியில் உள்ள பிற கடைகளுக்கும் வருவாய் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
    • மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நேற்று காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை இரண்டு மணி நேரம் கடைகளை அடைத்தனர்.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் ஏராளமானோர் தினசரி மது பாட்டில்கள் வாங்குவதற்காக மஞ்சூருக்கு வந்து செல்கின்றனர்.

    இவர்கள் மூலம் மதுக்கடை மட்டுமின்றி பல்வேறு வகையிலும் பஜார் பகுதியில் உள்ள பிற கடைகளுக்கும் வருவாய் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தற்போது அரசு டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ள பகுதியின் அருகே வசிக்கும் சிலர் மதுக்கடையால் பெரும் இடையூறு ஏற்படுவதாகவும், அப்பகுதியில் இருந்து மதுக்கடையை அகற்ற வேண்டும் என தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர்.

    மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் மனு கொடுத்துள்ளனர். இதை தொடர்ந்து டாஸ்மாக் மதுக்கடையை அப்பகுதியில் இருந்து மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் பரவியது.

    இந்நிலையில் மதுக்கடையை மஞ்சூரில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றினால் தங்களது வியாபாரம் பாதிக்ககூடும் என்பதால் வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து டாஸ்மாக் மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்வதை தவிர்த்து மஞ்சூர் பகுதியிலேயே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மேலும் மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 2 மணி நேரம் கடையடைப்பு நடத்தவும் தீர்மானத்தனர். இதன்படி மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நேற்று காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை இரண்டு மணி நேரம் கடைகளை அடைத்தனர்.

    இதை தொடர்ந்து மஞ்சூரிலேயே மதுக்கடையை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை கோரி வரும் 20ம் தேதி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளதாக கடைக்காரர்கள் சங்க தலைவர் சிவராஜ் தெரிவித்தார்.

    அரசு டாஸ்மாக் மதுக்கடையை மாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் அவசர தேவைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டார்கள்.

    • தேயிலை எஸ்டேட் தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளை போனது.
    • கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.1.96 லட்சம் ஆகும்.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது தாய்சோலா. இப்பகுதியை சேர்ந்த லிங்கன் என்பவரது மனைவி கமலா அங்குள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    கமலா அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் சீட்டு பிடித்து வருகிறாராம். இந்நிலையில் சம்பவத்தன்று கமலா சீட்டு பிடித்த பணம் ரூ.45ஆயிரம் மற்றும் சேமிப்பு பணம் ரூ.47ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.92 ஆயிரம் மற்றும் 8 சவரன் தங்கநகை ஆகியவற்றை ஒரு பையில் சுற்றி வீட்டில் உள்ள சாமி படம் முன்பு வைத்திருந்தார்.

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி பார்த்தபோது சாமி படத்தின் அருகில் வைத்திருந்த நகை, பணம் அடங்கிய பை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பட்டப்பகலில் வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்படாத நிலையில் நகை மற்றும் பணம் கொள்ளை போனது குறித்து லிங்கன் மஞ்சூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி தலைமையில் விரைந்து சென்ற போலீசார் விசாரனை நடத்தினார்கள். கொள்ளை போனது ரொக்கப்பணம் ரூ.92 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சத்து 4ஆயிரம் மதிப்புள்ள 8 சவரன் தங்க நகை ஆகும். இதன் மொத்த மதிப்பு ரூ.1.96 லட்சம் என தெரியவந்தது.

    இதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் தாய்சோலா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ×