search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சுவிரட்டு"

    • வடவன்பட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மயில்ராயன்கோட்டை நாடு வடவன்பட்டி கிராமத்தில் முனிநாதர் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

    முன்னதாக இப்பகுதிகளை சேர்ந்த கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் முனி நாதர் பொட்டலிலும், கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன.

    விரட்டு மஞ்சுவிரட்டு என்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு ஓடிய காளைகளை வீரத்தோடு அடக்க முற்பட்டனர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர்.

    • அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 பேர் மீது வழக்கு செய்தனர்.
    • தென்கரை கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் நாச்சியார்புரம் போலீசில் புகார் செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தென்கரை பகுதியில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதுதொடர்பாக தென்கரை கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் நாச்சியார்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக அதே ஊரை சேர்ந்த வாசுதேவன் (வயது 75), சுப்பிரமணியன் (62), சொக்கலிங்கம் (46), செல்வராஜ் (27), குமார் (36) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    • ஆலங்குடி அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது
    • ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே துவரங்கொல்லைப்பட்டியில் பிடாரியம்மன், சித்திவிநாயகர், முத்துமுனீஸ்வரர், உருமநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு சித்தி விநாயகர் திடலில் நேற்று நடந்தது. கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி உறுதிமொழி வாசிக்க அதனை வீரர்கள் ஏற்றுக்கொண்டனர். முத்துராஜா எம்.எல்.ஏ., கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவ.பாஞ்சாலன், துணை தாசில்தார் செல்வராஜ், முதுநிலை வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். இதில், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 11 காளைகள் கலந்து கொண்டன. 11 சுற்றுகளாக நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 99 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். இதில் காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கட்டில், வெள்ளி நாணயம், மின்விசிறி, சில்வர் அண்டா, குக்கர், ஹாட் பாக்ஸ், மின்சார அடுப்பு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. மஞ்சுவிரட்டில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



    • திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு நடந்தது.
    • தென்கரை, கும்மங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் ஆகாச கருப்பர் அந்த நாச்சி அம்மன் கோவிலில் பூச்செரிதல் மற்றும் பால்குட சித்திரை திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடந்தது. முன்னதாக தென்கரை, கும்மங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டது. திரளோனோர் இதில் கலந்துகொண்டு அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்க முயன்றனர். விழாவிற்கான பணிகளை வாசுதேவன் அம்பலம், தலைவர் சுப்பிரமணியன், சொக்கலிங்கம், ராமராஜன், கவுதமன் மற்றும் ஊர் மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட தரியம்பட்டி கிராமத்தில் வழி விடு விநாயகர் வடக்கு வாசல் செல்வி அம்பாள் கருப்பர் ஆலய வருடா பிஷேக விழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்டன. பாய்ந்து ஓடிய காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்கிய காட்சிகளை பார்வை யாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் அம்பலக்காரர் ராஜா மற்றும் கிராம மக்கள், இளைஞர்கள் செய்தி ருந்தனர். போட்டிக்கான விழாக்குழு பணிகளில் கமிட்டி நிர்வாகிகளான பரமசிவம், போஸ், சிங்காரம், மணிமாறன், பெரியசாமி ஆகியோர் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை துணை கண்கா ணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
    • 2 பேர் இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஆதினமிளகி அய்யனார் முத்துமணிஅய்யா கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 252 காளைகளும், 70 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். காளைகள் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு சேர், பீரோ, அண்டா, சைக்கிள் போன்ற பரிசுகளும் அமைச்சர் சார்பில் வழங்கப்பட்டது.

    இந்த போட்டிக்கான ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் சுரேஷ் கருப்பையா அம்பலம், லேனா பெரிய தம்பி அம்பலம், மஞ்சரி லட்சுமண் ஆகியோர் செய்திருந்தனர். இந்த மஞ்சுவிரட்டில் 2 பேர் இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    • ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில், காரைக்குடியை சேர்ந்த பாண்டி (32) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலூர் மங்களாம்பட்டியை சேர்ந்த முருகன் (55) என்பவரும் மாடு முட்டி உயிரிழந்துள்ளார்.

    மேலும், மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    • மஞ்சுவிரட்டு போட்டிக்கு தடைகேட்ட வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
    • அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கி னை முடித்து வைத்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த முரு கேசன் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தி ருந்தார். அதில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் உள்ள கம்பளிப்பட்டி, நாகப்பன் சீவல்பட்டி, கந்துகப்பட்டி, தாயம்பட்டி ஆகிய கிராமங் களை உள்ளடக்கியது நெல்லுக்குண்டுபட்டி கிராமமாகும்.இந்த கிராமத்தில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு நாளை முதல் 9-ந் தேதி வரை கோயில் திருவிழாவை நடத்த கிராம மக்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளோம்.

    மேலும் கோயில் திருவிழாவின் கடைசி நாளில் மஞ்சுவிரட்டு மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    கடந்த ஆண்டு சிறுவன் ஒருவன் ஆடல் பாடல் நிகழ்ச்சியின்போது படுகொலை செய்யப்பட்ட காரணத்தால் கிராமத்தில் பெரும் பதற்றம் உருவாகி சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது.

    அதனால், இந்த ஆண்டு கோயில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என கிராம மக்கள் அனைவரும் முடிவு செய்துள்ளோம்.

    இந்நிலையில் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் 5 கிராம மக்களின் முடிவுக்கு எதிராக மஞ்சு விரட்டு நடத்த அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். அப்படி, மஞ்சுவிரட்டு நடத்தினால் கிராமத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே, மதுரை, மேலூர், நெல்லுக்குண்டு பட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்த தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசுத் தரப்பில், மனுதாரர் கூறியது போன்று மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி கோரி எந்த மனுவும் மாவட்ட நிர்வாகத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கி னை முடித்து வைத்தனர்.

    • திருப்பத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் 500 காளைகள் பங்கேற்றன.
    • இந்த போட்டியில் 19 பேர் படுகாயமடைந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே குமாரபேட்டை கிராமத்தில் அழகிய நாச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி திருவிழாவையொட்டி 5 ஊர் நாட்டார்கள் சார்பில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. 69-வது ஆண்டாக பாரம்பரிய மஞ்சு விரட்டு நிகழ்ச்சி மாவட்ட நிர்வாக அனுமதியுடன் நடைபெற்றது.

    இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் அனைத்தும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 16 காளைகள் நிராகரிக்கப் பட்டு 274 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 50 மாடுபிடி வீரர்கள் 2 குழுவாக காளைகளை பிடித்தனர். முன்னதாக வயல்வெளிகளில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன.

    இதில் சீறிபாய்ந்த காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் என 19 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அவசர சிகிச்சை மையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 2பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து மற்றும் வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அழகியநாச்சி அம்மன் கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கறம்பக்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடபெற்றது
    • நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளையை அடக்கிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா மாங்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் சந்தன காப்பு திருவிழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் 4ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து 11 மஞ்சுவிரட்டு காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளையையும் அடக்க ஒன்பது மாடுபிடி வீரர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டனர்.

    இந்த வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளையை அடக்கிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் செய்திருந்தனர். இப்போட்டியை மாங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பார்த்து மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.


    • மாடுவிடும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
    • காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெலமாரன அள்ளி கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு எனப்படும் மாடுவிடும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது .

    இதன் ஒரு பகுதியாக இன்று பெலமாரன அள்ளி கிராமத்தில் நடைபெற்ற மஞ்சு விடும் நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. கோ பூஜை செய்த பின்னர் கிடாவெட்டி தலையை குழிதோண்டி புதைந்த பின்னர். புனித நீர் காளைகளின் மேல் தெளித்த உடன் முதலில் ஊர் கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டது.

    அதனை தொடர்ந்து கொம்பன் பட்டம் கொம்பில் கட்டி அலங்கரிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வென்றாக அவிழ்த்து விட்டனர். ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர்.சீறி பாய்ந்து வரும் காளைகளின் கொம்பில் உள்ள கொம்பன் பட்டத்தை அதிகமாக அவிழ்த்து எடுக்கும் இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பார்வையாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

    • மஞ்சுவிரட்டில் 126 வீரர்கள் பங்கேற்றார்.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 17-வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி வடமாடு மஞ்சு விரட்டு கண்ணன் கோவில் திட லில் நடந்தது.

    தி.மு.க. மாவட்ட செய லாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிருஷ்ணாபுரம் கிராம தலைவரும், ஜல்லிக்கட்டு வடமாடு எருதுகட்டு பேரவை தலைவருமான ஆதித்தன் வரவேற்றார்.

    பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் போட்டியில் பங்கேற்றன. போட்டியில் முதல் காளை யாக காஞ்சிரங்குடி செவளைக்காளை களமிறக்கப்பட்டது. 9 பேர் கொண்ட குழு வினர் மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் சோளம்பட்டி தங்கம் நினைவு குழு வீரர்கள் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசு பெற்றனர்.

    காளைகளில் செல்வ குமார் என்பவரது காளை சிறப்பு பரிசு பெற்றது. மாடுபிடி வீரர்களுக்கு 25 நிமிடங்கள் காளையை பிடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.

    இதில் மாவட்ட கவுன்சிலர்கள் மண்டபம் மேற்கு கவிதா கதிரேசன், திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி, திருப்புல்லாணி மேற்கு கார்த்திகேஸ்வரி கொத்த லிங்கம், ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சங்கு (எ) முத்து ராமலிங்கம், திருப்புல்லாணி கிழக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவர் முனியசாமி, மதுரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கிருஷ்ணா புரம் கிராம பொதுமக்கள், விளை யாட்டுக்குழு, அனைத்து மகளிர் மன்றங்கள் செய்திருந்தன. போட்டியை காண்பதற்கு பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×