search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருடாபிஷேக விழா"

    • இதையொட்டி வருடாபிஷேக விழா நடைபெற்றது.
    • விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூர் ராம்நகரில் உள்ள மிகவும் பழமையான ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பா பிஷேகம் கடந்தாண்டு இதே நாளில் நடத்தப்பட்டது.

    இதையொட்டி வருடாபிஷேக விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    மேலும் ஹோம நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் விழாவையொட்டி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கோவில் தர்மகர்த்தாவுமான கே.கோபிநாத் தலைமையில் ஜெய்சங்கர், நீலகண்டன், அர்ச்சகர் ஸ்ரீதர் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட தரியம்பட்டி கிராமத்தில் வழி விடு விநாயகர் வடக்கு வாசல் செல்வி அம்பாள் கருப்பர் ஆலய வருடா பிஷேக விழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்டன. பாய்ந்து ஓடிய காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்கிய காட்சிகளை பார்வை யாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் அம்பலக்காரர் ராஜா மற்றும் கிராம மக்கள், இளைஞர்கள் செய்தி ருந்தனர். போட்டிக்கான விழாக்குழு பணிகளில் கமிட்டி நிர்வாகிகளான பரமசிவம், போஸ், சிங்காரம், மணிமாறன், பெரியசாமி ஆகியோர் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை துணை கண்கா ணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • அருணாசலேஸ்வர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டையில் உள்ள பச்சைநாயகியம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கடம் புறப்பாடாகி சுவாமி அம்பாளுக்கு புனிதநீர் ஊற்றி 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சுவாமிக்கும்-அம்பாளுக்கும் 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி பூஜைகள் செய்தனர்.

    இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அருணாசல ஈஸ்வரர் டிரஸ்ட் நிர்வாகிகள் ஜெகதீசன், செந்தில்குமார், ராஜேஷ் கண்ணா, கணக்கர் சிவகணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வேம்பத்தூர் கைலாசநாதர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
    • இரவு பவுர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூரில் அமைந்துள்ள ஆவுடை நாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.

    இந்த கோவிலில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்தாண்டு குடமுழுக்கு நடைபெற்றது.

    இந்த கோவிலில் மட்டும் நவகிரகங்களில்உள்ள புதன் பகவான் சிம்ம வாகனத்தில் காட்சிகொடுப்பதால் தென்மாவட்டங்களில் உள்ள புதன் தலமாக கருதப்படுகிறது. மாசி மகம் தினத்தில் வருடாபிஷேக விழா நடந்தது.

    கோவில் முன் மண்டபத்தில் புனித நீர்க் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன. பூர்ணாகுதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டது. கைலாசநாதர் சுவாமிக்கும், ஆவுடை நாயகி அம்மனுக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதன் பின்னர் கோவில் பரிவார தெய்வங்களுக்கும் பூஜை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    பின்னர் கோவிலில் நடந்த அன்னதானத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு பவுர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது.

    • அய்யனார் கோவில் வருடாபிஷேக விழா நடந்தது
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ பூர்ணகலா புஷ்ப கலா சமேத ஸ்ரீ ஐயனார் ஆலய வருடாபிஷேக விழா நடைபெற்றது. கோவிலை சுற்றியுள்ள பைரவர்நாகர், மதுரைவீரன், காலியாகப்பர், கொம்புக்காரர், செம்மீனேஸ்வரர், கருமுனீஸ்வரர், முத்துமருங்கர், பட்டாணி பெரி கருப்பன் மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர்அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாச்சிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

    ×