search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா
    X

    ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா

    • இதையொட்டி வருடாபிஷேக விழா நடைபெற்றது.
    • விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    ஓசூர்,

    ஓசூர் ராம்நகரில் உள்ள மிகவும் பழமையான ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில் ராஜகோபுர கும்பா பிஷேகம் கடந்தாண்டு இதே நாளில் நடத்தப்பட்டது.

    இதையொட்டி வருடாபிஷேக விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    மேலும் ஹோம நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் விழாவையொட்டி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை, ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கோவில் தர்மகர்த்தாவுமான கே.கோபிநாத் தலைமையில் ஜெய்சங்கர், நீலகண்டன், அர்ச்சகர் ஸ்ரீதர் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×