search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோ"

    • அரியலூரில் சிறுமியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • சைக்கிளில் சென்ற சிறுமியை வழிமறித்து மிரட்டியதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 21). இவர் 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் ஸ்டாலினின் தாயாரை சந்தித்து அவரது மகனை கண்டிக்குமாறு கூறியுள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியிலிருந்து சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை ஸ்டாலின் வழிமறித்து காதலிக்க வற்புறுத்தி மிரட்டியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோவில் வழக்குப்பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ராஜபாளையத்தில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • மாணவியிடம் மாரிமுத்து நெருங்கி பழகி உள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இவரும், அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 23) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாரிமுத்து டிப்ளமோ படித்துள்ளார்.

    இந்த நிலையில் திருமணம் செய்வதாக கூறி அந்த மாணவியிடம் மாரிமுத்து நெருங்கி பழகி உள்ளார். இதனால் அந்த மாணவி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனிடையே இந்த விவ காரம் குறித்து ராஜபாளை யம் விரிவாக்க அலுவலர் மேத்தா மேரிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் சம்பவ இடம் சென்று விசாரித்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து அவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி மாணவியை கர்ப்பிணி யாக்கிய மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

    • சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • ராம மூர்த்தி சிறுமியை திருவிழாவிற்கு அழைத்து சென்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள இலங்கிப்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் காதலித்து வந்தனர்.

    இந்த நிைலயில் திருவிழாவிற்காக சிறுமி ஊருக்கு வந்தார். ராம மூர்த்தி சிறுமியை திரு விழாவிற்கு அழைத்து சென்றார். அப்போது திருமணம் செய்து கொள்வ தாக ஆசை வார்த்தை கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத் காரம் செய்துள்ளார். பின்னர் பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது சிறுமியின் தாய்க்கு தெரிய வந்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமி கடத்தல்

    சிவகாசி அருகே உள்ள நதிக்குடியை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது 17 வயது மகளை அதே ஊரை சேர்ந்த முத்து முனியாண்டி என்பவர் கடத்தி சென்றதாக மாரனேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி மாணவியை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக அவரை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிப்பை விடுதியில் தங்கி படித்து வருகின்றார்.

    இந்நிலையில் கீழநீலித நல்லூர் கிராமத்தை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் அஜய் பிரசாத் (வயது 20) என்பவர் அந்த பள்ளி மாணவியை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக அவரை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று அந்த மாணவி வீட்டின் அருகே சென்ற அஜய் பிரசாத், மாணவியிடம் நீ என்னை காதலிக்கவில்லை என்றால் முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன் என மிரட்டியதாக மாணவியின் பெற்றோர் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மாணவியை மிரட்டியதை அறிந்த அவரது உறவினர்கள் சம்பவத்தன்று கீழநீலிதநல்லூர் பிள்ளையார் கோவில் அருகே அஜய்பிரசாத் சூப் குடிக்க சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்றனர். அங்குள்ள மரத்தில் அவரை கட்டி வைத்து கம்பால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து விசாரணை நடத்திய பனவடலிசத்திரம் போலீசார், அஜய் பிரசாத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • டாக்டர் கொடுக்கும் மருத்துவ அறிக்கைக்கு பின் மாரிமுத்துவை கைது செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்

    புதுக்கோட்டை:

    கீரனூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 70). இவர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், மாரிமுத்துக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர் கொடுக்கும் மருத்துவ அறிக்கைக்கு பின் மாரிமுத்துவை கைது செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.



    • பெற்றோரிடம் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் சிறுவர்களை மிரட்டி உள்ளார்.
    • தந்தை உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    உடுமலை :

    மடத்துக்குளம் தாலுக்கா கடத்தூரைச் சேர்ந்த அப்பு குட்டி என்கின்ற ஈஸ்வரன்( வயது 35).இவர் குமரலிங்கத்தில் குடியிருந்து கொண்டு கூலிவேலை செய்து வருகிறார்.ஈஸ்வரன் நேற்று முன் தினம் வழக்கம்போல் அமராவதி பகுதிக்கு கூலிவேலைக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது கல்லாபுரத்தைச் சேர்ந்த 13 மற்றும் 8 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் (அண்ணண்,தம்பி) அவர்களது வயலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.அந்த வழியாக வந்த ஈஸ்வரன் இரண்டு சிறுவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்து உள்ளார்.மேலும் அவர்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அமராவதி முதலைப் பண்ணைக்கு அருகே உள்ள சுடுகாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார்.

    பின்னர் அவர்கள் இருவரையும் ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி அடித்ததுடன் பாலியல் தொந்தரவுக்கும் உட்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் சிறுவர்களை மிரட்டி உள்ளார். தங்களுக்கு நேர்ந்த கொடுமையை இரண்டு சிறுவர்களும் நேற்று முன்தினம் இரவு பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்களது தந்தை உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஈஸ்வரனை கைது செய்தனர்.மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.சிறுவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கல்லாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமியிடம் சில்மிசம் செய்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • முதியவரை ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியை சேர்ந்த 11 வயது சிறுமி. இவர் அதிகாலையில் வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பெரியாண்டவர் (வயது74) சிறுமியிடம் அத்துமீறி நடக்க முயற்சித்தார். அப்போது சிறுமி கூச்சலிட்டார். அதைகேட்டு அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

    அவர்கள் முதியவரை பிடித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர். இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் வழக்குப்பதிவு செய்து முதியவரை போக்சோவில் கைது செய்தார்.

    • நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து தனியார் தன்னார்வ அமைப்பு ஒன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • போலீசார் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 5 ஆசிரியர்களை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் உள்ள பழங்குடியின மாணவிகளிடையே நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து தனியார் தன்னார்வ அமைப்பு ஒன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது தன்னார்வலர்கள் அங்குள்ள மாணவிகளிடம் இதுபோன்ற சம்பவம் ஏதாவது உங்களுக்கு நிகழ்ந்து உள்ளதா என கேட்டனர்.

    அப்போது மலைக்கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பில் படிக்கும் மாணவிகள் தங்களுக்கு பாலியல் தொல்லை நடந்ததாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து புகார் எழுதி அவர்கள் வைத்திருந்த பெட்டியில் போட்டனர்.

    மாணவிகள் தங்களிடம் 5 ஆசிரியர்கள் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்திருந்தனர்.

    இதுகுறித்து தன்னார்வலர்கள் மாவட்ட கல்வி அதிகாரி சலீம் பாஷாவுக்கு தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் மண்டல கல்வி அலுவலர், பெண் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரிகள் ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

    இதில் பள்ளி வகுப்பறையில் 5 ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

    விசாரணையில் பாலியல் தொல்லை உறுதி செய்யப்பட்டது. இது குறித்து கல்வி அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 5 ஆசிரியர்களை கைது செய்தனர். அவர்களை ஜெயிலில் அடைத்தனர்.

    • பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
    • 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.

    திருப்பூர் :

    தேனி மாவட்டம், போடி நாயக்கனூரைச் சோ்ந்தவா் பிருத்திவிராஜ் (வயது 40). இவா், திருப்பூா், கருவம்பா ளையம் பகுதியில் குடும்ப த்துடன் தங்கியிருந்து பின்ன லாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

    இந்த நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பிருத்திவிராஜ் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த தாகத் தெரிகிறது. இதுகுறித்து திருப்பூா் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்திருந்தனா். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த பிருத்திராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். 

    • போக்சோ வழக்கில் சிறுமியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • ஆனந்தன் வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் பெத்துசெட்டிபட்டியை ேசர்ந்தவர் ஆனந்தன் (வயது44). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது மகள் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்.28-ந்தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து வச்சக்கா ரப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆனந்தன் புகார் செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த தமிழரசன் (20) என்பவர் ஆனந்தன் மகளை கடத்தி சென்று திருமண ஆைச காட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.

    போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டில் நடந்து வருகிறது. விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்காக ஆனந்தன் தனது மகளை அழைத்து சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, தமிழரசன் மற்றும் தனது நண்பர் வீரபாண்டியுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து வழக்கை வாபஸ் வாங்க கூறி ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆனந்தன் வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி வெளியூருக்கு அழைத்து சென்று உள்ளார்.
    • சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மங்கலம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஞானபிரகாஷ் (வயது 33) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி வெளியூருக்கு அழைத்து சென்று உள்ளார். இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது சிறுமி ஞானப்பிரகாசுடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கண்டுபிடித்து விசாரணைக்கு அழைத்து வந்த போது சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

    விசாரணையில் ஞானபிரகாஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மகள் கிடைக்காததால் இது குறித்து அவரது பெற்றோர் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தனர்.
    • மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வது தவறு என்பதை உணர்த்தி செல்வம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ஆரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சத்துவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 21), யூடியூப் சேனல் மூலம் செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

    செல்வம் பதிவு செய்து வந்த வீடியோக்களை ஆரணி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது மாணவி தினமும் பார்த்து பதில் போட்டு வந்துள்ளார். இதன் மூலம் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது.

    இதனையடுத்து செல்வம் கடந்த 29-ந் தேதி மாணவியை பார்ப்பதற்காக ஆரணிக்கு வந்தார். பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

    தேர்வு எழுத சென்ற மகள் வீடு திரும்பாததால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். மகள் கிடைக்காததால் இது குறித்து அவரது பெற்றோர் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் மாணவியின் செல்போன் மூலம் துப்புதுலக்கினர். அவர் ஜெயங்கொண்டம் அருகே இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாபுதீன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் ஜெயங்கொண்டத்திற்கு விரைந்து சென்று இருவரையும் ஆரணிக்கு அழைத்து வந்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, மாணவியை வாலிபர் தாலி கட்டி திருமணம் செய்தது தெரிந்தது. மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வது தவறு என்பதை உணர்த்தி செல்வம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பள்ளி மாணவியை சமரசம் செய்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    ×