search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் அச்சம்"

    • அபிராமம் தெருக்களில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி. அபிராமம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் போதிய உணவு, தண்ணீர், கிடைக்காமல் குரங்குகள் வெளியேறி அபிராமம் டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுற்றிதிரிகின்றன.

    அபிராமம், வல்லகுளம், விரதக்குளம், பள்ளபச்சேரி உள்ளிட்ட கிராம பகுதிகளில் தென்னைமரங்களில் தாவி குதித்து வருவதுடன் தென்னை மரங்களையும், தென்னங்காய்களையும் நாசம் செய்து வருகின்றன. மேலும் அபிராமம் தெருக்களில் குரங்குகள் சுற்றிதிரிவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை நிலவுகிறது.

    அபிராமம் தெருக்க ளிலும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • 10-க்கும் மேற்பட்ட ஆடுகளையும்,1 பசுமாட்டையும், கடித்துக் கொன்றுள்ளன.

    பல்லடம் :

    பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையத்தில் நாய்கள் கடித்து சுமார் 5-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்ததாகவும், நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பல்லடம் பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கொடுத்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- விவசாய நிலத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறோம். தற்பொழுது அதுதான் குடும்ப வருமானத்திற்கு உதவி செய்கிறது.

    இந்த நிலையில் கிராமத்தில் சுற்றி திரியும் நாய்கள், ஆடுகளை கடித்து கொன்று விடுகின்றன. இதுவரை எங்கள் பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளையும்,1 பசுமாட்டையும், கடித்துக் கொன்றுள்ளன.

    கால்நடைகளை நம்பி வாழ்ந்து வரும் எங்களுக்கு இழப்பீடு வழங்கவும், கால்நடைகளை, நாய்கள் கடிக்காமல் இருக்கவும், நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அலுவலகத்துக்கு பின்புறம் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது.
    • அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் கும்பலாக கூடும் இளைஞர்கள் சிலர் இங்கு அமர்ந்து மது அருந்துகின்றனர்.

    உடுமலை:

    இன்றைய நிலையில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் போதையின் பிடியில் சிக்கி மீண்டு வர முடியாத நிலை உள்ளது.ஒருசில பகுதிகளில் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் மாணவிகளும் போதையில் அட்டகாசம் செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.பல குற்ற சம்பவங்களுக்கு அடிப்படையாக போதை உள்ளது நிரூபணமாகியுள்ளது.உடுமலை-தளி சாலையில் உள்ள மேம்பாலத்துக்கு கீழ்,காந்திசவுக் பகுதியில் கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அமைந்துள்ளது.இந்த அலுவலகத்துக்கு பின்புறம் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது.இதற்கு எதிரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.மேலும் வழிபாட்டுத்தலங்களும் இந்த பகுதிக்கு அருகில் உள்ளது.இந்தநிலையில் சமீப காலங்களாக இந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்குப் பின்னால் காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்டமாக ஒன்றுகூடும் போதை ஆசாமிகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    அதுமட்டுமல்லாமல் கஞ்சா,போதை மாத்திரைகள்,ஊசிகள் என பலவிதமான போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர்.அதனை தட்டிக் கேட்பவர்களை தரக்குறைவான வார்த்தைகளில் பேசுகின்றனர்.மேலும் அடிக்கடி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு,காது கூசுமளவுக்கு அசிங்கமான வார்த்தைகளால் மோதிக் கொள்கின்றனர்.இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாடவே அச்சப்படும் நிலை உள்ளது.அதுமட்டுமல்லாமல் இந்த போதை ஆசாமிகளுக்கு பல குற்ற சம்பவங்களில் தொடர்பு இருக்கும் என்ற அச்சம் உள்ளதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.மதுவை வெறுத்த மகானின் பெயர் தாங்கிய காந்திசவுக் பகுதியில்,அதிகாரம் படைத்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு அருகில் நடைபெறும் இந்த அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் இவர்களுக்கு போதைப்பொருட்கள் கிடைப்பது எப்படி?இவர்கள் மூலம் போதைப் பொருட்கள் புழக்கத்தில் விடப்படுகிறதா?என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகும்'என்று பொதுமக்கள் கூறினர்.

    • ரோட்டில் திரியும் குதிரைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
    • இந்த குதிரைகளால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் பகுதியில் பொதுமக்கள் பலர் ஆடு, மாடு, மற்றும் குதிரைகள் வளர்த்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள குதிரைகள் அடிக்கடி அந்தியூர் நகரின் முக்கிய பகுதி ரோடுகளில் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்தியூர் பஸ் நிலையம் பகுதி, பர்கூர் சாலை, அத்தாணி சாலை, ஆப்பக்கூடல் செல்லும் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, விளையாட்டு மைதானத்திலும் குதிரைகள் அதிக அளவில் சுற்றுகின்றன.

    ரோட்டில் திரியும் குதிரைகளால் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, விளையாட்டு மைதானத்திற்குள் நடை பயிற்சி செய்பவர்களும், விளையாடும் மாணவர்க ளும் எந்த நேரத்தில் இந்த குதிரை வந்து நம்மை தாக்கி விடுமோ என்ற ஒரு வித அச்சத்தோடு சென்று வருகிறார்கள்.

    இதேபோல் சாலையில் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும்தங்களை கீழே தள்ளி விடுமோ என்ற பயத்திலும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குதிரைகளால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    எனவே ரோட்டில் சுற்றி திரியும் குதிரைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குதிரையின் உரிமை யாளர்களை எச்சரிக்க வேண்டும் என்று பொது மக்கள், தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    • தாட்கோ கட்டிடம் பழுதடைந்து கடந்த 2014 முதல் செயல்படாமல் உள்ளது.
    • கட்டடங்கள் பழுதடைந்து எந்த நேரமும் இடிந்து விழ காத்திருக்கின்றன.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு தாட்கோ மூலம் ஆதி திராவிட மக்கள் பயன்பெறும் வகையில் 10 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்தநிலையில் அந்தக் கட்டிடம் பழுதடைந்ததால் கடந்த 2014 முதல் அந்த கட்டடத்தில் கடைகள் செயல்படவில்லை.காலியாக உள்ளது.இந்த நிலையில் இந்த பழுதடைந்த கட்டடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுமாறும், அல்லது பல்லடம் நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என பலமுறை தாட்கோ நிர்வாகத்திற்கு நகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டும் இன்னும் அவர்கள் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கட்டடங்கள் பழுதடைந்து எந்த நேரமும் இடிந்து விழ காத்திருக்கின்றன. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்லடம் பஸ் நிலையத்தில், உள்ள சுகாதார வளாகம சுவர் விழுந்து ஒருவர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், அந்த கட்டடத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இரும்புத் தகடுகளிலான தடுப்பு வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    தாட்கோ கட்டிடம் பழுதடைந்து கடந்த 2014 முதல் செயல்படாமல் உள்ளது. எந்த நேரமும் இடிந்து விழலாம் என்பதால் இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டி தாட்கோ நிர்வாகத்திற்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் இடப்பற்றாக்குறை உள்ளதால் நகராட்சிக்கு அந்த இடத்தை ஒப்படைத்தால் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் நிலையம், சுகாதார வளாகம் போன்றவை அமைக்க இடம் தேவைப்படுகிறது என பலமுறை தாட்கோ நிறுவனத்திற்கு கடிதங்கள் வாயிலாகவும், நேரிடையாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் அமைச்சர், மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் இதுகுறித்து மீண்டும் வலியுறுத்தி கட்டடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • விருதுநகரில் தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • நகராட்சி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் கூட்டமாக நிற்கும் தெருநாய்கள் அந்த வழியாக செல்வோரை விரட்டிச்சென்று கடிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் பெரியகிணற்று தெருவில் வெறிநாய் கடித்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட னர். நாள்தோறும் விருதுநகரில் நாய் கடிக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெருவில் விளையாடும் குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே நகராட்சி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பஸ் நிறுத்தம், கடை வீதிகளில் சுற்றித் திரியும் மன நோயாளிகள்யால் மாணவர்கள்-பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • ராமேசுவரம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு வரும் வடமாநிலத்தவர்கள் முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விட்டு சென்று விடுகின்றனர்.

    அபிராமம்

    அபிராமம் பகுதியில் பஸ் நிறுத்தம், கடை வீதிகளில் மனநோயாளிகள் சுற்றி திரிகின்றனர். மேலும் அவர்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையிலும், முகம் சுளிக்கும் வகையிலும் நடந்து கொள்கின்றனர்.

    பஸ் நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளுக்கும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் மனநோயாளிகள் நடந்து கொள்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், முதியோர் ஒருவித அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர்.

    இதற்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வீடுகளில் சுற்றி திரிந்த மனநோயாளிகளை காப்பகத்தில் சேர்த்தனர். அந்த திட்டம் தொடர்ந்து பின்பற்றபடவில்லை. இதனால் தற்போது மனநோயாளிகள் மீண்டும் வீதிகளில் சுற்றி திரிகின்றனர்.

    ராமேசுவரம் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு வரும் வடமாநிலத்தவர்கள் முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விட்டு சென்று விடுகின்றனர். அவர்கள் தங்க இடமின்றி தெருவீதிகளில் சுற்றி திரியும் நிலை ஏற்பட்டு விடுகிறது. மேலும் பொதுமக்களுக்கும் அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த நிலையில் மனநோயாளிகள் தெரு வீதிகளில் சுற்றி திரியாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மனநலத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அந்தியூர் பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
    • இதன் பேரில் போலீ சார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அந்தியூர்:

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த பகுதியில் ஒரு கடையில் டீ குடிக்க சென்றார்.

    இதையடுத்து அவர் கடை யில் டீ குடித்து விட்டு வெளியே வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல் அந்தியூர் பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்த னர். இதன் பேரில் போலீ சார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஆனால் திருடர்கள் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அந்தியூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடும் கும்பல் சி.சி.டி.வி கேமிரா இல்லாத இடங்களில் நோட்டமிட்டு அந்த பகுதியில் வந்து பொது மக்கள் போல் வந்து வாகன ங்களை திருடுவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் போலீசாரிடம் சிக்காமல் உள்ள இந்த திருட்டு கும்பலை விரைந்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ள னர்.

    இந்த பகுதிகளில் திருடப் படும் பெரும்பாலான வாக னங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லாத காரணத்தால் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை எனவும், இதனால் வாகனத்திருட்டில் ஈடுபடுபவர்கள் எந்தவித பயமும் இன்றி திருடிச் செல்கின்றார்கள் என மக்கள் புகார் கூறினர்.

    இதேபோல் அந்தியூர் முன்னாள் தாசில்தா–ரின் இரு சக்கர வாகனம் தாலுகா அலுவலகத்தி லேயே மர்ம நபர்கள் திருடி சென்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடிய வில்லை. தொடர்கதை யாகவே இந்த இருசக்கர வாகன திருட்டு நடந்து கொண்டு வருகிறது.

    எனவே அவர்களை பிடிக்க போலீசார் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரத்தில் சந்தேக ப்படும்படி இருப்ப வர்களன் நடமாட்டத்தையும் வாகனத்தின் அருகே நிற்பவர்கள் யார்? எதற்காக அங்கு இருக்கிறீர்கள் என விசாரணை நடத்த வேண்டும்.

    மேலும் டீ கடைகளில் தேவையின்றி அமர்ந்தி ருக்கும் நபர்களை அமர வைக்க கூடாது. அதே போல் சந்தேகம்படும் நபர் களை கண்காணித்து போலீ சார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ரூ. 64 ஆயிரம் செல்போன் உள்ள பணப்பையை பறித்துக் கொண்டு பறந்துவிட்டனர்.
    • சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்ன சேலத்தில்கடந்த 15-ந் தேதி அன்று மகேஸ்வரி என்ற மூதாட்டியிடம் ரூ. 64 ஆயிரம் செல்போன் உள்ள பணப்பையை பறித்துக் கொண்டு பறந்துவிட்டனர். இந்த சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆன நிலையில் இதே சின்னசேலம் பகுதியை சேர்ந்த கோவைக்கண்ணி மூதாட்டி கழுத்தில் தாலிச் சங்கிலியை திருடி சென்றனர்.

    இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்துள்ளார். தொடர்ந்து திருட்டு சம்பவம் சின்னசேலம் பகுதியில் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் தீபாவளி பண்டிகை நெருங்கவதால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்ல அச்சத்தில் உள்ளனர். எனவே சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் காலை மாலை ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வங்கி பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அவிநாசி, சேவூர் ரோடு காமராஜ் நகரில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் அப்பகுதியில் சுற்றிச்சுற்றி வருகிறது
    • வெளியில் தனியாக குழந்தைகளை அனுப்ப பயமாக இருக்கிறது.

    அவிநாசி :

    அவிநாசி, சேவூர் ரோடு காமராஜ் நகரில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் அப்பகுதியில் சுற்றிச்சுற்றி வருகிறது. பகல் மற்றும் இரவு நேரத்தில் சாலையில் சுற்றி திரிவதோடு, நடத்து செல்லும் குழந்தைகளை துரத்துதல், மோ ட்டார் சைக்கிள்களில் செல்வோரை கடிக்க துரத்துதல் போன்ற செயல்களில் நாய்கள் ஈடுபடுகின்றன.இது குறித்து காமராஜ் நகரை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    வெளியில் தனியாக குழந்தைகளை அனுப்ப பயமாக இருக்கிறது. அருகில் உள்ள மளிகை கடைக்கு செல்வதற்கே நாய்கள் எங்காவது சுற்றி கொண்டிருக்கின்றதா என்று பார்த்து விட்டு தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட நாய்கள் ரோட்டில் அங்கும் இங்கும் ஓடுவதால் எந்த சமயத்தில் என்ன நடக்குமே என்ற அச்சமே அதிகரிக்கிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ரோட்டில் வந்து நிற்க முடிவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், நாய்களை பிடித்து அதற்கு கருத்தடை ஊசி போட உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்றனர்.

    • சாரப்பாம்பை கண்டு பொதுமக்கள் பதறி அடித்து ஓடினர்.
    • பொதுமக்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    உடுமலை :

    உடுமலை நேதாஜி மைதானம் நுழைவாயில் எதிரில் உள்ள காலியிடம் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காளியம்மன் கோவில் பகுதியில் திடீரென நடமாடிய ஒற்றை சாரப்பாம்பை கண்டு பொதுமக்கள் பதறி அடித்து ஓடினர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    மேலும் இந்த பகுதியில் கோவில் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் .எனவே புதர்பகுதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாஞ்சூர் ரவுண்டானா பனங்குடி இடையே உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
    • சாலை வழியே செல்லும் பொதுமக்கள் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படுமா? என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாகூரில் இருந்து மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பனங்குடி ஊராட்சி பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட பகுதியில் சேர்ந்த மக்கள் அன்றாடம் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர நாகூர்-நன்னிலம் சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில் வாஞ்சூர் ரவுண்டானா பனங்குடி இடையே உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அதேபோல் எதிரே புதுமனை தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்து மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் சாலை வழியே செல்லும் பொதுமக்கள் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படுமா? என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன்னர் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    ×