search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "serial vehicle theft"

    • அந்தியூர் பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
    • இதன் பேரில் போலீ சார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அந்தியூர்:

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த பகுதியில் ஒரு கடையில் டீ குடிக்க சென்றார்.

    இதையடுத்து அவர் கடை யில் டீ குடித்து விட்டு வெளியே வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல் அந்தியூர் பகுதியில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்த னர். இதன் பேரில் போலீ சார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஆனால் திருடர்கள் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அந்தியூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடும் கும்பல் சி.சி.டி.வி கேமிரா இல்லாத இடங்களில் நோட்டமிட்டு அந்த பகுதியில் வந்து பொது மக்கள் போல் வந்து வாகன ங்களை திருடுவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் போலீசாரிடம் சிக்காமல் உள்ள இந்த திருட்டு கும்பலை விரைந்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ள னர்.

    இந்த பகுதிகளில் திருடப் படும் பெரும்பாலான வாக னங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லாத காரணத்தால் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை எனவும், இதனால் வாகனத்திருட்டில் ஈடுபடுபவர்கள் எந்தவித பயமும் இன்றி திருடிச் செல்கின்றார்கள் என மக்கள் புகார் கூறினர்.

    இதேபோல் அந்தியூர் முன்னாள் தாசில்தா–ரின் இரு சக்கர வாகனம் தாலுகா அலுவலகத்தி லேயே மர்ம நபர்கள் திருடி சென்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடிய வில்லை. தொடர்கதை யாகவே இந்த இருசக்கர வாகன திருட்டு நடந்து கொண்டு வருகிறது.

    எனவே அவர்களை பிடிக்க போலீசார் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரத்தில் சந்தேக ப்படும்படி இருப்ப வர்களன் நடமாட்டத்தையும் வாகனத்தின் அருகே நிற்பவர்கள் யார்? எதற்காக அங்கு இருக்கிறீர்கள் என விசாரணை நடத்த வேண்டும்.

    மேலும் டீ கடைகளில் தேவையின்றி அமர்ந்தி ருக்கும் நபர்களை அமர வைக்க கூடாது. அதே போல் சந்தேகம்படும் நபர் களை கண்காணித்து போலீ சார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×