search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Horses roaming"

    • ரோட்டில் திரியும் குதிரைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
    • இந்த குதிரைகளால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் பகுதியில் பொதுமக்கள் பலர் ஆடு, மாடு, மற்றும் குதிரைகள் வளர்த்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள குதிரைகள் அடிக்கடி அந்தியூர் நகரின் முக்கிய பகுதி ரோடுகளில் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்தியூர் பஸ் நிலையம் பகுதி, பர்கூர் சாலை, அத்தாணி சாலை, ஆப்பக்கூடல் செல்லும் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, விளையாட்டு மைதானத்திலும் குதிரைகள் அதிக அளவில் சுற்றுகின்றன.

    ரோட்டில் திரியும் குதிரைகளால் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி, விளையாட்டு மைதானத்திற்குள் நடை பயிற்சி செய்பவர்களும், விளையாடும் மாணவர்க ளும் எந்த நேரத்தில் இந்த குதிரை வந்து நம்மை தாக்கி விடுமோ என்ற ஒரு வித அச்சத்தோடு சென்று வருகிறார்கள்.

    இதேபோல் சாலையில் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும்தங்களை கீழே தள்ளி விடுமோ என்ற பயத்திலும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குதிரைகளால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    எனவே ரோட்டில் சுற்றி திரியும் குதிரைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குதிரையின் உரிமை யாளர்களை எச்சரிக்க வேண்டும் என்று பொது மக்கள், தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    • நள்ளிரவு நேரங்களில் கதவை தட்டுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    • மதுக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடைத்துறை உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குனியமுத்தூர்,

    மதுக்கரை மார்க்கெட் பகுதி ஏராளமான வீடுகள் அடங்கிய பகுதியாகும்.

    எந்த நேரமும் நான்கு சக்கர வாகனங்களும், 2 சக்கர வாகனங்களும், பேருந்துகளும் அப்பகுதி யை கடந்து சென்று கொண்டிருக்கும். இந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குதிரை கூட்டங்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

    மதுக்கரை மார்க்கெட் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் குதிரை கூட்டங்கள் பள்ளி மாணவ, மாணவிகளை துரத்துவதால் அவர்கள் மிரண்டு. போய் ஓடும் சூழ்நிலை உள்ளது.

    மேலும் சாலையை வழிமறித்துக் கொண்டு குதிரை கூட்டங்கள் நிற்பதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

    இதுதவிர இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் குதிரைகள் கூட்டமாக வருவதை கண்டு தடுமாறி கீழே விழும் சூழ்நிலையும் காணப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூ றியதாவது:- இரவு நேரங்களில் கதவை தட்டும் சத்தம் கேட்டு நாங்க ள் மிரண்டு போய் வந்து கதவை திறந்து பார்த்தால் குதிரை நிற்கிறது.

    வாசலில் குதிரை நின்று கொண்டு தன்னுடைய தலையால் கதவை முட்டிக்கொண்டு இருக்கிறது. விரட்டி விட்டாலும் நகராமல் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. தெருக்களில் சைக்கிள் செல்லும் குழந்தைகள், குதிரைகள் கூட்டமாக வருவதைக் கண்டு அங்கேயே போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடிவரும் சூழ்நிலை காணப்படுகிறது.

    எனவே மதுக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடைத்துறை உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ×