search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் அச்சம்"

    • 60-வது வார்டு கோவில்வழி. தென் மாவட்டங்கள் செல்வதற்கான பேருந்து நிலையம் இங்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • கோவில் வழியில் போதிய சிசிடிவி., கேமராக்கள் இல்லாததால், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க முடியாத நிலை உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரின் 60-வது வார்டு கோவில்வழி. தென் மாவட்டங்கள் செல்வதற்கான பேருந்து நிலையம் இங்கு விரிவாக்கம் செய்யப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு வருவதால் பொதுமக்கள் பலரும் இந்த பகுதியில் குடியேறி வருகின்றனர்.

    இப்பகுதியில் அடிக்கடி தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவரும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொறுப்பாளருமான பரமசிவம் கூறியதாவது:-

    கோவில்வழி பகுதியை சுற்றியுள்ள முத்தணம்பாளையம், பிள்ளையார் நகர் மேற்கு, சேரன் நகர் ஆகிய 3 பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் சமீபகாலமாக திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சேரன் நகர் 2-வது வீதியில் ஈஸ்வரன் - ராணி தம்பதி வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு,சண்முகம் - சண்முகப் பிரியா தம்பதி வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் 8 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் திருட்டு, நடைபெற்றது, இதனை தொடர்நது ஜெயராஜ் - மாலதி தம்பதி வீட்டில் கடந்த ஆண்டு இறுதியில் 3 பவுன் தங்க நகை, வெள்ளி, ரொக்கம் திருட்டு என இப்பகுதிகளில் அரங்கேறிய திருட்டு சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

    இந்த வழக்கு தொடர்பாக நல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, பல மாதங்களாகியும் இதுவரை எந்த வழக்கிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நடுத்தர குடும்பத்தினர் சிறுக சிறுக சேமித்து, நகையை வாங்கி வீட்டில் வைத்தால், அவற்றுக்கும் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது.

    மாநகர போலீசார் தொடர்ந்து எங்கள் பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினால் மட்டுமே திருட்டு சம்பவங்களை தடுக்க முடியும். எங்கள் பகுதியில் போதிய தெருவிளக்குகளும் இல்லாததால், குற்றச்செயல்கள் அரங்கேற ஏதுவாக அமைந்து விடுகிறது. பொதுமக்களின் தேவை கருதி போதிய தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என கூறியுள்ளார்.

    இது தொடர்பாக, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபுவிடம் கேட்டபோது, கோவில் வழியில் போதிய சிசிடிவி., கேமராக்கள் இல்லாததால், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க முடியாத நிலை உள்ளது. அந்த பகுதியில் சிசிடிவி., கேமராக்கள் அமைக்க குடியிருப்பு வாசிகளிடம் பேசி வருகிறோம்" என்றார்.

    • 5ம் நம்பர் தேயிலை தோட்டம் அருகிலும் சிறுத்ைத நடமாடியதால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் வண்டிபெரியார் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
    • கடந்த ஒரு வாரத்தில் தேயிலை தோட்டத்தில் ஆடு, நாய்கள் கொல்லப்பட்டு இறந்து கிடந்தன.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே மூங்கிலாறு பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பணி முடிந்து திரும்பியபோது தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டத்தை பார்த்தனர்.

    மேலும் 5ம் நம்பர் தேயிலை தோட்டம் அருகிலும் சிறுத்ைத நடமாடியதால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் வண்டிபெரியார் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

    கடந்த ஒரு வாரத்தில் தேயிலை தோட்டத்தில் ஆடு, நாய்கள் கொல்லப்பட்டு இறந்து கிடந்தன. சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மக்கள் கூறிய இடங்களில் செல்லார் கோவில் வனத்துறை அதிகாரிகள் வினோத், விஜயகுமார் தலைமையில் வனத்துறை யினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    காமிராக்கள் பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர். இதில் மூங்கிலார் 40 ஏக்கர் பகுதியில் வனத்துறை பொருத்திய கண்காணிப்பு காமிராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி உள்ளது.

    இதனால் சிறுத்ைதயை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுத்தையை பிடிக்கும் வரை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    • விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • குப்பை தொட்டியோடு சேர்த்து தீ வைத்தனர்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள அத்திக்கடையை அடுத்த கீரிவிளையில் மதுக்கடை உள்ளது. இதன் அருகே மது பாட்டில்களும், குப்பைகளும் சாலையோரம் வீசப்பட்டு வருகிறது. இதனால் அந்த இடத்தில் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    இந்த நிலையில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு அதில் குப்பைகள் போடப்பட்டன. இதனால் ஓரளவு பாதுகாப்பான சூழல் உருவானது. இந்த நிலையில் குப்பை தொட்டி அருகே பாம்பு ஊர்ந்து செல்வதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சற்று துணிந்தவர்கள் பாம்பை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அதற்குள் அந்த பாம்பு எங்கோ சென்று பதுங்கி கொண்டது. இருப்பினும் உயிர் ஆபத்தில் இருந்த மக்கள், குப்பை தொட்டியோடு சேர்த்து தீ வைத்தனர். பாம்பு தீயில் சிக்கியதோ, இல்லையோ, குப்பைகள் முற்றிலும் எரிந்தது. இனி பாம்பு எப்போது தலை காட்டுகிறதோ... அப்போது தான் பொதுமக்கள் அச்சம் தீரும்.

    • வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் காலை, மாலை நேரங்களில் காட்டு விலங்குகளை அதிகம் பார்க்க முடியும்.
    • வனவிலங்குகளுக்கு தொந்தரவு தரும்வகையில் நடக்கக்கூடாது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு சிறுத்தை, யானை, புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

    அதிலும் குறிப்பாக வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் காலை, மாலை நேரங்களில் காட்டு விலங்குகளை அதிகம் பார்க்க முடியும். வால்பாறையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் வால்பாறையை சேர்ந்த ஒருவர் நேற்று காரில், அந்த வழியாக சென்று உள்ளார். அப்போது வால்பாறை புதுத்தோட்டம் பகுதியில் ஒரு சிறுத்தை சாலையோரம் படுத்து கிடந்தது. எனவே அவர் இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்து உள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வனவர்களுக்கு உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வால்பாறை வனச்சரக அதிகாரி வெங்கடேஷ் கூறுகையில், வால்பாறையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுத்தோட்டம் பகுதியில் வனவிலங்குகள் அதிகம் உள்ளன. எனவே அங்கு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு தொந்தரவு தரும்வகையில் நடக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக சிறுத்தை, யானை உலா வந்தால், மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அவை இருக்கும் இடத்தில் இருந்து முடிந்தவரை விலகி செல்ல வேண்டும். அதனை விடுத்து வனவிலங்குகளை போட்டோ எடுப்பது, சத்தம் போட்டு கூச்சலிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • கடந்த 10 நாட்களாகவே இங்கு வசிப்பவர்கள் காய்ச்சல், உடல் வலி போன்றவைகளால் அவதியுற்று வந்தனர்.
    • இதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமம் உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாகவே இங்கு வசிப்பவர்கள் காய்ச்சல், உடல் வலி போன்றவைகளால் அவதியுற்று வந்தனர். இவர்கள் தனியார், அரசு ஆஸ்பத்திரிகளில் வெளிப்புற நோயாளி களாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களிடம் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இத்தகவல் மங்கலம்பே ட்டை மருத்துவ அதிகாரி களுக்கு தெரிய வந்தது. மேலும், 9-க்கும் மேற்பட்டோர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் டாக்டர் பிரதாப் பிரதாப், வட்ட சுகாதார மேற்பார்வையாளர் ரவிசந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் முருகவேல், அபினாஷ், முல்லைநாதன், நர்சுகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் புதுக்கூரைப்பேட்டைக்கு இன்று காலை வந்தனர். இவர்கள் கிராமத்தில் உள்ள வீதிகளில் பிளிச்சிங் பவுடர் தெளித்தனர். கிராமம் முழுவதும் கொசு மருந்து அடித்தனர். தொடர்ந்து வீடு வீடாக சென்று கிராம மக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். காய்ச்சல் அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால், தனிமைப்படுத்தி க்கொண்டு சிகிச்சை பெற வலியுறு த்தினர். அவர்களுக்கு ஊசிகள் மற்றும் மாத்திரைகள் வழங்கினர். தொடர்ந்து கிராம மக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் புதுக்கூரைப்பேட்டை கிராம மக்களிடையே அச்சமும் பரபரப்பும் நிலவுகிறது.

    • பிடித்து அகற்ற மாநகராட்சிக்கு கோரிக்கை
    • சில நாய்களுக்கு உடலில் காயம் ஏற்பட்டு புழுக்கள் வந்த நிலையிலும் சுற்றி திரிகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தற்போது மக்களை அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள் திரிகின்றன.

    அதிலும் குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான அண்ணா பஸ் நிலையம், வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், கிருஷ்ணன் கோவில், வடசேரி, ஒழுகினசேரி, கோட்டார், நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டபடி திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகின்றனர். இதில் சில நாய்கள் நோய்வாய்ப்பட்டு, அருவருக்கத்தக்க வகையில் சுற்றி வருகின்றன.

    இதேபோல் இடலாக்குடி, கரியபாணிக்கபுரம், இளங்கடை, இருளப்பபுரம், என்.ஜி.ஓ. காலனி, செட்டிகுளம் சந்திப்பு, ராமன் புதூர், மேல ராமன் புதூர், கோணம், ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.

    இந்த நாய்களின் உடல்களில் ஒருவிதமான அருவருப்பு தன்மையும், இன்னும் சில நாய்களுக்கு உடலில் காயம் ஏற்பட்டு புழுக்கள் வந்த நிலையிலும் சுற்றி திரிகிறது.

    இதனால் பொதுமக்கள் இந்த நாய்களை கடந்து செல்வதற்கு அச்சம் அடைகின்றனர். எனவே நோயுற்ற நாய்களை அப்புறப்படுத்த நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி ஆணையாளருக்கு மனுவும் அனுப்பப்பட்டுள்ளது.

    • சில வாரங்களாக நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • பொதுமக்கள் பெரும்பாலான நேரங்களில் அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 43). இவர் வீட்டுக்கு அருகே வசிப்பவர் கணேஷ். இந்த நிலையில் 2 பேரும் நேற்று வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது அவர்கள் 2 பேரின் வீட்டின் கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது சசிகுமார் வீட்டில் 12 பவுன் நகையும், கணேஷ் வீட்டில்16 பவுன் நகையும் திருட்டு போனதாக கூறப்படுகிறது. மேலும் ரொக்கம் சுமார் ரூ.30 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுற்றுப்புறப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், திருடர்களைப் பற்றி எந்த தடயமும் கிடைக்கவில்லை. பல்லடம் பகுதியில் சில வாரங்களாக நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்தநிலையில் பல்லடம் வட்டாரத்தில் உள்ள வீடுகளில், திருட்டு உள்பட குற்றச் சம்பவங்களைத் தடுக்க போலீசார் தீவிரம் காட்டுகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:- முக்கிய சாலைகள், பொது இடங்கள், வணிக நிறுவனங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் குற்றச்செயல்கள் தடுக்கப்படுகின்றன. மேலும் குற்றவாளிகள் எளிதில் போலீசாரிடம் சிக்குவதற்கு இவைகள் உதவிகரமாக இருக்கின்றன. வீடுகளில் ஆட்கள் இல்லாத சமயத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் கைவரிசை காட்டுகின்றனர். போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து வெளியூர் செல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டாலும் இதை, பொதுமக்கள் பெரும்பாலான நேரங்களில் அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.

    வீடுகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதன் மூலம் வீடுகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை எளிதாகத் தடுக்க முடியும். திருப்பூரில் நடந்த சில கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை வீடுகளின் வெளிப்புறங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவைக் கொண்டு குற்றவாளிகளை கண்டறிவதற்கு மிகவும் உதவியாக இருந்தது. எனவே வீடுகளில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதோடு நில்லாமல் அவை முறையாக இயங்குகிறதா என்பதையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    • கணினியின் வயர்கள் சேதமாக்கப்பட்டு கணினிகள் கீழே தள்ளப்பட்டு கிடந்தது.
    • மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கரடிவாவியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த நிலையில், மருத்துவமனைக்கு சென்ற செவிலியர்கள் முன்புற கதவின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்று காமநாயக்கன்பாளையம் போலீசார் பார்த்தபோது, கதவின் கண்ணாடிகள் மட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் கதவுகளில் கீறல்கள் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது மேசை மீது இருந்த கணினியின் வயர்கள் சேதமாக்கப்பட்டு கணினிகள் கீழே தள்ளப்பட்டு கிடந்தது. இதையடுத்து போலீசார் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஏதோ ஒரு மர்ம விலங்கின் காலடித்தடம் உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரடிவாவியில் சிறுத்தை உலாவதாக தகவல்கள் வந்தது. இதனால் அந்த மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    • செல்லம்பட்டி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.
    • இதனால் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் செல்லம்பட்டி யூனியனுக்குட்பட்ட முதலைகுளம் ஊராட்சி எழுவம்பட்டி கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் பொது மக்களுக்கு குடிநீரை ஊராட்சி நிர்வாகம் சப்ளை செய்து வருகிறது.

    இந்த நீர்தேக்க தொட்டியின் 4 சிமெண்டு தூண்களும் விரிசலடைந்து சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகிலுள்ள அங்கன்வாடி மைய குழந்தைகள் மற்றும் குடியிருப்போர்களும் உயிர் பயத்தில் உள்ளனர்.

    இது பற்றி கிராம மக்கள் செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றம் சாட்டினர். இது குறித்து எழுவம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் கூறுகையில், இந்த கிராம குடிநீர் தேவைக்கான ஆழ்துளை கிணறு முதலைகுளம் கண்மாய் கரை பகுதியில் அமைந்துள்ளது.மின் மோட்டர் மூலம் மேல்நிலை தொட்டியில் நீர் நிரப்பி குடிநீர் வழங்கி வந்தநிலையில் தொட்டியின் 4 தூண்களும் சேதமாகி விரிசலடைந்து உள்ளது.

    இதனருகே குழந்தைகள் மையமும், தொடக்க பள்ளிக்கு செல்லும் பாதையும், வீடுகளும் உள்ளதால் குழந்தைகள், பெரியவர்கள் அச்சத்துடன் உள்ளோம். நீர்தேக்க தொட்டியை அகற்றி புதிய தொட்டி கட்ட வேண்டும் என்றார்.

    மேலும் இதே கிராமத்தை சேர்ந்த லதா கூறுகையில், பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் சக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. செல்லம்பட்டி கூட்டுகுடிநீர் குழாய் மூலம் ஊருக்குள் வந்த தண்ணீர் ஏனோ பல மாதங்களாக வரவில்லை. இடிந்து விழும் நிலையில் இருக்கும் மேல்நிலை தொட்டியை இடித்து அப்புறப்படுத்துவதற்கு 

    • யானை நடமாட்டத்தால் பஸ் நிறுத்தத்திற்கு வர பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
    • அணைகளில் தண்ணீர் வற்றி விட்டதால் யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணைக்கு படையெடுத்து வருகின்றன.

    உடுமலை:

    உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் ஒன்பதாறு செக் போஸ்ட் முதல் சின்னாறு வரை இருபுறமும் உடுமலை அமராவதி வனச்சரகபகுதிகள் உள்ளன.இங்கு ஏராளமான யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், காட்டுபன்றிகள்உள்ளன. கோடை காலங்களில் காட்டுயானைகள் மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க செல்வது வழக்கம். பனிக்காலம் முடிந்து கோடை ஆரம்பித்துள்ளது.

    இதனால் வனப்பகுதியில் உள்ள அணைகளில் தண்ணீர் வற்றி விட்டதால் யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணைக்கு படையெடுத்து வருகின்றன.இந்நிலையில் தனது கூட்டத்திலிருந்து வழி தவறிய ஒற்றை யானை அமராவதி நகர் முருகன் கோவில்பகுதியில் சுற்றி திரிகிறது. அதன் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. யானை நடமாட்டத்தால் பஸ் நிறுத்தத்திற்கு வர பொதுமக்கள் அஞ்சுகின்றனர். மீண்டும் மீண்டும் அந்த யானை பஸ் நிறுத்தம் பகுதியில் சுற்றி வருகிறது. இதனால் அப்பகுதியில் ரோந்து செல்லும் போலீசாரும் தயங்குகின்றனர். கிராம மக்களும் அச்சத்தில் உள்ளனர். யானையை பாதுகாப்பாக வனத்துக்குள் விரட்டி விட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அபிராமம் தெருக்களில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி. அபிராமம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் போதிய உணவு, தண்ணீர், கிடைக்காமல் குரங்குகள் வெளியேறி அபிராமம் டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுற்றிதிரிகின்றன.

    அபிராமம், வல்லகுளம், விரதக்குளம், பள்ளபச்சேரி உள்ளிட்ட கிராம பகுதிகளில் தென்னைமரங்களில் தாவி குதித்து வருவதுடன் தென்னை மரங்களையும், தென்னங்காய்களையும் நாசம் செய்து வருகின்றன. மேலும் அபிராமம் தெருக்களில் குரங்குகள் சுற்றிதிரிவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை நிலவுகிறது.

    அபிராமம் தெருக்க ளிலும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொடைக்கானலில் யானை தொடர்ந்து குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகிறது.
    • கொடைக்கானலில் யானை தொடர் அட்டகாசம்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே உள்ளது பேத்துப்பாறை கிராமம்.இங்குள்ள மக்கள் அதிகமாக விவசாயத்தை நம்பியே உள்ளனர். இப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் அடிக்கடி வந்து செல்லும் யானைக் கூட்டங்கள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி அங்குள்ள விவசாயிகளை கவலையடையச்செய்து வருகிறது. தொடர்ந்து பல மாதங்களாக பணப் பயிர்களை சேதப்படுத்தும் யானைகளால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

    சமீபத்தில் மகேந்திரன் என்ற விவசாயியின் நிலத்தில் பயிரிடப்பட்டு நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் யானையால் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. வாழை பயிரிட செலவு செய்த தொகை கிடைக்காது என்ற நிலைமை ஏற்பட்டது. பல மாதங்களாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி இருந்த யானை நேற்று நள்ளிரவில் செல்வராஜ் என்பவர் கடையை சேதப்படுத்தியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளது.

    தொடர்ந்து இதுபோல் விவசாயிகளுக்கும் பொது–மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்திவிடும் யானைக் கூட்டத்தை நிரந்தரமாக விவசாய நிலங்களுக்கு அப்பால் விரட்ட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல முறை தொடர்ந்து ஆண்டு–க்கணக்கில் விவசாய நிலங்களை சேதப்படு–த்திவரும் யானையை விரட்ட நிரந்தர தீர்வு காண வனத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

    ×