search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்த்தேக்க தொட்டி"

    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் சிமெண்ட் மற்றும் கம்பி பெயர்ந்து கீழே விழுந்தது.
    • தொட்டியின் மேல்பகுதி, தூண், ஆபத்தான நிலையில் இருக்கிறது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்ட ஜெர்தலாவ் ஊராட்சியை சேர்ந்த மாக்கன் கொட்டாய் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைகளுக்காக கடந்த 2015-ம் ஆண்டு ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால் நீர்த்தேக்க தொட்டியின் மேல்பகுதி, தூண், மற்றும் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கிறது.

    இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இந்நிலையில் நேற்று காலை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் சிமெண்ட் மற்றும் கம்பி பெயர்ந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாரும் அருகில் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் பெரும் விபத்து ஏற்படும் முன்னர், பழமையான மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 2016-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடையது.
    • தொட்டியின் மீது போஸ்டர்களை ஒட்டி அசுத்தப்படுத்துவது குறையும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் ஊராட்சியில் வீரசேகரன் (வயது 32) என்பவர் ஊராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், ஆதிரங்கம் ஊராட்சியில் 6 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. அதில், ஆதிரங்கம் தர்கா எதிரே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து காணப்பட்டது. இந்த தொட்டி அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வீரசேகரன் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு தொட்டியை சுத்தம் செய்தார். அதுமட்டுமின்றி, அந்த தொட்டிக்கு இந்திய தேசியக்கொடி போன்று வர்ணம் பூசியுள்ளார்.

    இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் ஊராட்சி தலைவரை பாராட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து, ஊராட்சி தலைவர் வீரசேகரன் கூறியதாவது:-

    இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 2016-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடையது. இது பழுதான நிலையில் இதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையிலும், அதனை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை பொதுமக்களுக்கு உருவாக்கவும் 75-வது சுதந்திர தினம் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் நினைவாக தேசியக்கொடியை போன்று வர்ணம் பூசப்பட்டது.

    இதன்மூலம், தொட்டியின் மீது போஸ்டர்களை ஒட்டி அசுத்தப்படுத்துவது குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திரு.பட்டினத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
    • குமார் மற்றும் வீரனராஜ் மோட்டார்களை திருடியது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் அருகே இருந்த விலை உயர்ந்த மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக திரு.பட்டினம் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் வீரனராஜ் மோட்டார்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் திரு.பட்டினம் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டாரர்களே பறிமுதல் செய்து காரைக்காலில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

    • ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி வரும் நிலையில் அவ்வப்போது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
    • ஒகேனக்கல் கூட்டு குடிநீரை நிரப்பி கிராம மக்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே அர்ஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தொழுமண் கொட்டாய் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இந்தப் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒகேன க்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சிகரலஅள்ளி பென்னா கரம் செல்லும் சாலையில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் இருந்து இணைப்பு கொடுக்கப்பட்டு தொழுமண் கொட்டாய் பகுதியில் கடந்த 2012-2013 ம் ஆண்டில் புளோரைடு குறைப்பு திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.

    இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் இணைப்பு பெறும் குழாயை மர்ம நபர்கள் துண்டித்ததால் கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. இந்த நிலையில் இப்பகுதி மக்கள் அன்றாட தேவை க்கான குடிநீரை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் நீரேற்றம் செய்து அருகில் உள்ள சிறிய தொட்டியில் நீரை தேக்கி வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

    தொழுமண் கொட்டாய் பகுதி மலைப்பகுதியின் மேல் அமைந்துள்ளதால் கோடை காலத்தில் ஆழ்துளை கிணற்றில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடும் நிலை உள்ளதால் குடிநீர் தட்டப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி வரும் நிலையில் அவ்வப்போது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

    எனவே தொழுமண் கொட்டாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீரை நிரப்பி கிராம மக்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    • பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அன்னபூரணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
    • கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், லக்கமநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியில் 15 வது நிதி குழு மானியம் 2020- 23 திட்டத்தின் கீழ் பசுபதிபாளையம் கிராமத்திற்கு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி , காவலிபாளையத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி என மொத்தம் ரூ. 13 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் மேல்நிலை தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் சேடன் குட்டை பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அன்னபூரணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பணிகள் தொடங்கப்பட்டது.
    • அப்பகுதி மக்கள் குடி தண்ணீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில், கோபனாரி, ஆலங்கண்டி, ஆலங்கண்டி புதூர், சீங்குழி, பட்டி சாலை, செங்குட்டை, மேல்பாவி, குழியூர், ஊக்கையனூர், ஊக்கப்பதி,மொட்டியூர், நீலாம்பதி உள்ளிட்ட பல்வேறு மலைவாழ் கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அடர் வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த மலை கிராமங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டு 15-வது நிதி குழு மானியத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆலங்கண்டி பகுதியில் அமைக்க திட்டமிட்டது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.

    இந்த நிலையில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் இப்பணியை பாதியில் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாகவே அப்பகுதி மக்கள் குடி தண்ணீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கோபனாரி பகுதியைச்சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.10 லட்சம் மதிப்பில் பூமி பூஜை போடப்பட்டு அப்பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதனால் தாங்கள் குடிநீருக்காக வனப்பகுதிக்குள் செல்லும் போது மனித-வனவிலங்குகள் உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதனால் அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.தோலம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயா செந்தில் கூறும் போது, பணிகளை எடுத்த ஒப்பந்ததாரரிடம் இருந்து சப் காண்ட்ராக்ட் எடுத்த நபர் பணத்தைப் பெற்றுக் கொண்டு பணிகளை முடிக்காமல் இருந்தார். இதனால் தற்போது வேறு ஒப்பந்ததார் மூலம் இப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. தற்போது ஒப்பந்தம் எடுத்துள்ள நபர் தோலம்பாளையம் புதூர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.அப்பணிகளை முடித்து அடுத்த வாரத்திற்குள் ஆலங்கண்டி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணிகள் தொடரும் என்றார்.

    • கள்ளக்குறிச்சியில் நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி தமிழ்நாடு கிராம மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பா ட்டத்திற்கு மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாநில பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தலைவர் கொளஞ்சி வேலு கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டை அமல்படுத்த வேண்டும்.

    தூய்மை காவலரின் ஊதியத்தை நேரடியாக ஊராட்சியின் மூலம் வழங்குதல். கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தூய்மை காவலர்களுக்கு ரூ.3600-லிருந்து ரூ.5 ஆயிரமாக சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இதில் மாநிலத் துணைத் தலைவர்கள் தங்கவேல், அந்தோணி தாஸ், ரமேஷ், சந்திரசேகர், மாநில இணை செயலாளர் கனி, பரமசிவன், முத்துசாமி, வேலு, சேதுராமன், சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • நீர்த்தேக்க தொட்டி மற்றும் அதன் மோட்டாரை இயக்க மாதம் ரூ.250 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது
    • டேங்கு மற்றும் மோட்டார் ஒவ்வொன்றும் இயக்க சுமார் 3 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டி உள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடந்தது.கலெக்டர் ஸ்ரீதர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்க குமரி மாவட்ட கிளை தலைவர் செல்வன் தலைமையில் ஏராளமானோர், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் கூடுதலாக இயக்கப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அதன் மோட்டாரை இயக்க மாதம் ரூ.250 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகையை ரூ.2 ஆயிர மாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    மேலும் காலதாமதம் ஆகும் பட்சத்தில் கூடுதல் மோட்டார் மற்றும் டேங்க் இயக்குவது கைவிட ப்படும். கூடுதலாக இயங்கும் டேங்கு மற்றும் மோட்டார் ஒவ்வொன்றும் இயக்க சுமார் 3 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. இதனால் பெட்ரோல் செலவு ஏற்படுகிறது.

    எனவே அனைத்து பணியாளர்களுக்கும் அரசே இலவச எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும். காலவரை ஊதியம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். எங்களது சங்க நிர்வாகிகளை அழைத்து கலெக்டர் தலைமையில் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும்.

    மற்ற மாவட்டங்களை போன்று அனைவருக்கும் ஒரே ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி பணியா ளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகை உடனே வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் அவர்கள் தீக்குளித்து தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதையடுத்து போலீசார் கலெக்டர் அலுவலக வாசலில் சோதனை மேற்கொண்டனர். பொது மக்கள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    • செல்லம்பட்டி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.
    • இதனால் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் செல்லம்பட்டி யூனியனுக்குட்பட்ட முதலைகுளம் ஊராட்சி எழுவம்பட்டி கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் பொது மக்களுக்கு குடிநீரை ஊராட்சி நிர்வாகம் சப்ளை செய்து வருகிறது.

    இந்த நீர்தேக்க தொட்டியின் 4 சிமெண்டு தூண்களும் விரிசலடைந்து சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகிலுள்ள அங்கன்வாடி மைய குழந்தைகள் மற்றும் குடியிருப்போர்களும் உயிர் பயத்தில் உள்ளனர்.

    இது பற்றி கிராம மக்கள் செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றம் சாட்டினர். இது குறித்து எழுவம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் கூறுகையில், இந்த கிராம குடிநீர் தேவைக்கான ஆழ்துளை கிணறு முதலைகுளம் கண்மாய் கரை பகுதியில் அமைந்துள்ளது.மின் மோட்டர் மூலம் மேல்நிலை தொட்டியில் நீர் நிரப்பி குடிநீர் வழங்கி வந்தநிலையில் தொட்டியின் 4 தூண்களும் சேதமாகி விரிசலடைந்து உள்ளது.

    இதனருகே குழந்தைகள் மையமும், தொடக்க பள்ளிக்கு செல்லும் பாதையும், வீடுகளும் உள்ளதால் குழந்தைகள், பெரியவர்கள் அச்சத்துடன் உள்ளோம். நீர்தேக்க தொட்டியை அகற்றி புதிய தொட்டி கட்ட வேண்டும் என்றார்.

    மேலும் இதே கிராமத்தை சேர்ந்த லதா கூறுகையில், பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் சக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. செல்லம்பட்டி கூட்டுகுடிநீர் குழாய் மூலம் ஊருக்குள் வந்த தண்ணீர் ஏனோ பல மாதங்களாக வரவில்லை. இடிந்து விழும் நிலையில் இருக்கும் மேல்நிலை தொட்டியை இடித்து அப்புறப்படுத்துவதற்கு 

    • நீர் தொட்டியின் 4 தூண்களும் மற்றும் மேல் தொட்டியும் மிகவும் மோசமாக காணப்படுகிறது.
    • நீர்தேக்க தொட்டியை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த கரியம்பா–ளையம் ஊராட்சியில் உள்ளது சுப்பிரமணிய கவுண்டன் புதூர் கிராமம்.

    இங்கு 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது நீர் தொட்டியின் 4 தூண்களும் மற்றும் மேல் தொட்டியும் மிகவும் மோசமாக காணப்படுகிறது.

    இந்த நீர்த்தேக்க தொட்டியின் மேல்புறத்தில் 3 அடியில் அரசமரம் வளர்ந்து உள்ளது. இதனால் இந்த நீர்நிலை தொட்டியை இப்பகுதி மக்கள் உடனடியாக இடித்து விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டியை கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நீர் நிலை தொட்டியானது ஒருவேளை சரிந்து விழுந்தால் அதன் அருகாமையில் வீடுகள் உள்ளதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உயிர் சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை பார்வையிட்டு தொட்டியை அகற்றி விட்டு புதிய நீர்தேக்க தொட்டியை கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீர்த்தேக்க தொட்டி எப்போது வேணாலும் இடிந்து விடும் அபாய நிலையில் உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
    • பொதுமக்களுக்கு போதுமான தாமிரபரணி குடிநீர் கிடைக்காததால் அது கிடைக்கும்படி செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

    சாம்பவர் வடகரை:

    சாம்பவர் வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி தென்காசி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை வழங்கினார். அக்கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    சாம்பவர் வடகரை விவசாயிகளின் நலன் கருதி அங்கன்வாடி அருகில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் கீழ்புறம் மற்றும் சுண்ணாம்பு உலை அருகில் உள்ள அரசு புறம்போக்கு பகுதிகளில் உலர் களம் அமைத்து தர வேண்டும். மேலும் சாம்பவர்வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகில் உள்ள உலர் களத்தை தரம் உயர்த்தி சரி செய்து தர வேண்டும். சாம்பவர் வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய வார்டு எண் 1, புதிய வார்டு என்ற 2 புளியம்பட்டி தெருவில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 2001-2002 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 2013-2014 ஆம் ஆண்டு பராமரிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இதன் கொள்ளளவு ஒரு லட்சம் லிட்டர் ஆகும். தற்போது இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மேல் கூரை உடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த நீர்த்தேக்க தொட்டி எப்போது வேணாலும் இடிந்து விடும் அபாய நிலையில் உள்ளது. அதனால் இந்த நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நான்கு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. சாம்பவர் வடகரை பொதுமக்களுக்கு போதுமான தாமிரபரணி குடிநீர் கிடைக்காததால் அது கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் அனைத்து பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த குடிநீர் தொட்டியை தாங்கி நிற்கும் ஆறு தூண்களும் விரிசல் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் சிதிலமடைந்துள்ளன.
    • மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் மண் இளகி தூண்களில் விரிசல் ஏற்பட்டிருக்ககூடும் என்று பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சி ஒன்றியம் கோவில்பத்து ஊராட்சியில் கெங்கைசமுத்திரம் செல்லும் வழியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைந்துள்ளது.1989-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் கெங்கைசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள தெரு க்கள், அண்ணா நகர் அதன் அருகாமை குடியிருப்புகள் என 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் அமைப்பாக இது செயல்பட்டு வருகிறது.

    இந்த குடிநீர் தொட்டிக்கு அருகில் கோவில்பத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், குடியிருப்புகளும் அமை ந்துள்ளன.இந்த குடிநீர் தொட்டியை தாங்கி நிற்கும் ஆறு தூண்களும் விரிசல் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் சிதிலம டைந்துள்ளன.

    மேலும் நாளுக்கு நாள் தூண்களில் உள்ள விரிசல்கள் விரிவ டைந்து கொண்டே வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மழை க்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் மண் இளகி தூண்களில் விரிசல் ஏற்பட்டிருக்க கூடும் என்று பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பாக ஆபத்தான நிலையில் உள்ள தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×