search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
    X

    சேதமடைந்த மேல்நிலைத் தொட்டி.

    இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

    • செல்லம்பட்டி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.
    • இதனால் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் செல்லம்பட்டி யூனியனுக்குட்பட்ட முதலைகுளம் ஊராட்சி எழுவம்பட்டி கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் பொது மக்களுக்கு குடிநீரை ஊராட்சி நிர்வாகம் சப்ளை செய்து வருகிறது.

    இந்த நீர்தேக்க தொட்டியின் 4 சிமெண்டு தூண்களும் விரிசலடைந்து சேதமாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகிலுள்ள அங்கன்வாடி மைய குழந்தைகள் மற்றும் குடியிருப்போர்களும் உயிர் பயத்தில் உள்ளனர்.

    இது பற்றி கிராம மக்கள் செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றம் சாட்டினர். இது குறித்து எழுவம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் கூறுகையில், இந்த கிராம குடிநீர் தேவைக்கான ஆழ்துளை கிணறு முதலைகுளம் கண்மாய் கரை பகுதியில் அமைந்துள்ளது.மின் மோட்டர் மூலம் மேல்நிலை தொட்டியில் நீர் நிரப்பி குடிநீர் வழங்கி வந்தநிலையில் தொட்டியின் 4 தூண்களும் சேதமாகி விரிசலடைந்து உள்ளது.

    இதனருகே குழந்தைகள் மையமும், தொடக்க பள்ளிக்கு செல்லும் பாதையும், வீடுகளும் உள்ளதால் குழந்தைகள், பெரியவர்கள் அச்சத்துடன் உள்ளோம். நீர்தேக்க தொட்டியை அகற்றி புதிய தொட்டி கட்ட வேண்டும் என்றார்.

    மேலும் இதே கிராமத்தை சேர்ந்த லதா கூறுகையில், பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் சக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. செல்லம்பட்டி கூட்டுகுடிநீர் குழாய் மூலம் ஊருக்குள் வந்த தண்ணீர் ஏனோ பல மாதங்களாக வரவில்லை. இடிந்து விழும் நிலையில் இருக்கும் மேல்நிலை தொட்டியை இடித்து அப்புறப்படுத்துவதற்கு

    Next Story
    ×