search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் நகரின் பல பகுதிகளிலும் தொற்றுநோய்களுடன் திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்
    X

    நாகர்கோவில் நகரின் பல பகுதிகளிலும் தொற்றுநோய்களுடன் திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்

    • பிடித்து அகற்ற மாநகராட்சிக்கு கோரிக்கை
    • சில நாய்களுக்கு உடலில் காயம் ஏற்பட்டு புழுக்கள் வந்த நிலையிலும் சுற்றி திரிகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தற்போது மக்களை அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள் திரிகின்றன.

    அதிலும் குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான அண்ணா பஸ் நிலையம், வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், கிருஷ்ணன் கோவில், வடசேரி, ஒழுகினசேரி, கோட்டார், நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டபடி திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகின்றனர். இதில் சில நாய்கள் நோய்வாய்ப்பட்டு, அருவருக்கத்தக்க வகையில் சுற்றி வருகின்றன.

    இதேபோல் இடலாக்குடி, கரியபாணிக்கபுரம், இளங்கடை, இருளப்பபுரம், என்.ஜி.ஓ. காலனி, செட்டிகுளம் சந்திப்பு, ராமன் புதூர், மேல ராமன் புதூர், கோணம், ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.

    இந்த நாய்களின் உடல்களில் ஒருவிதமான அருவருப்பு தன்மையும், இன்னும் சில நாய்களுக்கு உடலில் காயம் ஏற்பட்டு புழுக்கள் வந்த நிலையிலும் சுற்றி திரிகிறது.

    இதனால் பொதுமக்கள் இந்த நாய்களை கடந்து செல்வதற்கு அச்சம் அடைகின்றனர். எனவே நோயுற்ற நாய்களை அப்புறப்படுத்த நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி ஆணையாளருக்கு மனுவும் அனுப்பப்பட்டுள்ளது.

    Next Story
    ×