search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் அச்சம்"

    • பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே கணியக்குளம் பஞ்சாயத்துக் குட்பட்ட உழவன் கோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வருகிறது.

    அந்த பகுதியில் சிறுத்தை உலா வந்த காட்சிகள் அங்குள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இந்தநிலையில் அந்த பகுதியில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமிரா அமைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், குழந்தைகளை தனியாக வெளியே விடக்கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் 2 கன்றுகுட்டிகள் இறந்து கிடந்தது. மேலும் ஆடுகளும் உயிரிழந்திருந்தது.

    எனவே சிறுத்தை தான் அடித்து கொன்று இருக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கருதுகிறார்கள். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சிறுத்தை உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.
    • கரடியின் கால்தடங்கள் உள்ளிட்டவற்றையும் வயல்வெளிகளில் சேகரித்து வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், அப்பர்குளம், பெருமாள்குளம், தேவநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள இந்த கிராமங்களுக்கு அடிக்கடி மலையில் இருந்து வனவிலங்குகள் புகுந்துவிடுகின்றன. அவ்வாறு புகும் வனவிலங்குகள் விளை நிலங்களை சேதப்படுத்தவதோடு, கிராமங்களில் குடியிருப்புகளுக்குள்ளும் அவ்வப்போது புகுந்து விடுகிறது.

    அந்த வகையில் நேற்று களக்காடு அருகே உள்ள தேவநல்லூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில், நேற்று தேவநல்லூர் பாறை பகுதியில் சிலர் சென்றபோது, அந்த வழியாக கரடி ஓடியது. உடனே அவர்கள் அந்த கரடியை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். தொடர்ந்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தில் கடந்த ஆண்டு இதேபோல் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. பின்னர் வனத்துறையினர் அதனை கூண்டு வைத்து பிடித்து சென்றனர். இதேபோல் கடந்த ஆண்டு பெருமாள்குளம் பகுதியில் புதருக்குள் புகுந்த கரடியை கூண்டு வைத்து பிடித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் தேவநல்லூர் பகுதியில் கரடி நடமாட்டம் இருக்கிறது. இதனால் விவசாயிகள் வயலுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே ஊருக்குள் புகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதற்கிடையே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வனத்துறையினர் அங்கு சென்று கரடி நடமாட்டம் இருக்கிறதா என்பதை அறிவதற்காக முகாமிட்டுள்ளனர். மேலும் கரடியின் கால்தடங்கள் உள்ளிட்டவற்றையும் வயல்வெளிகளில் சேகரித்து வருகின்றனர். கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனை பிடிக்க கூண்டு வைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    • எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு குட்டிகளுடன் ரோட்டில் சுற்றி திரிந்து வருகிறது.
    • தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிங்கோனா எஸ்டேட் பகுதியில் அந்த யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் சுற்றி திரிகிறது. அவற்றை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் அவை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு குட்டிகளுடன் ரோட்டில் சுற்றி திரிந்து வருகிறது.

    அதிலும் குறிப்பாக ஒற்றை காட்டுயானை கடந்த சில நாட்களாக சின்கோனா பகுதியில் சுற்றி திரிகிறது. அது இரவுநேரத்தில் பஸ்சை வழிமறிப்பதும், குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிவதுமாக அட்டகாசம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் சின்கோனா- பெரியகல்லார் சாலையில் நேற்று மதியம் ஒற்றை காட்டுயானை பட்டப்பகலில் உலா வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேயிலை பறிக்கும் தொழி லாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் பாதுகாப்பான இடம் தேடி தஞ்சம் அடைந்தனர்.

    இதற்கிடையே காட்டு யானை நடமாட்டம் பற்றி தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ரோட்டில் பட்டப்பகலில் நடந்து சென்ற ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    வால்பாறை சின்கோனா ரோட்டில் ஒற்றை காட்டு யானை பட்டப்பகலில் நடந்துசென்ற சம்பவம், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பழமை வாய்ந்த ராட்சத தேக்கு மரம் வேரோடு சாய்ந்து அருகே இருந்த குடியிருப்பின் மீது விழுந்தது.
    • பாதுகாப்பு இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    அருவங்காடு:

    குன்னூரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அவ்வப்போது பாதிப்புகளும் அதிகரித்து உள்ளது.

    பர்லியாறு அருகே உள்ள 2-வது கொண்டை ஊசி வளைவின் அருகில் உள்ள ஆண்டனி என்பவர் வீட்டின் மீது பழமை வாய்ந்த ராட்சத தேக்கு மரம் வேரோடு சாய்ந்து அருகே இருந்த குடியிருப்பின் மீது விழுந்தது.

    அப்போது குடியிருப்பில் இருந்த அனைவரும் வெளியில் வந்ததால் அனை வரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் வனசரகர் ரவீந்திரன் தலை மையிலான வன குழுவினர் விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தினர்.

    மேலும் மலைப்பாதையில் தொடர்மழை அவ்வப்போது வெயில் என கால நிலையிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதால் எந்த நேரத்திலும் மலைப்பகுதியில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக சென்று வர வேண்டும் எனவும் மற்றும் மண் சரியும் அபாயம் உள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக குன்னூர் அருகே உள்ள உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண் திட்டுக்கள் சரிந்தும், குடியிருப்புகளில் மண் சுவர்கள் சாய்ந்தும் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்ததுடன் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதில் காந்திநகர் பகுதியில் மண் திட்டு சரிந்து விழுந்ததால் அங்குள்ள குடியிருப்பு அந்தரத்தில் தொங்கி வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உபதலை ஊராட்சி தலைவர் பாக்கிய லட்சுமி சிதம்பரம் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து இங்கிருந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தவுடன் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் தொடர் மழை காரணமாக பாதுகாப்பு இல்லாத பகுதியில் வசிக்கும் மக்களையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    • செந்தூரன் காலனி, அம்மா பூங்கா, உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.
    • குழந்தைகளை தனியே அனுப்ப முடிவதில்லை என்றும் பொதுமக்கள் வேதனையும் புகார் தெரிவிக்கின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பிலிபாளையம், செந்தூரன் காலனி, அம்மா பூங்கா, உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.

    மேலும் அங்குள்ள இறைச்சி கடைகளில் வீசப்படும் மாமிசங்களை தின்றுவிட்டு தெருவில் சண்டையிடுகின்றன. அத்துடன் வீடுகளுக்கு முன்பு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை இழுத்துச் செல்வதாகவும், தனியே நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டுவதாகவும்,

    மேலும் இரவு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் குரைப்பதால் சரியாக தூங்க முடிவதில்லை என்றும், குழந்தைகளை தனியே அனுப்ப முடிவதில்லை என்றும் பொதுமக்கள் வேதனையும் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களை பரிதவிக்க விடும் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்குதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பேரையூர் அருகே சிறுத்தை ஒன்று உலா வந்ததாக கூறப்படுகிறது.
    • சிறுத்தை நடமாட்டம் தகவல் பொதுமக்களிடைேய பீதியை ஏற்படுத்தியது.


    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட எஸ்.மேலப்பட்டி கிராமம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது.

    இந்த கிராமத்திற்குள் நேற்று இரவு வந்த சிறுத்தை ஒன்று உலா வந்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுத்தை அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம், சுப்பிர மணி, சுந்தரம் மற்றும் ரவி என்பவர்களின் 5 ஆடுகளை கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

    மேலும் இந்த கிராமத்தில் சிறுத்தை உலா வரும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வதற்காக வர உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. வனத்துறையினர் நேரில் வந்து ஆய்வு மேற் கொண்டால் சிறுத்தையா? அல்லது வேறு ஏதும் மிருகமா? என தெரியவரும்.

    சிறுத்தை வந்திருந்தால் அதனை காட்டுப் பகுதிக் குள் விரட்ட வேண்டும் எனவும் அல்லது கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதி யில் விட நடவடிக்கைகள் எடுத்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் தகவல் பொதுமக்களிடைேய பீதியை ஏற்படுத்தியது.

    • குன்னூர் பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவே பயந்து, வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சிறுத்தை, காட்டெருமை, காட்டு யானை, காட்டுப்பன்றி மற்றும் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் கிராமம் மற்றும் நகரப்பகுதிகளில் நடமாடி வருகிறது.

    குறிப்பாக கரடிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரும் கரடிகள், வீடுகளுக்குள் புகுந்து, அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி வருகிறது. கரடிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சதில் உள்ளனர்.

    மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவே பயந்து, வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    குன்னூர் பகுதியில் உள்ள கன்னி மாரியம்மன் கோவில் தெரு என்ற இடத்தில் கரடி ஒன்று கடந்த சில தினங்களாகவே சுற்றி திரிந்தது.

    கரடி வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே நின்றதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் உள்ள சி.சி.டிவி காட்சிகளை பார்த்தனர்.

    அப்போது, கரடி குட்டி போட்டு இருப்பதாலும், குட்டி அங்கேயே விட்டு சென்றதாலும் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து கரடி அங்கேயே முகாமிட்டு இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். கரடி நடமாட்டம் இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் கேட்டுகொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வடிகால் இல்லாமல் மழை நீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதனால் சளி மற்றும் காய்ச்சல் பரவி வருகிறது. இதேபோல் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவுகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள டெங்கு வார்டில் மட்டும் 20-க்கும் அதிக மானோர் சிகிச்சை பெறு கின்றனர்.

    டெங்கு பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு தனி வார்டு அமைக்கப்பட் டுள்ளது.

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு டெங்கு வார்டில் 8 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது

    20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். அதேபோல் தனியார் மருத்துவமனை களிலும் ஏராளமானோர் சிகிச்சை பெறுகின்றனர். கிராமப்புறங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிக ரித்துள்ளதால் பொது மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

    ஊராட்சிகளில் சுகாதா ரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பைப் வழியாக 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
    • குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரி கடந்த 2 ஆண்டுகளாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியம் வெள்ளி வாயல் சாவடி ஊராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு எம்.ஜி.ஆர். நகரில் குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி உள்ளது. 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி இங்கிருந்து எம்.ஜி.ஆர் நகர், சில்வர் நகர், சேக்கன் காலனி, கிருஷ்ணா நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு பைப் வழியாக 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    கடந்த 2004-ம் ஆண்டுகட்டப்பட்ட குடிநீர் தொட்டி மிகவும் சேதம் அடைந்து உள்ளது. எனினும் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. குடிநீர் தொட்டியின் நான்கு தூண்களின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ள கம்பிகள் வெளியே எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது.

    மேலும் தொட்டியில் இருந்து தண்ணீர் கசிந்து பச்சைபாசிப் படிந்து உள்ளது. இந்த குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் உயிர் பலி வாங்க இடிந்து விழும் நிலையில் காட்சி அளிப்பதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பம்பு ஆப்பரேட்டர் குடிநீர் தொட்டியில் ஏறி சுத்தம் செய்ய அச்சப்படுவதால் சுகாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரி கடந்த 2 ஆண்டுகளாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • யானைகள் தேயிலை தோட்டங்களில் உலா வந்து கொண்டிருந்தது.
    • கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியையொட்டி வனப்பகுதிகளில் வனவிலங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, ஊருக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. சில நேரங்களில் வீடுகளை சேதப்படுத்துவதுடன், மனிதர்களை தாக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. இந்நிலையில் நாடு காணி, பொன்னுார் மற்றும் பொன்வயல் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

    இந்த யானைகள் அங்கிருந்து, பாண்டியார் டான்டீ குடியிருப்பு அருகே உள்ள தேயிலை தோட்டங்களில் நேற்று உலா வந்து கொண்டிருந்தது. யானைகள் உலா வருவதை பார்த்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் நடமாட்டத்தால் வெளியில் வரவே அச்சமாக உள்ளது. எனவே இங்கு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகள் ஊருக்குள் வராதவாறு கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இரவு நேரங்களில் எக்காரணம் கொண்டும் வெளியில் வரவேண்டாம் என ஒலிபெருக்கி வைத்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
    • சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் கரையில் சிறுத்தையின் உருமல் சத்தத்தை தச்சங்காட்டு வலசை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கேட்டுள்ளார்.

    அறச்சலூர்:

    ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சியில் ஓம்சக்தி நகர் உள்ளது. அறச்சலூர் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள இந்த நகரில் சண்முகசுந்தரம் என்ற விவசாயிக்கு சொந்தமான 7 மாத கன்றுக்குட்டியை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இரவில் மர்மவிலங்கு ஒன்று இழுத்து சென்றுவிட்டது.

    அந்த பகுதியில் மழைபெய்த மறுநாள் நடந்த இந்த சம்பவத்தின் போது பதிந்த விலங்கின் கால்தடத்தை வைத்து வனத்துறையினர் கன்றுக்குட்டியை இழுத்து சென்ற விலங்கு எந்த வகையை சேர்ந்தது என்பதை தெரிவிக்காமல் உள்ளனர். மேலும் அந்த மர்மவிலங்கை அறிந்து கொள்ள அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்களையும் பொருத்திவிட்டு விலங்கை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.

    விலங்கின் நடமாட்டம் அந்த பகுதியில் உள்ளது என்பதை உறுதி செய்த பின்னர் அறச்சலூர் பகுதியில் அமைந்துள்ள ஊர்களான கிழக்கு தலவுமலை, ஓம்சக்திநகர், சங்கரன்காடு, வேமாண்டம்பாளையம், வெள்ளிவலசு, ஊஞ்சப்பாளையம், பழைய பாளையம், முருங்க தொழுவு, மேற்கு தலவு மலை, கத்தக்கொடிக்காடு, மூலக்கடை, மீனாட்சி புரம், வீரப்பம்பாளையம், ஊசிப்பாளையம், நடுப்பாளையம் மற்றும் மலையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறும், இரவு நேரங்களில் எக்காரணம் கொண்டும் வெளியில் வரவேண்டாம் என ஒலிபெருக்கி வைத்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    கன்றுக்குட்டியை இழுத்துச்சென்ற விலங்கு எது? என்பது குறித்து வனத்துறையினர் இன்னும் அறிவிக்காத நிலையில் நேற்று அந்த விலங்கை பிடிக்க கூடுதலாக ஒரு கூண்டும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்களால் மக்கள் மிகுந்த பீதிக்குள்ளாகியுள்ளனர்.

    அறச்சலூர் பகுதியை சேர்ந்த வக்கீல் ஒருவரின் தோட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமிராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளதாகவும், அந்த புகைப்படத்தில் உள்ள பதிவு தேதிகள் 18 மற்றும் 19 என்றும் அத்துடன் புகைப்படம் எடுக்கப்பட்ட நேரமும் பதிவாகியிருந்ததால் மக்கள் வெளியான தகவலால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    இதனால் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் கரும்பு பயிர்களுக்கான நீர்பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகள் உயிர்பயம் காரணமாக நின்றுபோயுள்ளன.

    இந்நிலையில் அறச்சலூரில் இருந்து கொடுமுடி நோக்கி பிரிந்து செல்லும் கீழ்பவானி கிளை சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் கரையில் சிறுத்தையின் உருமல் சத்தத்தை தச்சங்காட்டு வலசை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கேட்டுள்ளார்.

    இதனை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று சிறுத்தையை தேடி கொண்டுள்ளனர் என்ற தகவல் வாட்ஸ் அப்பில் வைரலானதை அடுத்து பீதி அறச்சலூரை கடந்து சுற்றுப்புற பகுதிகளையும் ஆட்கொண்டு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒருசில இடங்களில் தெருநாய்கள் குழந்தைகளை விரட்டி, விரட்டி கடிக்கவும் செய்கின்றன.
    • குழந்தைகள், மாணவ-மாணவிகள் வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகரின் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகளில் கூட்டம், கூட்டமாக படையெடுத்து செல்லும் தெருநாய்கள் பொதுமக்களை தொடர்ந்து பதம் பார்த்து வருகின்றன.

     ஒருசில இடங்களில் தெருநாய்கள் குழந்தைகளை விரட்டி, விரட்டி கடிக்கவும் செய்கின்றன. வீதிகளில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியாக செல்ல முடியாமல் உயிரை கையில் பிடித்தபடியே ஒருவித அச்சத்துடனேயே போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் சாலையோரம் படுத்திருக்கும் தெருநாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை திடீரென விரட்டுவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுவதுடன், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட காரணமாக அமைகிறது. இந்த நிலையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் தபால் அலுவலகம் வீதியில் கடந்த 2 நாட்களில் தொடர்ந்து இரவு நேரங்களில் வீடுகளில் இருந்த ஆட்டுக்குட்டி மற்றும் கோழிகளை தெருநாய்கள் கடித்து குதறி உள்ளன. இதில் மறுநாள் காலை ஆடு, கோழிகள் பரிதாபமாக செத்துக்கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அனுப்பர்பாளையம்-ஆத்துப்பாளையம் சாலை, கோகுலம் காலணி, தபால் அலுவலகம் வீதி உள்பட அனுப்பர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக வெறித்தனத்துடன் சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகள், மாணவ-மாணவிகள் வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர்.இதேப்போல் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, நத்தக்காடையூர், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய் ஆடு , மாடுகளை கடித்து கொன்று வருகின்றன. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக வெறிநாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

     எனவே அந்த பகுதிகளில் சுற்றி திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடித்து செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×