search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் வீடு, கடையை சேதப்படுத்திய யானையால் பொதுமக்கள் அச்சம்
    X

    கொடைக்கானலில் யானையால் சேதப்படுத்தப்பட்ட செல்வராஜ் என்பவரது பைக் மற்றும் கடை.

    கொடைக்கானலில் வீடு, கடையை சேதப்படுத்திய யானையால் பொதுமக்கள் அச்சம்

    • கொடைக்கானலில் யானை தொடர்ந்து குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகிறது.
    • கொடைக்கானலில் யானை தொடர் அட்டகாசம்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே உள்ளது பேத்துப்பாறை கிராமம்.இங்குள்ள மக்கள் அதிகமாக விவசாயத்தை நம்பியே உள்ளனர். இப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் அடிக்கடி வந்து செல்லும் யானைக் கூட்டங்கள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி அங்குள்ள விவசாயிகளை கவலையடையச்செய்து வருகிறது. தொடர்ந்து பல மாதங்களாக பணப் பயிர்களை சேதப்படுத்தும் யானைகளால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

    சமீபத்தில் மகேந்திரன் என்ற விவசாயியின் நிலத்தில் பயிரிடப்பட்டு நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் யானையால் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. வாழை பயிரிட செலவு செய்த தொகை கிடைக்காது என்ற நிலைமை ஏற்பட்டது. பல மாதங்களாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி இருந்த யானை நேற்று நள்ளிரவில் செல்வராஜ் என்பவர் கடையை சேதப்படுத்தியது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளது.

    தொடர்ந்து இதுபோல் விவசாயிகளுக்கும் பொது–மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்திவிடும் யானைக் கூட்டத்தை நிரந்தரமாக விவசாய நிலங்களுக்கு அப்பால் விரட்ட வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல முறை தொடர்ந்து ஆண்டு–க்கணக்கில் விவசாய நிலங்களை சேதப்படு–த்திவரும் யானையை விரட்ட நிரந்தர தீர்வு காண வனத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

    Next Story
    ×