search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
    X

    சிமெண்ட் காரைகள் பெயர்ந்த நிலையில் மின்கம்பம்.

    ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

    • வாஞ்சூர் ரவுண்டானா பனங்குடி இடையே உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
    • சாலை வழியே செல்லும் பொதுமக்கள் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படுமா? என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாகூரில் இருந்து மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பனங்குடி ஊராட்சி பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட பகுதியில் சேர்ந்த மக்கள் அன்றாடம் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர நாகூர்-நன்னிலம் சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில் வாஞ்சூர் ரவுண்டானா பனங்குடி இடையே உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அதேபோல் எதிரே புதுமனை தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்து மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் சாலை வழியே செல்லும் பொதுமக்கள் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படுமா? என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன்னர் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.

    Next Story
    ×