search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "increasing"

    • மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    • 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், தேயிலைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் உள்ளனர்.

    கோத்தகிரி

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இந்த தொழிலை நம்பி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள், தேயிலைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் உள்ளனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை போதுமான அளவு பெய்தது. மேலும் வெயில், மழை என இதமான சீதோஷ்ண காலநிலை நிலவி வருகிறது.

    இதனால் தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகளில் தற்போது கொழுந்துகள் அதிகம் வளர்ந்து உள்ளன. இதன் காரணமாக மகசூல் அதிகரித்து உள்ளது. பச்சை தேயிலை ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.18-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் விலை போதுமானதாக இல்லா விட்டாலும், மகசூல் அதிகரித்து உள்ளதால் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்தநிலையில் பச்சை தேயிலையை பறிப்பதற்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் தேயிலை கொழுந்துகளை அறுவடை செய்வதற்கு, கையால் இயக்கும் எந்திரம், மோட்டார் மூலம் அறுவடை செய்யும் எந்திரம் மற்றும் அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். தேயிலை எஸ்டேட் உரிமையாளர்கள் மோட்டார் மற்றும் காற்றால் இயங்கக்கூடிய அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 300 கிலோ வரை தேயிலையை அறுவடை செய்கின்றனர்.

    இதேபோல் சிறு தேயிலை விவசாயிகள் கைகளால் இயக்கும் கத்தரிக்கோல் வடிவிலான எந்திரம் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட எந்திரங்களை பயன்படுத்தி அறுவடை செய்து வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் ஒரு கிலோ பச்சை தேயிலை பறிக்க ரூ.6 கூலியாக பெற்று வருகின்றனர்.

    தற்போது தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளதால், விவசாயிகள் அதனை பறித்து தொழிற்சாலைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர். இதனால் தொழிற்சாலைகளுக்கு தேயிலை வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, தேயிலை தொழிற்சாலைகளுக்கும் ஓரளவு கணிசமான வருவாய் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விதி மீறும் மினி வேன்களால் அதிகரிக்கும் விபத்துகள் ஏற்படுகிறது
    • பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.

    கரூர்:

    கரூர் நகரில் அதிகளவில், சரக்குகளை ஏற்றி செல்லும் மினி வேன்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் மரம், கண்ணாடி, இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் ஏற்றி செல்கின்றனர். வாகனத்துக்கு வெளியே பல அடி துாரத்துக்கு இரும்பு கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால், பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக, சிவப்பு கொடி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். ஆனால், கரூரில் மினி வேன் ஓட்டுநர்கள், இதனை மீறுவதால், பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, இது குறித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • அவிநாசி, சேவூர் ரோடு காமராஜ் நகரில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் அப்பகுதியில் சுற்றிச்சுற்றி வருகிறது
    • வெளியில் தனியாக குழந்தைகளை அனுப்ப பயமாக இருக்கிறது.

    அவிநாசி :

    அவிநாசி, சேவூர் ரோடு காமராஜ் நகரில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் அப்பகுதியில் சுற்றிச்சுற்றி வருகிறது. பகல் மற்றும் இரவு நேரத்தில் சாலையில் சுற்றி திரிவதோடு, நடத்து செல்லும் குழந்தைகளை துரத்துதல், மோ ட்டார் சைக்கிள்களில் செல்வோரை கடிக்க துரத்துதல் போன்ற செயல்களில் நாய்கள் ஈடுபடுகின்றன.இது குறித்து காமராஜ் நகரை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    வெளியில் தனியாக குழந்தைகளை அனுப்ப பயமாக இருக்கிறது. அருகில் உள்ள மளிகை கடைக்கு செல்வதற்கே நாய்கள் எங்காவது சுற்றி கொண்டிருக்கின்றதா என்று பார்த்து விட்டு தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட நாய்கள் ரோட்டில் அங்கும் இங்கும் ஓடுவதால் எந்த சமயத்தில் என்ன நடக்குமே என்ற அச்சமே அதிகரிக்கிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ரோட்டில் வந்து நிற்க முடிவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், நாய்களை பிடித்து அதற்கு கருத்தடை ஊசி போட உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்றனர்.

    • தென்காசி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி பயிரிடப்பட்டு உள்ளது.
    • சூரியகாந்தி பயிர் மிகவும் எளிமையான பயிர். குறைந்த தண்ணீரில் நிறைந்த மகசூல் தரக்கூடியது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் அதிக லாபம் தரும் சூரியகாந்தி பயிர் சாகுபடியானது சங்கரன்கோவில், கடையநல்லூர், பாவூர்சத்திரம், சாம்பவர்வடகரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி ஆகியவை முக்கிய பயிர்களாக விளைவிக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்திற்கு நடப்பாண்டில் மட்டும் 1,250 ஏக்கர் பயிரிடலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் காரீப் என்று சொல்லக்கூடிய இந்த பருவத்தில் சுமார் 500 ஏக்கர் சூரியகாந்தி பயிரிடப்பட்டுள்ளது.

    அதில் செங்கோட்டை வட்டாரம் சாம்பவர்வடகரை பகுதியில் மட்டும் சுமார் 175 ஏக்கரில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சூரியகாந்தி பயிர் மிகவும் எளிமையான பயிர். குறைந்த தண்ணீரில் நிறைந்த மகசூல் தரக்கூடியது. விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரக்கூடிய எண்ணை வித்து பயிராகும்.

    தற்போது அந்த பகுதியில் காண்போரை கவர்ந்து இழுக்கும் வகையில் சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்குகிறது.சூரியகாந்தி பயிரானது 120 நாள்கள் வயதுடைய வீரிய ஒட்டு பயிர். 5 முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

    சூரியகாந்தியில் ஒரு ஏக்கருக்கு 10 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கிறது. நல்ல விலையும் கிடைப்பதால் விவசாயிகளிடம், வியாபாரிகள் நேரடியாக வந்து சூரியகாந்தி கொள்முதல் செய்கின்றனர்.இதனால் போக்குவரத்து செலவின்றி அதிக லாபம் கிடைக்கிறது.

    மேலும் தற்போது எண்ணெய் வித்து பயிரான சூரியகாந்தியில் முக்கிய தொழில்நுட்பமாக பூக்கும் தருவாயில் மகரந்தச்சேர்க்கை தீவிரமாக நடைபெறுவதால் அதிக மகசூல் கிடைக்கும். தேனீக்கள், குழவிகள், வண்டுகள், பூச்சிகள் முதலானவை மகரந்த சேர்க்கையை துரிதப்படுத்தபடுகிறது.

    ஆகையால் சூரியகாந்தி பயிரிடும் பகுதிகளில் தேனீ பெட்டிகளை அதிகமாக வைப்பதால் மகரந்தச் சேர்க்கை அதிகமாக ஏற்பட்டு மகசூல் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது.விவசாயிகள் பெரும்பாலானோர் தற்போது அதிக அளவில் பூச்சி மருந்துகளை கையாளுவதால் வண்டுகள் எண்ணிக்கை மிக குறைந்து விட்டது.

    இதனால் இயற்கை முறையில் சாகுபடி செய்ய கிராமப்புற விவசாயிகளுக்கு பயிற்சிகளையும் செயல்விளக்கங்களையும் வேளாண் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    செங்கோட்டை வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின் பேரில் வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் ஆலோசனையின் பேரில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் தலைமையில் அவ்வப்போது சாம்பவர் வடகரை பகுதியில் பூக்களில் மகரந்த சேர்க்கைக்காக செயல் விளக்கங்கள் செய்து காண்பித்து விவசாயிகளை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 139 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 984 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் மெல்ல மெல்ல கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் மேலும் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தினசரி பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    குறிப்பாக கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு இரட்டை இலக்க எண்ணில் பதிவாகி வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 876 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 11 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 26 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 

    ×