search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய்கள் தொல்லை"

    • வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர்
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட ஜெ.சி.கே நகர், ஹவுசிங் போர்டு, பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் உள்ளன.

    கூட்டமாக தெருக்களுக்குள் சுற்றித்திரி வதால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இந்தப் பகுதிகளில் சமீப காலங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த தெருநாய்கள் அனைத்து தெருக்களிலும் அலைந்து திரிவதால் வயதானவர்கள் மற்றும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு மற்றும் வேறு இடங்களுக்கு செல்லும் போது ஒருவித அச்சத்துடனேயே செல்ல வேண்டியதாக உள்ளது.

    காலை நேரத்தில் பணிக்கு செல்வோரும் பணி முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்புவோரும், பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் மாலை நேரங்களில் டியூசன் செல்லும் மாணவர்களை துரத்திச் சென்று கடிக்கிறது.சக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.

    பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களையும் விடாமல் துரத்துவதால் மக்கள் தெருவில் நடக்கவே அஞ்சுகின்றனர்.

    பொது மக்களின் நலன் கருதி நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்களை நாய்கள் கூட்டமாக துரத்தி கடிக்கின்றன.
    • கடந்த ஒருவாரத்தில் திருத்தணியில் 10-க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்து உள்ளன.

    திருத்தணி:

    திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி வருகின்றன.

    நாய்கள் சாலை நடுவிலேயே படுத்து தூங்குவதாலும், அவ்வப்போது வாகனங்கள் செல்லும்போது ரோட்டின் குறுக்கே ஓடுவதாலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    மேலும் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்களை நாய்கள் கூட்டமாக துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்களும், சிறுவர்களும் தெருக்களிலும், சாலையிலும் செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது.

    நேற்று மட்டும் மேட்டு தெரு மற்றும் பழைய தர்மராஜா கோவில் தெருவில் 2 ஆண்களை நாய்கள் விரட்டி, விரட்டி கடித்து குதறின. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்றனர்.

    கடந்த ஒருவாரத்தில் திருத்தணியில் 10-க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்து உள்ளன. நாய்களின் அச்சுறுத்தலால் வெளியே செல்ல பொது மக்கள் தவித்து வருகிறார்கள். தங்களது குழந்தைகளையும் வெளியே அனுப்ப பயந்தபடி உள்ளனர்.

    எனவே திருத்தணி நகராட்சியில் சுற்றிதிரியும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நாய்கள் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கின்றனர்.
    • அனைத்து வார்டுகளிலும் மக்களை அச்சமூட்டும் நாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

    கோவை:

    கோவை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    குறிப்பாக உக்கடம், ராமநாதபுரம், புலியகுளம், சரவணம்பட்டி, குனிய முத்தூர், கரும்புக்கடை, சாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தெருநாய்கள் உள்ளன.இந்த நாய்கள் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கின்றனர். சில சமயங்களில் கடித்து விடுகின்றன. நாய்களின் தொல்லையால், வாகன ஓட்டிகள் சில நேரங்களில் விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது.

    கடந்த வாரம் கூட உக்கடம் ஞானியார் நகரில் தெருநாய் கடித்து 11 பேர் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து தெருநாய்கள் தொல்லையை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.

    அதன்படி கடந்த வாரம் முதல் மாநகர பகுதிகளில் மக்களுக்கு இடையூறாக உள்ள நாய்கள் வலைகள் மூலமாக பிடித்து ஒண்டிப்புதூர், சீரநாயக்கன் பாளையம் பகுதிகளில் உள்ள கருத்தடை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநகரில் கடந்த ஒரு வாரமாக 50க்கும் மேற்பட்ட தெருக்களில் இடையூறாக உள்ள நாய்களை கண்டறிந்து, அவற்றை தனியார் உதவியுடன் பிடித்து கருத்தடை மையங்களுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுவரை 40 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மக்களை அச்சமூட்டும் நாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

    ×