search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருத்தணியில் ஒரு வாரத்தில் 10 பேரை கடித்து குதறிய நாய்கள்- பொதுமக்கள் அச்சம்
    X

    திருத்தணியில் ஒரு வாரத்தில் 10 பேரை கடித்து குதறிய நாய்கள்- பொதுமக்கள் அச்சம்

    • வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்களை நாய்கள் கூட்டமாக துரத்தி கடிக்கின்றன.
    • கடந்த ஒருவாரத்தில் திருத்தணியில் 10-க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்து உள்ளன.

    திருத்தணி:

    திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி வருகின்றன.

    நாய்கள் சாலை நடுவிலேயே படுத்து தூங்குவதாலும், அவ்வப்போது வாகனங்கள் செல்லும்போது ரோட்டின் குறுக்கே ஓடுவதாலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    மேலும் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்களை நாய்கள் கூட்டமாக துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்களும், சிறுவர்களும் தெருக்களிலும், சாலையிலும் செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது.

    நேற்று மட்டும் மேட்டு தெரு மற்றும் பழைய தர்மராஜா கோவில் தெருவில் 2 ஆண்களை நாய்கள் விரட்டி, விரட்டி கடித்து குதறின. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்றனர்.

    கடந்த ஒருவாரத்தில் திருத்தணியில் 10-க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்து உள்ளன. நாய்களின் அச்சுறுத்தலால் வெளியே செல்ல பொது மக்கள் தவித்து வருகிறார்கள். தங்களது குழந்தைகளையும் வெளியே அனுப்ப பயந்தபடி உள்ளனர்.

    எனவே திருத்தணி நகராட்சியில் சுற்றிதிரியும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×