search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்ணமங்கலத்தில் நாய்கள் தொல்லை
    X

    கண்ணமங்கலம் பேருராட்சி அலுவலகம் எதிரே நாய்கள் சுற்றி திரிந்த காட்சி.

    கண்ணமங்கலத்தில் நாய்கள் தொல்லை

    • பொதுமக்கள் அவதி
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து தெருக்களில் கடந்த சில ஆண்டுகளாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மாணவ மாணவிகளை, மோட்டார் சைக்கிளில் செல்வோரை துரத்திச் செல்கிறது.

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையை போக்க, கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து காடுகளிலோ அல்லது யாரும் இல்லாத இடத்திலோ விட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் பேருராட்சி அலுவலகம் சுற்றி தற்போது வாகனங்கள் நிறுத்து மிடமாக மாறி வருகிறது.

    எனவே வாகனங்கள் நிறுத்த பேரூராட்சி சார்பில் மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×