search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் சுற்றித்திரியும் நாய்களால் பொது மக்கள் அவதி
    X

    சாலையில் சுற்றித்திரியும் நாய்களால் பொது மக்கள் அவதி

    • பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக தினமும் வெளியே சென்று வருகின்றனர்.
    • நகரின் முக்கிய வீதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், பணி நிமித்தமாகவும் தினமும் வெளியே சென்று வருகின்றனர். இந்நிலையில், நகரின் முக்கிய வீதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. கூட்டம் கூட்டமாக நாய்கள் சாலையில் வலம் வருகின்றன. அதிலும் சில நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களை துரத்துகிறது.

    மேலும், வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டி செல்வதால் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும், சில நாய்கள் நோய் வாய்ப்பட்டு காணப்படுகிறது. அதனால் வரும் துர்நாற்றத்தால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×