search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெறிநாய்"

    • சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களான நட்சத்திர ஏரி, கலையரங்கம் பகுதிகளில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • சுமார் 4 க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் தூய்மை பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் சிலரை கடித்து காயப்படுத்தியது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களான நட்சத்திர ஏரி, கலையரங்கம் பகுதிகளில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கலையரங்கம் பகுதியில் சுமார் 4 க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் தூய்மை பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் சிலரை கடித்து காயப்படுத்தியது. உடனே காயம் பட்டவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தால் இது போன்ற செயல்கள் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே வெறி நாய்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    • இரவு சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சாலையில் செல்வோரையும் அந்த வெறிநாய் கடித்தது.
    • குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கத்தாள பேட்டை பகுதியில் வசிப்பவர் விமலா, மாதேஸ்வரன் தம்பதி. இவர்களது 2 வயது மகள் ஹரிணி அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அப்பகுதியில் இருந்த தெருநாய் ஒன்று ஹரிணியை முகத்தில் கடித்தது. இதில் அந்த குழந்தைக்கு முகத்தில் பல காயங்கள் ஏற்பட்டது. வலியால் துடித்த குழந்தையை பெற்றோர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

    இதேபோல் நேற்று இரவு சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சாலையில் செல்வோரையும் அந்த வெறிநாய் கடித்தது. இதில் சிறுவர்கள், பெரியவர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து நகராட்சி சுகாதாரத் துறையினருக்கு தகவல் தரப்பட்டு அந்த நாய் பிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

    இது குறித்து சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறியிருப்பதாவது:-

    வெறிநாய் கடித்தது குறித்து தகவல் கிடைத்தவுடன் அதற்குரிய வாகனம் மற்றும் ஆட்கள் அனுப்பி வைத்து அந்த நாய் பிடிக்கப்பட்டது. நகரில் உள்ள நாய்களுக்கு எல்லாம் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவைகளால் எவ்வித பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படாது. இந்த நாய் வெளியில் இருந்து புதிதாக வந்துள்ளது. அதனை பிடித்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • வெறிபிடித்த தெரு நாய் ஒன்று பொதுமக்களை கடித்தது.
    • அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார்,சந்தை மேடு, களவாய் கூட்டு ரோடு ஆகிய பகுதிகளில் வெறிபிடித்த தெரு நாய் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்,முதியோர் உள்ளிட்ட பொதுமக்களை கடித்ததில் ஆதிலட்சுமி (வயது 50) சக்திவேல் (35), சாதனா( 14), மகாதேவன் (65), ஆகாஷ் (22) நவீன்குமார் (21) உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவ ர்கள் செஞ்சி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர். ஒரே நாய் கடித்ததில் பொதுமக்கள் பாதிக்க ப்பட்டு அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • வெறி நாய்கள் கடித்து குதறியதில் பட்டிக்குள் அடைக்கப்பட்ட 16 ஆடுகள் பரிதாபமாக செத்தன
    • தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

    தா.பேட்டை,

    தா.பேட்டை அருகே தோட்டத்தில் பட்டிக்குள் அடைக்கப்பட்ட ஆடுகளை நாய்கள் கடித்துக் குதறியதில் 16 ஆடுகள் உயிரிழந்தது.தா.பேட்டை அடுத்துள்ள மேட்டுப்பாளையம் கோணங்கிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்க ண்ணா. விவசாயியான இவர் விவசாய வேலை செய்தும், ஆடுகள் வளர்த்து ம் பிழைப்பு நடத்தி வருகி றார். இவரது தோட்டத்தில் உள்ள பட்டியில் ராஜேஷ்க ண்ணா 20 ஆடுகளை அடை த்து வைத்திருந்துள்ளார். பட்டி இருந்த பகுதியில் யாரும் இல்லாததால் அப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு நாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த 16 ஆடுகள் பரிதாபமாக இறந்து போனது. நான்கு ஆடுகள் மட்டும் உயிர் பிழைத்தது. சம்பவம் குறித்து ராஜே ஷ்கண்ணா வருவாய்த்துறை மற்றும் தா.பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நாய்கள் கடித்து ஆடுகள் பலியான சம்பவத்தை அறிந்த மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவர் செளந்தரராஜன் விவசாயி ராஜேஷ்கண்ணாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தெருவில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே செம்மங்காளிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிசாமி. இவர் 15-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், கோழிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் பழனிசாமி நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை 6.30 மணிக்கு பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடுகளை பார்க்க வந்துள்ளார். அப்போது 10 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் 4 ஆடுகள் செத்துவிட்டன. 6 ஆடுகள் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. அவற்றை மீட்டு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார்.

    ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கு என்னவாக இருக்கும் என சந்தேகத்தில் காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காங்கயம் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் வெறிநாய்கள் கடித்தது போல் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.இதேபோல் ஊதியூர் பகுதியிலும் ஒரு விவசாயியின் பட்டியில் இருந்த ஒரு ஆட்டையும் மர்ம விலங்கு கடித்து கொன்று சிறிது தொலைவில் போட்டுவிட்டு சென்றுள்ளது. இதுகுறித்து காங்கயம் வனத்துறையினர் கூறும்போது " செம்மங்காளிப்பாளையம் மற்றும் ஊதியூர் பகுதியில் ஆடுகளை கடித்து குதறியது வெறிநாய்களாக இருக்க வாய்ப்புள்ளது. சிறுத்தையாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவு. இருப்பினும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இதுவரை சிறுத்தை குறித்த உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.சம்பந்தப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதில் வெறிநாய்கள் தவிர வேறு ஏதாவது மர்ம விலங்கு நடமாட்டம் தெரிகிறதா? என கண்காணிக்க உள்ளோம். இருப்பினும் பொதுமக்கள் கவனமுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றார். செத்துப்போன ஆடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவம் நடந்த இடமான காங்கேயம் நகராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் ஏ.சி. மணி சம்பவ இடத்தை பார்வையிட்டு விவசாயிக்கு ஆறுதல் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றையும் அளித்தார்.

    • 5 கால்நடை மருத்துவமனைகளும், 15-க்கும் மேற்பட்ட கால்நடை மருந்தகங்களும், 5-க்கும் மேற்பட்ட கால்நடை உதவி மருத்துவமனைகளும் உள்ளன. இவை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடு, மாடு கோழி நாய் உள்பட விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • இந்த நிலையில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் உள்பட ஒன்றியங்களில் சில வாரங்களாக வெறிநாய் தடுப்பூசி இல்லை. ஊசி போட நாயுடன் வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 5 கால்நடை மருத்துவமனைகளும், 15-க்கும் மேற்பட்ட கால்நடை மருந்தகங்களும், 5-க்கும் மேற்பட்ட கால்நடை உதவி மருத்துவமனைகளும் உள்ளன.

    இவை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடு, மாடு கோழி நாய் உள்பட விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முக்கியமாக மாடுகளுக்கு சினை ஊசி போடுதல், கோமாரி தடுப்பூசி, வயிற்றில் உள்ள புழுக்களை நீக்க மருந்து, வெறி நாய் கடி தடுப்பூசி ஆகியவை குறிப்பிட்ட இடைவெளியில் போடப்படுகிறது.

    இந்த நிலையில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் உள்பட ஒன்றியங்களில் சில வாரங்களாக வெறிநாய் தடுப்பூசி இல்லை. ஊசி போட நாயுடன் வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

    சிறப்பு முகாமில் வெறிநாய் தடுப்பூசி அனைத்தும் போடப்பட்டுவிட்டது என்றும், இனிமேல் வந்தால் தான் தடுப்பூசி போடப்படும் என்றும் கூறுவதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே தேவையான தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • முகாமில் 50-க்கும் மேற்பட்ட நாய் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • வெறிநோய் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் பள்ளி மாணவர்களுடன் நடைபெற்றது.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் காஸ்மியா மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பில் வெறிநாய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    இம்முகாமிற்கு ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் சமீமா பர்வீன் முபாரக் உசேன் தலைமை வகித்தார். பாபநாசம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மாவட்ட கவுன்சிலர் பாத்திமா ஜான் ராயல் அலி, ஒன்றிய கவுன்சிலர் ரஜியா சுல்தானா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சம்பந்தம் வரவேற்று பேசினார்.

    முகாமில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பாபநாசம் ஒன்றிய கால்நடை மருத்துவர்கள் மணிச்சந்திரன், ஏஞ்சலா சொர்ணமதி, சங்கமித்ரா, சௌந்தரராஜன், அபிமதி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மதியழகன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர்.

    இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட நாய் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் வெறிநோய் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் பள்ளி மாணவர்களுடன் நடைபெற்றது.

    முகாமில் மாவட்ட பிரதிநிதி தமிழ்வாணன், ஒன்றிய துணை செயலாளர் கலிய–மூர்த்தி, பெரிய பள்ளிவாசல் செயலாளர் யூசுப் அலி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அசரப்அலி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்–பாளர் மணி–கண்டன், துணை அமைப்பாளர் மணி–மாறன், வட்டார வளர்ச்சி அலு–வலர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன், ஐயப்பன், ராஜகிரி காஸ்மியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்க தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் ராஜகிரி ஊராட்சி செயலாளர் ஜெய்குமார் நன்றி கூறினார்.

    • விருதுநகரில் தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • நகராட்சி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகரில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் கூட்டமாக நிற்கும் தெருநாய்கள் அந்த வழியாக செல்வோரை விரட்டிச்சென்று கடிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் பெரியகிணற்று தெருவில் வெறிநாய் கடித்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட னர். நாள்தோறும் விருதுநகரில் நாய் கடிக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெருவில் விளையாடும் குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே நகராட்சி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெறிநாய் பொதுமக்களை துரத்தி சென்று கடித்தது.
    • இதில் 10-க்கும் மேற்பட்டோர் ரத்த காயம் அடைந்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியில் கடந்த சில மாதங்களாகவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் கூட்டமாக நிற்கும் தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து வருகிறது. சிலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நிலையும் ஏற்பட்டது.

    தெருவில் விளையாடும் குழந்தைகள், நடந்து செல்லும் முதியவர்கள், பெண்களை விரட்டி கடிப்பதால் வெளியில் செல்லவே பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நகராட்சி தொகுதிகளில் தெருநாய்களின் நட மாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டுமென பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நகராட்சி இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை ராஜபாளையம் புதுப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, ஆண்டத்தம்மன் கோவில் தெரு, மாப்பிள்ளை சுப்பையா தெரு ஆகிய பகுதிகளில் நடந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை வெறிநாய் ஒன்று துரத்திச்சென்று கடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் ரத்த காயம் அடைந்தனர். அவர்கள் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதன் காரணமாக அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தெருநாய் விஷயத்தில் மட்டுமின்றி செல்லப்பிராணிகளிடம் நாம் கவனமுடன் இருக்க வேண்டும் என்கிறார் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி பொதுமருத்துவத்துறை பேராசிரியர்
    • நாய்கடித்த நாளே தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம்

     திருப்பூர் :

    பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை விட, சாலையில் சுற்றித்திரியும் நாய்களே பிறரை கடிப்பவையாக இருப்பது குறித்து குற்றச்சாட்டு எழுகிறது.தெருநாய் விஷயத்தில் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளிடம் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். தக்க நேரத்தில் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்கிறார் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி பொதுமருத்துவத்துறை இணை பேராசிரியர் செண்பகஸ்ரீ.இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாய்களிடம் குழந்தைகள், கர்ப்பிணிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். நாய் அருகில் குழந்தைகளை தனியே விளையாட விடக் கூடாது. முன்னெச்சரிக்கை முக்கியம்.நாய் கடித்தால் மறைக்காமல், சொல்ல வேண்டுமென பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.நாய் கடித்தது ஆனால் ரத்தம் வரவில்லை. பற்கள் பதியவில்லை, லேசாக நகத்தில் பிராண்டியது என்றாலும், டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    நாய்க்கடிக்கு பொதுவாக முதல்நாள், 3-வது, 7-வது, 14 மற்றும் 28வது நாள் என 5 தடுப்பூசி செலுத்தப்படுகிறது.நாய்கடித்தவர் ஒருமுறை தடுப்பூசி செலுத்துமிடத்தில் பதிவு செய்து விட்டால் மறுமுறை அங்கு தான் வர வேண்டும் என்பதில்லை. பதிவு செய்து பதிவுஅட்டை பெற்று எந்த மருத்துவமனையிலும் வேண்டுமானாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்டாயம் 5 தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும்.நாய்க்கடித்து சரியான நேரத்துக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல், அலட்சியமாக இருந்து விட்டால் 6மாதம் கழித்து கூட தொந்தரவு வர வாய்ப்புள்ளது. எந்த நாயிடம் ரேபிஸ் கிருமி இருப்பது என்பது நமக்கு தெரியாது.

    நாய்க்கடி வேறு, வெறிநாய்க்கடி வேறு. கடித்த நாய்க்கு ரேபிஸ் கிருமி இருந்தால் நமக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.தடுப்பூசி போடவில்லையென்றால், ரேபிஸ் வைரஸ் நரம்புகளில் குடியேறும். வீரியத்தை காட்டும். தண்ணீர் குடிக்க, சாப்பிட பிரச்னை ஏற்படும். நரம்புகள் பாதிப்பதால் உணவு எடுக்க முடியாமல் இறப்பை தழுவ நேரிடலாம்.நாய் கடித்த இடத்தை தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். ரத்த போக்கு குறைந்தவுடன், நாய்கடித்த நாளே தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம்.இவ்வாறு டாக்டர் செண்பகஸ்ரீ கூறினார்.

    • மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
    • கடந்த 2-ந்தேதி அன்று மக்கள் பலரை வெறிநாய் கடித்து படுகாயம் ஏற்படுத்தியுள்ளது.

    கன்னியாகுமரி:

    கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் தலைவர் ராதிகா தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆசிரியை கரோலின் கீதா வரவேற்றார். தலைமை ஆசிரியர் கனகராஜ் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினார்.

    பெற்றோர்கள் சார்பில் சுபா, தீபா, ஷீலாம்மா, மரிய அனிதா, மேரி சிந்தியா, நிர்மலா, ஷைலஜா உள்ளிட்டோர் மாணவர் நலன்சார் கருத்துகளை முன்வைத்து பேசினர். ஆசிரியை வேபிள் விஜிலா நன்றி கூறினார். நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முத்தலக்குறிச்சி மற்றும் கல்குறிச்சி பகுதிகளில் கடந்த 2-ந்தேதி அன்று மக்கள் பலரை வெறிநாய் கடித்து படுகாயம் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களும், மாணவர்களும் ஒருவித அச்ச உணர்வுடன் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் அவசரமாக தலையிட்டு இப்பகுதியில் எவ்வித கட்டுப்பாடுமின்றி நடமாடும் தெருநாய்களை அப்புறப்படுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ×