search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rabidog"

    • வெறி நாய்கள் கடித்து குதறியதில் பட்டிக்குள் அடைக்கப்பட்ட 16 ஆடுகள் பரிதாபமாக செத்தன
    • தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

    தா.பேட்டை,

    தா.பேட்டை அருகே தோட்டத்தில் பட்டிக்குள் அடைக்கப்பட்ட ஆடுகளை நாய்கள் கடித்துக் குதறியதில் 16 ஆடுகள் உயிரிழந்தது.தா.பேட்டை அடுத்துள்ள மேட்டுப்பாளையம் கோணங்கிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்க ண்ணா. விவசாயியான இவர் விவசாய வேலை செய்தும், ஆடுகள் வளர்த்து ம் பிழைப்பு நடத்தி வருகி றார். இவரது தோட்டத்தில் உள்ள பட்டியில் ராஜேஷ்க ண்ணா 20 ஆடுகளை அடை த்து வைத்திருந்துள்ளார். பட்டி இருந்த பகுதியில் யாரும் இல்லாததால் அப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு நாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த 16 ஆடுகள் பரிதாபமாக இறந்து போனது. நான்கு ஆடுகள் மட்டும் உயிர் பிழைத்தது. சம்பவம் குறித்து ராஜே ஷ்கண்ணா வருவாய்த்துறை மற்றும் தா.பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நாய்கள் கடித்து ஆடுகள் பலியான சம்பவத்தை அறிந்த மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவர் செளந்தரராஜன் விவசாயி ராஜேஷ்கண்ணாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தெருவில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×