search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் கைது"

    • வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தாளவாடி போலீசார் சாந்தி என்பவரை கைது செய்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமை யில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது தாளவாடி அடுத்த கல் மண்டிபுரம், சோழகர் தொட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அந்த வீட்டிற்குள் சென்று சோதனை செய்த போது அங்கு 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இது குறித்து தாளவாடி போலீசார் சாந்தி (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • நேரு நகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • அங்குள்ள ஒரு வீட்டில் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்துவது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசாருக்கு நேரு நகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தியதில் சிவசக்தி நகரைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் அங்குள்ள ஒரு வீட்டில் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்துவது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். 

    • சீட்டு பணம் கட்டினால் நீங்கள் பணத்தை சேர்த்து வீடு வாங்கலாம் என கூறியுள்ளார்.
    • தீபாவளி சீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மாலா என்கிற பத்மினி (வயது 55). இவர் அதே பகுதியை சேர்ந்த அல்லி (வயது 35) என்ற பெண்ணிடம் தீபாவளி சீட்டு பிடித்து வருகின்றேன். என்னிடம் சீட்டு பணம் கட்டினால் நீங்கள் பணத்தை சேர்த்து வீடு வாங்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து அல்லி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பத்மினி என்கிற மாலாவிடம் கடந்த 2021 முதல் 2022 வரை தீபாவளி சீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி வந்தனர்.

    இந்த நிலையில் பணம் கட்டிய பெண்கள் தங்கள் பணத்தை மாலா என்கிற பத்மினியிடம் கேட்டு வந்தனர். இதற்கு பத்மினி சரியான முறையில் பதில் அளிக்காமல் பணம் தராமல் ஏமாற்றிக் வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஏமாந்த பெண்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதன் பேரில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் லிடியா செல்வி மற்றும் போலீசார் புதுப்பாளையம் பகுதியில் இருந்த பத்மினி என்கிற மாலாவை அதிரடியாக கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலை சம்பவம் தொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
    • காரில் உடலை எடுத்து வந்தபோது வாகன சோதனை எதிலும் சிக்காமல் பாக்கியலட்சுமி நைசாக சென்னை மாநகருக்குள் ஊடுருவி உள்ளனர்.

    தன்னை விட 9 வயது மூத்த பாக்கியலட்சுமியை திருமணம் செய்து இருந்தாலும் ஜெயந்தனின் விருப்பத்தால் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

    ஆனால் பாக்கியலட்சுமி பாலியல் தொழிலில் ஈடுபடுவதை ஜெயந்தன் தனது குடும்பத்தினரிடம் கூறாமல் மறைத்தார். மேலும் மற்ற நபர்களுடன் பாக்கியலட்சுமி தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்காக அவருக்கு புதிய செல்போன் நம்பரையும் வாங்கி கொடுத்தார்.

    ஆனால் அதிலும் அவர் தனக்கு ஏற்கனவே பழக்கமான நபர்களுடன் எப்போதும் பேசிக்கொண்டு இருந்தார். அவ்வப்போது வெளியில் சென்று வந்தார்.

    பாக்கியலட்சுமியின் இந்த நடவடிக்கையால் ஜெயந்தனின் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி விசாரித்தபோது தான் பாக்கியலட்சுமியின் கடந்த கால வாழ்க்கை தெரிந்தது.

    இதற்கிடையே பாக்கியலட்சுமியின் செல்போன் எண் எப்போதும் பிசியாக இருந்ததால் ஜெயந்தன் கண்டித்து பாலியல் தொழிலை விட்டு விட்டு தன்னுடன் மட்டும் குடும்பம் நடத்தும்படி வற்புறுத்தினார்.

    இதில் ஏற்பட்ட தகராறில் பாக்கியலட்சுமி தனது தாலியை கழற்றி ஜெயந்தனிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். எனினும் பாக்கியலட்சுமி மீது தீராத ஆசை மற்றும் அன்பு கொண்ட ஜெயந்தன் அவரை குடும்பம் நடத்த தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.

    இந்த தகராறில் தற்போது ஜெயந்தன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 38 வயது ஆனாலும் பாக்கியலட்சுமி தனது கட்டுக்கோப்பான உடல் அழகால் பலரை கட்டுப்படுத்தி வந்து உள்ளார்.

    இந்த வழக்கில் கொலைக்கு உதவி செய்து கைதான சங்கருக்கும், பாக்கியலட்சுமிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து உள்ளது. ஜெயந்தனின் உடலை துண்டு துண்டாக வெட்டி புதைக்க உதவிய சங்கர் மற்றும் கோவளத்தை சேர்ந்த கோவில் பூசாரி வேல் முருகன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜெயந்தனை விட்டு பிரிந்து சென்று விட்டேன்.
    • எனக்கு தெரிந்த சங்கர் என்பவரை வரவழைத்து இருவரும் சேர்ந்து ஜெயந்தனை கொலை செய்தோம்.

    சென்னை:

    சென்னை நங்கநல்லூரில் வசித்து வந்த 29 வயது வாலிபர் ஜெயந்தன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொலை செய்யப்பட்ட சம்பவமும், அவரது உடலை துண்டு துண்டாக்கி விபசார அழகி ஒருவர் கோவளத்தில் கொன்று புதைத்ததும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நங்கநல்லூர் என்.ஜி.ஓ. காலனி 3-வது தெருவில் வசித்து வந்த ஜெயந்தன் சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி மாயமான ஜெயந்தன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதுபற்றி பழவந்தாங்கல் போலீசில் ஜெயந்தனின் அக்கா ஜெயகிருபா புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பலாம்பட்டியில் வசித்து வரும் பாக்கியலட்சுமி என்கிற விபசார அழகியுடன் ஜெயந்தனுக்கு காதல் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. பாக்கியலட்சுமிக்கு 39 வயதாகும் நிலையில் ஜெயந்தன் அவருடன் வாழ விரும்பியுள்ளார்.

    ஆனால் பாக்கியலட்சுமிக்கோ அதில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் பாக்கியலட்சுமி, ஜெயந்தனை பிரிந்து பொன்னமராவதியில் போய் வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில்தான் ஜெயந்தன் அங்கு சென்று என்னுடன் வந்து விடு. நாம் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தலாம் என்று கூறி உள்ளார். ஆனால் அதற்கு பாக்கியலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஜெயந்தனை, பாக்கியலட்சுமி துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்து உடல் பாகங்களை கோவளத்துக்கு கடத்தி வந்து தோண்டி புதைத்திருக்கும் திடுக்கிடும் தகவலும் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக பாக்கியலட்சுமி போலீசில் அளித்து உள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள லாட்ஜில் விபசார தொழிலுக்காக நான் சென்றிருந்தேன். அப்போதுதான் ஜெயந்தனின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. என்னுடன் உல்லாசம் அனுபவித்த ஜெயந்தன் என்னை மிகவும் பிடித்திருப்பதாக கூறினார்.

    எனது செல்போன் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு என்னுடன் ஜெயந்தன் போனில் பேசி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. என்னை காதலிப்பதாக கூறிய ஜெயந்தன் திருமணம் செய்ய விரும்பினார்.

    ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லாமலேயே இருந்தது. ஜெயந்தன் தொடர்ந்து வற்புறுத்தியதால் திருமணத்துக்கு சம்மதித்தேன். இதையடுத்து விழுப்புரம் மயிலம் கோவிலில் வைத்து 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம் இருவரும் ஒன்றாக வசித்து வந்தோம்.

    தன்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஜெயந்தன் வற்புறுத்தினார். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜெயந்தனை விட்டு பிரிந்து சென்று விட்டேன். புதுக்கோட்டையில் உள்ள சொந்த ஊருக்கு நான் சென்றுவிட்டேன்.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி ஜெயந்தன் என்னை பார்க்க வந்தார். அப்போது என்னுடன் குடும்பம் நடத்த ஏன் வர மறுக்கிறாய்? என கேட்டு தகராறு செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதையடுத்து எனக்கு தெரிந்த சங்கர் என்பவரை வரவழைத்து இருவரும் சேர்ந்து ஜெயந்தனை கொலை செய்தோம். பின்னர் கை மற்றும் கால்களை வெட்டி எடுத்து தனியாக பார்சல் செய்தோம்.

    பின்னர் 20-ந்தேதி அதிகாலை 3 மணி அளவில் பஸ் ஏறி காலை 11 மணி அளவில் கோவளத்துக்கு வந்து சேர்ந்தேன். அங்கு கடற்கரை பகுதியில் கை, கால்களை குழிதோண்டி புதைத்தேன். பின்னர் ஊருக்கு சென்றுவிட்டேன்.

    இதன்பிறகு 7 நாட்கள் கழித்து 26-ந்தேதி தலை மற்றும் வயிற்றுப்பகுதி உடல் பாகங்களை காரில் எடுத்து வந்தேன். இந்த உடல் பாகங்களை சென்னையில் உள்ள செட்டிநாடு மருத்துவமனை அருகே புதைத்தேன். இதற்கு எனக்கு தெரிந்த பூசாரி வேல்முருகன் துணையாக இருந்தார். அவர் தான் மோட்டார் சைக்கிளில் உடலை எடுத்துச்செல்ல உதவினார்.

    கொலை நடந்து 2 வாரத்துக்கு மேலாகிவிட்டதால் யாருக்கும் தெரியாது என்று நினைத்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. பரங்கிமலை உதவி கமிஷனர் அமீர் அகமது பழவந்தாங்கல் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி பாக்கியலட்சுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

    புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு சர்வசாதாரணமாக உடல் பாகங்களை பஸ் மற்றும் காரில், பாக்கியலட்சுமி எடுத்து வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரில் உடலை எடுத்து வந்தபோது வாகன சோதனை எதிலும் சிக்காமல் பாக்கியலட்சுமி நைசாக சென்னை மாநகருக்குள் ஊடுருவி உள்ளனர்.

    பாக்கியலட்சுமி விபசார அழகி என்று தெரிந்திருந்தும் அவரை திருமணம் செய்துகொண்ட ஜெயந்தனுக்கு அதன் பின்னரே அதிர்ச்சி காத்திருந்தது. 19 வயதில் மகன் இருப்பதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுவும் மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

    இளமை பருவத்தில் ஏற்பட்ட தவறான பழக்கம் வாலிபர் ஜெயந்தனின் உயிரை எடுத்திருப்பதாக கூறி போலீசார் வருத்தப்பட்டனர்.

    • பாக்கியலட்சுமி புதுக்கோட்டை சென்றிருப்பதை அறிந்து, கடந்த மாதம் 18-ந்தேதி அவரை தேடிச்சென்றார்.
    • கொடூர கொலைக்கு உடந்தையாக இருந்த சங்கர், பூசாரி வேல்முருகன் ஆகியோரை பிடிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    திருச்சி:

    விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஜெயந்தன் (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னை நங்கநல்லூரில் வசித்து வரும் தனது சகோதரி ஜெயக்கிருபா வீட்டில் தங்கி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இயங்கி வரும் வெளிநாட்டு விமான நிறுவனத்த்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இதற்கிடையே கடந்த மாதம் கடந்த 18-ந்தேதி பணியை முடித்துவிட்டு, சொந்த ஊரான விழுப்புரம் சென்றுவிட்டு வருவதாக சகோதரியிடம் கூறிச்சென்ற ஜெயந்தன் அதன்பிறகு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயக்கிருபா, சொந்த ஊருக்கும், பணி செய்யும் இடத்திலும் விசாரித்தபோது அவர் வரவில்லை என்ற தகவல் கிடைத்தது. பதட்டம் அடைந்த ஜெயக்கிருபா தம்பியை காணவில்லை என்று சென்னை பழவந்தாங்கல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெயந்தனை தேடி வந்தனர்.

    அப்போது ஜெயந்தனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அப்போது அது கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள செம்மாளப்பட்டி கிராமத்தை காட்டியது. உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் கடந்த 1-ந்தேதி புதுக்கோட்டை விரைந்தனர். சிக்னல் அடையாளம் காணப்பட்ட வீட்டில் இருந்த பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

    முதலில் அப்படியொரு நபரை தனக்கு தெரியாது என்று மறுத்த பாக்கிலட்சுமி, உளறல் பேச்சால் மாட்டிக்கொண்டார். உரிய முறையில் விசாரித்தபோது, விமான நிலைய ஊழியர் ஜெயந்தனை தான் கொலை செய்துவிட்டதாகவும், பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி சென்னை கோவளம் கடற்கரையில் புதைத்துவிட்டதாகவும் கூறியதை கேட்டு போலீசாருக்கே தலைசுற்றியது.

    அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பாக்கியலட்சுமிக்கு திருமணமாகி அவரது நடத்தை சந்தேகத்தில் கருத்து வேறுபாட்டால் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதிக்கு 19 வயதில் ஒரு மகன் இருக்கிறார். தோற்றத்தில் அழகு, மயக்கும் பேச்சு ஆகியவற்றை வீணாக்க விரும்பாத பாக்கியலட்சுமி, மகனை உறவினர் பொறுப்பில் விட்டுவிட்டு தலைநகர் சென்னை சென்றார்.

    அங்கு முதலில் தான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி வாடகைக்கு ஒரு வீட்டை பிடித்தார். பகலில் பாலியல் தொழில், இரவில் வீட்டில் தஞ்சம் என்றிருந்தபோது, விமான நிலையத்தில் பணியாற்றிய ஜெயந்தன் பாக்கியலட்சுமியை பார்த்துள்ளார். அவரது அழகில் மயங்கிய ஜெயந்தன், ஒட்டிக்கொள்வதை விட கட்டிக்கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார்.

    இதுபற்றி தனது குடும்பத்தாரிடம் கூறினால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக்கருதி, கடந்த 2020-ல் விழுப்புரம் மாவட்டம் மயிலம் முருகன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு பாக்கியலட்சுமியை மனைவியாக்கினார். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்... என்பதற்கேற்ப கணவர் உறவு வந்தாலும், பழக்கதோஷமான பாலியல் தொழிலை அவர் கைவிடவில்லை. கணவரை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு விபசார தொழிலுக்கு செல்லும் விஷயம் ஜெயந்தனுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 2021-ல் ஜெயந்தனை பிரிந்த பாக்கியலட்சுமி முழுநேர பாலியல் தொழிலாளியானார். இருந்தபோதிலும், அவரை எப்படியாவது திருத்தி தன்னுடன் குடும்பம் நடத்த வைக்க வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்ட ஜெயந்தன் அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.

    அதன்படி பாக்கியலட்சுமி புதுக்கோட்டை சென்றிருப்பதை அறிந்து, கடந்த மாதம் 18-ந்தேதி அவரை தேடிச்சென்றார். அப்போதுதான் அவருக்கு திருமணமாகி, 19 வயதில் மகன் இருப்பதே தெரிந்தது. இப்படியொரு மோசக்காரியிடம் வாழ்வை தொலைத்து விட்டோமே என்று மனம் நொந்த ஜெயந்தன் அவரை கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் ஜெயந்தனை பாக்கியலட்சுமி அடித்து கொலை செய்தார்.

    பாழாய்போன பாலியல் தொழிலை துணிந்து செய்த பாக்கியலட்சுமிக்கு கொலையை மறைப்பதும் பெரிதாக தெரியவில்லை. தனக்கு உதவியாக புதுக்கோட்டையை சேர்ந்த சங்கர் மற்றும் கோவளம் பகுதியை சேர்ந்த பூசாரி வேல்முருகன் ஆகியோரை அழைத்துக்கொண்டார். கொலையான ஜெயந்தனின் உடலை கறியை வெட்டுவது போல் முதலில் கை, கால்களை தனியாக எடுத்துக் கொண்டார்.

    பின்னர் அதனை பிளாஸ்டிக் பைகளில் வைத்து, தைரியமாக அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்து கோவளத்தை அடைந்தார். அங்குள்ள கடற்கரையில் ஒதுக்குப்புறமான இடத்தில் புதைத்தார். சில நாட்கள் தன்னை யாரேனும் நோட்டமிடுகிறார்களா என்பதை கவனித்தார்.

    யாருக்கும் சந்தேகம் வராததால் மீண்டும் புதுக்கோட்டை வந்து, மீதமிருந்த தலை மற்றும் உடல் பாகங்களை ஒரு சூட்கேசில் வைத்து அடைத்து, வாடகைக்கு ஒரு காரை பிடித்துக்கொண்டு கோவளம் சென்று அதே பகுதியில் புதைத்தார்.

    தன்னைவிட 10 வயது மூத்தவரான பாக்கியலட்சுமியை முதல் பார்வையிலேயே மனைவியாக்க விரும்பி திருமணம் செய்து கொண்டவரை சற்றும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த பாக்கியலட்சுமியின் நடவடிக்கை மற்றும் வாக்குமூலத்தால் போலீசார் உறைந்து போனார்கள்.

    இதையடுத்து அவரை கைது செய்து பழவந்தாங்கல் அழைத்து சென்ற போலீசார், மருத்துவக்குழுவினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் இன்று பாக்கியலட்சுமி புதைத்த இடத்தில் இருந்து ஜெயந்தனின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர்.

    அதேபோல் இந்த கொடூர கொலைக்கு உடந்தையாக இருந்த சங்கர், பூசாரி வேல்முருகன் ஆகியோரை பிடிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அழகு எப்போதுமே ஆபத்து என்பதற்கு சென்னை விமான நிலைய ஊழியரின் சினிமாவை மிஞ்சும் கொலை சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளதை யாரும் மறுக்கமுடியாது.

    • கடந்த மாதம் 19-ந் தேதி ஜெயந்தன் மீண்டும் என்னை பார்க்க வந்த போது தகராறு செய்தார்.
    • தனிப்படை போலீசார் பாக்கியலட்சுமியை கைது செய்து, சென்னை பழவந்தாங்கல் அழைத்து வந்தனர்.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயந்தன் (வயது 29). இவர், சென்னையை அடுத்த நங்கநல்லூர் என்.ஜி.ஓ. சாலையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி, கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    ஜெயந்தன், கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி மதியம் நங்கநல்லூரில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். செல்லும்போது, பணி முடிந்ததும், அப்படியே சொந்த ஊரான விழுப்புரம் போய்விட்டுதான் வருவேன் என்று சகோதரியிடம் கூறிவிட்டு சென்றார்.

    ஆனால் அதன்பிறகு ஜெயந்தன் மாயமானார். அவரது சொந்த ஊருக்கும் செல்லவில்லை. சகோதரி வீட்டுக்கும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரி, செல்போனில் தொடர்பு கொண்டபோது ஜெயந்தனின் செல்போன் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பழவந்தாங்கல் போலீசில் தனது தம்பி ஜெயந்தனை காணவில்லை என்று புகார் செய்தார். அதன்பேரில் பழவந்தாங்கல் போலீசார், ஜெயந்தன் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    ஜெயந்தனின் செல்போன் சிக்னல் போன்றவைகளை வைத்து ஆய்வு நடத்தியபோது கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி கிராமத்தை காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் கடந்த 1-ந் தேதி புதுக்கோட்டை சென்று பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

    பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள அந்த பெண், முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்தார். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் ஜெயந்தனை கொலை செய்து விட்டதாகவும், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்டு கடந்த மாதம் 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கட்டைப்பை, சூட்கேஸ் ஆகியவற்றில் உடல் துண்டுகளை எடுத்துச்சென்று செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரை அருகே குழிதோண்டி புதைத்து விட்டதாகவும் போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை கூறினார்.

    இந்த கொலைக்கு, தனக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த சங்கர், கோவளத்தை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறினார்.

    மேலும் போலீசாரிடம் பாக்கியலட்சுமி கூறியதாவது:-

    பாலியல் தொழிலில் ஈடுபட்டு இருந்த என்னை ஜெயந்தன், தாம்பரத்தில் உள்ள ஒரு விடுதியில் முதலில் சந்தித்தார். அதில் பழக்கம் ஏற்பட்டது. 2020-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மயிலம் கோவிலில் வைத்து என்னை அவர் திருமணம் செய்து கொண்டார். 2021-ம் ஆண்டில் நான் ஜெயந்தனை விட்டு பிரிந்து விட்டேன்.

    கடந்த மாதம் 19-ந் தேதி ஜெயந்தன் மீண்டும் என்னை பார்க்க வந்த போது தகராறு செய்தார். அதனால் தான் அவரை கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் பாக்கியலட்சுமியை கைது செய்து, சென்னை பழவந்தாங்கல் அழைத்து வந்தனர். பழவந்தாங்கல் போலீசார் பாக்கியலட்சுமியை பெண் போலீசார் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயந்தன் உடலை கோவளம் கடற்கரையில் புதைத்த இடத்தை அடையாளம் காட்டுவதாகவும் அவர் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார் பாக்கியலட்சுமி அடையாளம் காட்டும் இடத்தை பார்வையிட உள்ளனர்.

    பின்னர் வருவாய் துறையினர், மருத்துவக்குழு முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருவதாக தெரிவித்தனர்.

    திருப்போரூர் தாசில்தார், செங்கல்பட்டு அரசு மருத்துவர் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பாக்கியலட்சுமி அடையாளம் காட்டும் இடத்தில் உடலை தோண்டி எடுக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஜெயந்தன் கொலை நடந்த இடம் புதுக்கோட்டை மாவட்டம் என்பதால் அந்த மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை கைப்பற்றிய பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர்.
    • அதில் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் ஒரு பெண் சந்தேகத்துக்கிடமான வகையில் சாக்கு மூட்டைகள் வைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தார்.

    இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து அவர் வைத்து இருந்த சாக்கு மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பழைய தபால் ஆபிஸ் வீதியை சேர்ந்த வசந்தி (வயது 53) என தெரிய வந்தது.

    மேலும் அவர் ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி கர்நாடகா மாநிலம் மற்றும் பல்வேறு பகுதி களுக்கு அனுப்பு வதற்காக பஸ்சுக்காக காத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 7 மூட்டைகளில் சுமார் 100 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்யப்பபட்ட ரேசன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு பாதுகா ப்பு மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • அமீஷாகுமாரி ரீல்ஸ் செய்து பிரபலமாக உள்ளார். அவரது வீடியோவை பார்க்க தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
    • ரீல்ஸ் மூலமாக கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. எனவே ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு திருடினேன். திருடிய பணம் முழுவதையும் செலவு செய்துவிட்டேன் என்று கூறி உள்ளார்.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் புத்தர் நகரைச் சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி மாலதி. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

    கடந்த வாரம் தம்பதி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்தனர். மாலதி திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது. ஆனால் வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. வீட்டின் அருகே மறைத்து வைத்திருந்த சாவியை நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கொள்ளை நடந்த வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    இதில் ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட் அணிந்த இளம்பெண் பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் செல்வது பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள மொத்தம் 47 கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை வைத்து விசாரித்தனர். இதில் அவர், மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வரும் சமூகவலைதளத்தில் ரீல்ஸ் செய்து பிரபலமாக உள்ள அமீஷாகுமாரி (33) என்பது தெரிந்தது.

    இதைதொடர்ந்து அமீஷா குமாரியின் வீட்டுக்கு போலீசார் சென்றனர். அப்போது அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்காக ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார். நகை திருட்டு சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று போலீசார் கூறியதும் அமீஷாகுமாரி ஆவேசம் அடைந்தார்.

    நான் திருடவில்லை என்றும், சமூகவலைதளத்தில் ரீல்ஸ் செய்து மாதம் ரூ.15 ஆயிரத்துக்கும் மேலாக சம்பாதிக்கிறேன்.எனக்கு திருட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

    இதனால் விசாரணைக்கு சென்ற போலீசார் ஒரு நிமிடம் திகைத்தனர். தவறாக சந்தேகப்பட்டு விட்டோமோ என்று நினைத்தனர்.

    எனினும் கண்காணிப்பு கேமிரா காட்சியை காட்டி அமீஷாகுமாரியிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்தபோது அவர் வீடு புகுந்து நகை திருடியதை கொண்டார். இதையடுத்து அமீஷாகுமாரியை போலீசார் கைது செய்தனர்.

    திருடிய நகையை அவரது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்து இருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பணம் குறித்து கேட்ட போது அனைத்தையும் செலவு செய்து விட்டதாக தெரிவித்தார். போலீசாரிடம் அமீஷாகுமாரி கூறும்போது, ரீல்ஸ் மூலமாக கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. எனவே ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு திருடினேன். திருடிய பணம் முழுவதையும் செலவு செய்துவிட்டேன் என்று கூறி உள்ளார்.

    வீடுகளை பூட்டி செல்லும் போது சாவியை வீட்டின் அருகே மறைத்து வைத்து செல்லும் இடங்களை நோட்டமிட்டு அமீஷாகுமாரி கைவரிசை காட்டி உள்ளார். போலீசில் சிக்காமல் இருப்பதற்காக கொள்ளையடிக்க சென்ற போது தனது மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை கழற்றி வைத்து உள்ளார். எனினும் போலீசார் அப்பகுதியில் உள்ள 47 கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து அமீஷாகுமாரிவை கைது செய்தனர்.

    அமீஷாகுமாரி ரீல்ஸ் செய்து பிரபலமாக உள்ளார். அவரது வீடியோவை பார்க்க தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அவரது சமூக வலைதள பக்கத்தை ஏராளமானோர் பின் தொடர்கிறார்கள். வித விதமாக ரீல்ஸ் செய்தும் எதிர்பார்த்த பணம் கிடைக்காததால் அவர் தடம் மாறி கொள்ளையில் ஈடுபட்டு உள்ளார். அமீஷாகுமாரி ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக சாலையில் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி ஆன்லைனில் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப் பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர். அவர் இது போல் வேறு எந்தெந்த இடங்களில் கைவரிசை காட்டி உள்ளார் என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உளுந்தூர்பேட்டை அருகே மாடு திருடிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு வீட்டில் கட்டி வைப்பார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள ஆசனூரை சேர்ந்தவர் விஜய். விவசாயி. இவருக்கு சொந்தமாக மாடுகள் உள்ளது.அதனை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு வீட்டில் கட்டி வைப்பார். அதன்படி பசுமாடு ஒன்றை கட்டி வைத்து இருந்தார். அதனை அதெ பகுதியை சேர்ந்த பூமாலை (72), மடப்பட்டு நாகவள்ளி (47) செம்பானந்தல் அல்லி முத்து (57) ஆகியோர் திருடி சென்றனர்.இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடித்து எைடக்கல் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சேட்டு வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தார். பின்னர் அவர்கள் உளுந்தூர் பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • கைதான பெண்ணிடம் இருந்து குழந்தைகளிடம் திருடப்பட்ட 2 தங்க தாயத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • வேறு பகுதியில் கைவரிசை காட்டி உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே 4 நாட்களுக்கு முன் அங்கன்வாடி மையத்தில் பெண் ஒருவர் அதிகாரி போல் சென்று அங்கிருந்த 2 குழந்தைகள் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாயத்துகளை திருடி சென்றார். இது தொடர்பாக வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் அந்த பெண்ணை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், உதயகுமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை தேவாலய பஸ் நிறுத்தம் முன்பாக சந்தேகப்படும்படியாக பெண் ஒருவர் நின்றிருந்தார்.

    போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    அப்போது அந்த பெண் மதுரை மாவட்டம் சாப்டூர் கரிசல்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த சங்கர பாண்டி மகள் காவியா (வயது 29) என்பதும், 4 நாட்களுக்கு முன்பு வாடிப்பட்டி அங்கன்வாடி மையத்தில் அதிகாரி போல் சென்று குழந்தைகளிடம் நைசாக தங்க தாயத்துகளை திருடி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து குழந்தைகளிடம் திருடப்பட்ட 2 தங்க தாயத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் இதேபோன்று வேறு பகுதியில் கைவரிசை காட்டி உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    • சம்பவம் பற்றி தெரிய வந்ததும் பவானி போலீசார் விரைந்து சென்று கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர்.
    • போலீசார் மீனா தேவியை கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் 5-வது வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (26). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் பூபதி. இவரது மனைவி மீனா தேவி(27). இவர்கள் பவானி மீனாட்சி கல்யாண மண்டபம் வீதியில் வசித்து வருகின்றனர்.

    கார்த்திக்-மீனா தேவி ஆகியோர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்தனர். அப்போதே அவர்களுக்கு இடையே பழக்கம் இருந்தது. இந்நிலையில் மீனா தேவிக்கு பூபதியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கார்த்திக் அடிக்கடி பூபதியின் வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது கார்த்திக்கும் மீனா தேவிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. உறவினர் என்பதால் கார்த்திக் வந்து சென்றதை அவரது கணவர் கண்டு கொள்ளவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி கார்த்திக்-மீனாதேவி கள்ள தொடர்பை தொடர்ந்தனர்.

    இந்நிலையில் கார்த்திக்குக்கும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இது பற்றி தெரிய வந்ததும் மீனா தேவி அதிர்ச்சி அடைந்தார். அவர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைத்தார்.

    அதன்படி நேற்று மதியம் கார்த்திக் மீனா தேவி வீட்டிற்கு வந்தார். அப்போது மீனாதேவி என்னுடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டு எப்படி நீ வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டு உள்ளார். மேலும் இது தொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மீனா தேவி தனது வீட்டில் கொதித்து கொண்டு இருந்த பாமாயில் எண்ணையை கார்த்திக் மீது ஊற்றினார். இதில் அவரது கழுத்து, முகம், இடது கை தோள்பட்டையில் தீ காயம் ஏற்பட்டது. இதனால் வலி தாங்கமுடியாமல் கார்த்திக் அலறி துடித்தார்.

    பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கொதிக்கும் எண்ணையை ஊற்றியதில் கார்திக்குக்கு 15 சதவீத தீக்காயம் ஏற்பட்டது.

    சம்பவம் பற்றி தெரிய வந்ததும் பவானி போலீசார் விரைந்து சென்று கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நடந்த விவரங்களை தெரிவித்தார்.

    இதையடுத்து தலைமறைவான மீனாதேவியை போலீசார் தேடினர். அப்போது அவர் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பவானி, கருங்கல்பாளையம் போலீசார் விரைந்து சென்று மீனா தேவியை கைது செய்தனர். பின்னர் பவானி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார் அதில் அவர் கூறி இருப்பதாவது:

    நானும் கார்த்திக்கும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்தோம் அப்போதே எங்களுக்குள் பழக்கம் இருந்தது. இந்நிலையில் அவரது உறவினரான பூபதியை திருமணம் செய்த பின்பும் எங்களுக்குள் தொடர்பு இருந்தது. இதனால் நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி பழகி வந்தோம். இந்த நிலையில் திடீரென அவர் என்னுடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

    இதையடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து இது தொடர்பாக பேசினேன். அப்போது அவருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் சமையல் அறையில் கொதித்துக் கொண்டு இருந்த பாமாயில் எண்ணையை எடுத்து அவர் மீது கொட்டினேன் என்று கூறினார்.

    இதை யடுத்து போலீசார் மீனா தேவியை கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்ப டுத்தி கோவை சிறையில் அடைத்தனர். 

    ×